tag:blogger.com,1999:blog-5165985521656307434.post4349014731208826981..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: மனோரமாவின் இறுதி அஞ்சலி!Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-65815866531680389702015-11-24T05:52:34.144-08:002015-11-24T05:52:34.144-08:00மிக சிறப்பாக பல விவரங்களை அறிய முடிந்தது. மனோரமா ம...மிக சிறப்பாக பல விவரங்களை அறிய முடிந்தது. மனோரமா மட்டுமல்லாமல் மற்ற பலரை பற்றியும் அறிய முடிந்தது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-79596521405624812752015-10-22T23:34:09.913-07:002015-10-22T23:34:09.913-07:00வாங்க மோகன்ஜி, தங்களின் வருகைக்கு நன்றி. உங்களுக்க...வாங்க மோகன்ஜி, தங்களின் வருகைக்கு நன்றி. உங்களுக்கு ஏற்பட்டது மாதிரியான அனுபவங்கள் என்றைக்குமே மறக்காது. மிகப்பெரிய விஐபிக்கள் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில் நம்மிடம் -மிகமிகச் சாதாரண ஒன்று என்றபோதிலும்- ஒரு சிறிய உதவியைக் கேட்க நேருவதும் நாம் அதனைச் செய்வதும் நமக்கு வாய்த்த ஒரு அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். உங்களுக்கு அந்த அதிர்ஷ்டம் வாய்த்திருப்பது சிறப்பு.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-21357198087620188672015-10-22T22:58:38.485-07:002015-10-22T22:58:38.485-07:00அமுதவன் சார்! ஒரு நகைச்சுவை சகாப்தமாக வாழ்ந்து மறை...அமுதவன் சார்! ஒரு நகைச்சுவை சகாப்தமாக வாழ்ந்து மறைந்த மனோரமா ஆச்சிக்கு இந்தப் பதிவு ஒரு சிறந்த அஞ்சலி. ஜோதிஜியும் பல தகவல்களையும் இங்கே கருத்திட்டு பங்களித்திருக்கிறார். <br /><br />பல வருடங்களுக்கு முன்னர், சபரிமலை சந்நிதானம். தரிசனம் முடிந்து, அம்பலத்தின் கூட்டத்தில் நுழைந்து ஒரு தோளில் பையும் மறுதோளில் வாட்டர் பாட்டிலுமாய் வந்து கொண்டிருக்கிறேன். "தம்பி! கொஞ்சம் குடிக்க தண்ணி கொடுப்பா!" என்ற தொண்டைகட்டிய பெண்குரல் என்னை நிறுத்தியது. 'இருமுடியை என்னிடம் குடுங்கம்மா' என்றபடி தண்ணீர் இருந்த பிளாஸ்டிக் வாடர்பேக்கை நீட்டினேன். அண்ணாந்து வாயில் நீரை சரித்துக் கொண்டவர் மனோரமா ஆச்சி. கறுப்புப் புடவையில், வெய்யிலில் தாமிர வர்ணத்தில் மேக்கப் இல்லாத அந்த முகம் எனக்கு மறக்கவேயில்லை. <br /><br /> மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-21094578692040904202015-10-21T04:47:04.165-07:002015-10-21T04:47:04.165-07:00ஜோதிஜியை நீங்கள் சரியாகவே பாராட்டியிருக்கிறீர்கள்....ஜோதிஜியை நீங்கள் சரியாகவே பாராட்டியிருக்கிறீர்கள்.<br /><br />மனோரமா என்றில்லை, பல விஐபிக்களுக்கு ஏற்படும் இம்மாதிரியான சிக்கலுக்கு சரியான -முறைப்படியான தீர்வில்லை என்றுதான் தோன்றுகிறது. தன்னை யாருமே வந்து பார்க்கவில்லையே, கண்டுகொள்ளவில்லையே என்று வருந்தும் அவர்கள் தங்களைப் பார்க்க விரும்பும் முக்கால்வாசிப்பேரை வேண்டாம் என்று தடுத்துவிடுவார்கள் என்பது தெரியுமா உங்களுக்கு?<br />தங்களை வேறொரு 'கோணத்தில்' பார்த்த இந்த உலகம் இப்போது தாங்கள் நோய்வாய்ப்பட்டு, நலிந்து மெலிந்து உடல் சோர்ந்து பலஹீனமாய் இருக்கும் இந்த நிலையில் பார்ப்பது வேண்டாமே என்ற கோணத்தில்தான் தம்மைப் பார்க்க விரும்பும் தொண்ணூற்று ஒன்பது சதவிகிதத்தினரை வேண்டாம் என்று சொல்லி அவர்களே தடுத்துவிடுவார்கள். கூடவே, தங்களை யாரும் வந்து பார்க்கவில்லையே என்று வருந்தவும் செய்வார்கள். <br /><br />எம்ஜிஆர் படுக்கையில் இருந்தபோதெல்லாம் தம்மை யாரும் வந்து பார்ப்பதை விரும்பினவரில்லை.<br />சிவாஜிகூட வீட்டில் இருந்தபோது தாம் தனித்துவிடப்பட்டிருந்ததாக சிலரிடம் புலம்பியிருக்கிறாரே தவிர, பார்க்கவருகிறோம் என்று சொன்ன பலபேரிடம் வேண்டாம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.<br />மனோரமா இறுதி அஞ்சலியில் பேசிக்கொண்டிருந்த ஒரு பிரபலம் மனோரமாவைப் பார்க்க வருகிறேன் என்றதற்கு வரச்சொல்லிவிட்டுத் தாம் பாதி வழி சென்றிருந்தபோது அவர்களிடமிருந்துவந்த தொலைபேசியில் இப்போது வேண்டாம் இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டதால் நான் திரும்பிவிட்டேன் என்றும் நேரலையில் சொன்னார்.<br />இப்போது சோ மருத்துவமனையில் இருக்கிறார். எத்தனைப் பேரைப் பார்க்க அனுமதித்துவிடுவார்கள் என்று நினைக்கிறீர்கள்?Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-66043242392781395692015-10-20T08:03:19.374-07:002015-10-20T08:03:19.374-07:00இன்னைக்கு உங்க இடத்தை ஜோதிஜி பிடிச்சிட்டார். விறு...இன்னைக்கு உங்க இடத்தை ஜோதிஜி பிடிச்சிட்டார். விறு விருப்பான, சுவராஷ்யமான தகவல். அனைத்துக்கும் நன்று ஜோதிஜி.<br /><br />மனோரமாவுக்கு கூடிய கூட்டத்தில் அவர் உடல்நிலை நலிவுற்றபோது நேரில் போய்ப் பார்த்தார்கள் என்று பார்த்தால் வேதனையே மிஞ்சும். இதை மனோரமாவே, "என்னை யாரும் வந்து பார்க்கவில்லையே" என்று சொல்லி வருத்தப் பட்டிருக்கிறார். உசிரோடு இருக்கும் போது கண்டு கொள்ளாமல் செத்தபின் டெட் பாடிக்கு சக மாலை மரியாதை வைப்பது என்ன கலாச்சாரமோ..........<br />Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-36345295052145597672015-10-15T23:14:55.301-07:002015-10-15T23:14:55.301-07:00சார்லஸ் said...
\\சிறிய வயதில் அவர் நடித்த பல திரை...சார்லஸ் said...<br />\\சிறிய வயதில் அவர் நடித்த பல திரைப்படங்களைப் பார்த்து எவ்வளவோ வியந்திருக்கிறேன். சிரிக்க வைப்பார்; சிந்திக்கவும் வைப்பார் . காமெடியில் கலக்கவும் செய்வார்; சில நேரத்தில் கண் கலங்கவும் வைப்பார்\\<br /><br />\\கின்னஸ் புகழ் பெரும் அளவிற்கு அதிக எண்ணிக்கையில் திரைப்படங்கள் நடித்தவர். அந்த சாதனையை யாராலும் இனி தொட முடியாது. பெண் சிவாஜி என்று அவரை அழைத்தாலும் மிகையில்லை. உண்மைதான். அந்த அளவிற்கு திறமைகள் காட்டியவர்.\\<br /><br />வாங்க சார்லஸ், தங்களுடைய கருத்துக்கள்பெருமளவில் ஏற்புடையனவே. சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்து ஒரு சில இடங்களில் கண்கலங்கவும் வைக்கும் நடிப்பை அவரால் வழங்க முடிந்தது என்பது உண்மைதான். <br />என்னதான் சச்சு, ரமாபிரபா இன்னமும் ஒரு சிலர் என்று வந்தபோதும் தன்னுடைய இடத்திற்கு யாருமே வரமுடியாது என்ற நிலையில் அவரது காமெடி பெண் கதாபாத்திரத்திற்கு போட்டியே யாரும் இல்லை என்ற அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் அவரால் நடித்து சோபிக்கமுடிந்தது என்பதும் உண்மைதான். அதனாலேயே மனோரமாவைப் பெண் சிவாஜி என்று சொல்லுவதில் எனக்கு உடன்பாடில்லை. போகிறபோக்கில் சோ சொல்லிவைத்த வாசகம் இது. <br /><br />சிவாஜி இயங்கிய தளங்களும், மாற்றியமைத்த டிரெண்டுகளும், நடிப்பு நவரசத்தில் அவர் பயன்படுத்திச் சென்றிருக்கும் நுணுக்கமான யுக்திகளும், பாடலுக்கு நடிப்பதில், பின்னணி பாடுகிறவர்கள் வந்துவிட்டபிறகு அதற்கேற்ப ஒரு நடிகர் எப்படி தம்மை வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் அவர் நிரூபித்துத் தந்திருக்கும் நடைமுறைகளும், வசன உச்சரிப்பில் அவர் காட்டியிருக்கும் மேதைமைகளும், நடிப்புலகில் அவர் வகுத்துத்தந்திருக்கும் பல்வேறு இலக்கணங்களும், அவர் போட்டுச்சென்றிருக்கும் ராஜபாட்டைகளும் கொஞ்சநஞ்சமல்ல. <br /><br />அதுபற்றிய விவரங்கள் பலருக்குத் தெரியாது என்பதனால் அவர் மீது அரசியல்ரீதியான வெறுப்பை வளர்த்துக்கொண்டிருப்பவர்கள் பலரும் அவரைப் பற்றி ஏதும் அறியாமலேயே அவரை மிகவும் குறைத்து மதிப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். <br /><br />இது அந்த வகை மதிப்பீடு அல்லவென்றாலும் மனோரமாவை ஆம்பிளை சிவாஜி என்றால் அவரை என்ன சொல்லுவீர்கள்? அவரை ஒரு பொம்பளை மனோரமா என்று சொல்லும் அளவுக்கு அவரது உயரம் குறைவு என்று மட்டும் தயவுசெய்து கருதிக்கொள்ளாதீர்கள்.<br /><br /><br /><br /><br /><br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-47829680305867534662015-10-15T10:38:39.142-07:002015-10-15T10:38:39.142-07:00சார்
மனோரமா என்ற மாபெரும் ஆளுமையின் மறைவுக்குப் ...சார் <br /><br />மனோரமா என்ற மாபெரும் ஆளுமையின் மறைவுக்குப் பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உள்ள தங்களின் இந்தப் பதிவு பல நல்ல செய்திகளை உள்ளடக்கியிருக்கிறது. சிறிய வயதில் அவர் நடித்த பல திரைப்படங்களைப் பார்த்து எவ்வளவோ வியந்திருக்கிறேன். சிரிக்க வைப்பார்; சிந்திக்கவும் வைப்பார் . காமெடியில் கலக்கவும் செய்வார்; சில நேரத்தில் கண் கலங்கவும் வைப்பார்.<br /><br />ஒரு திரைப்படத்தில் ரகரம், லகரம் வாயில் வராத ஒரு பாத்திரத்தில் நடித்திருப்பார் . " ஒயு பெயிய மயை " என்று கதை சொல்லுவார் . அதாவது ' ஒரு பெரிய மலை ' என்பதைத்தான் அவ்வாறு உச்சரிப்பார். கதை கேட்பவர் மிரண்டு ஓடுவார். படம் பார்ப்பவர்கள் நிறைய பேர் வயிறு புண்ணாகி விடுமளவிற்கு சிரிப்பார்கள். நானும்தான் !<br /><br />தில்லானா மோகனாம்பாளில் சிவாஜிக்கு ஈடாக ராமநாதபுரத்து வட்டார இழுவைப் பேச்சோடு பேசும் வசனத்தை இப்போது கேட்டாலும் ரசிக்கலாமே! இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாமே !<br /><br /> கின்னஸ் புகழ் பெரும் அளவிற்கு அதிக எண்ணிக்கையில் திரைப்படங்கள் நடித்தவர். அந்த சாதனையை யாராலும் இனி தொட முடியாது. பெண் சிவாஜி என்று அவரை அழைத்தாலும் மிகையில்லை. உண்மைதான். அந்த அளவிற்கு திறமைகள் காட்டியவர். <br /><br />ஜோதிஜி அவர்கள் கூடுதலாக கொடுத்திருக்கும் அவரைப் பற்றிய செய்திகள் இன்னும் சுவையானவை. <br />சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-1791600497992535352015-10-14T08:01:50.394-07:002015-10-14T08:01:50.394-07:00தமிழ் இளங்கோ ஐயாவுக்கு நன்றி.தமிழ் இளங்கோ ஐயாவுக்கு நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-8829261452167903462015-10-14T05:39:57.927-07:002015-10-14T05:39:57.927-07:00மனோரமாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு...மனோரமாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு அருமையான கட்டுரை. பதிவுக்குள் ஒரு பதிவாக ஜோதிஜி திருப்பூர் அவர்களின் பகிர்வுகள். எல்லாமே நினைவலைகள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-57218649878380740002015-10-14T04:28:22.324-07:002015-10-14T04:28:22.324-07:00Arul Jeeva said...
\\நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி...Arul Jeeva said...<br />\\நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி விருதுகள் பலவற்றை தன் வசம் தக்கவைத்து பெண்ணினத்திற்குப் பெருமை சேர்த்த பேதை மனோரமா அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்\\<br />அருள்ஜீவா, இங்கே ஜோதிஜி தெரிவித்திருக்கும் பல தகவல்களும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ' பேதை மனோரமா' என்பதற்கு ஏற்றாற்போல்தான் இருக்கின்றன.<br /><br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-79874106448890933342015-10-14T04:24:09.876-07:002015-10-14T04:24:09.876-07:00ஜோதிஜி, மனோரமா பற்றிய பல அரிய தகவல்களை, அவ்வப்போது...ஜோதிஜி, மனோரமா பற்றிய பல அரிய தகவல்களை, அவ்வப்போது பல்வேறு சமயங்களில் பத்திரிகைகளில் படித்து ஏறக்குறைய மறந்துபோய்விட்ட பல தகவல்களை உண்மைத்தமிழன் துணையோடு இங்கே பகிர்ந்திருக்கிறீர்கள். தங்களின் சிரத்தைக்கு நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-26092064942707949092015-10-14T02:38:26.462-07:002015-10-14T02:38:26.462-07:00கலைஞர் வசனத்தை மனோரமா பேசும் பேச்சைக் கேட்டுப் பார...கலைஞர் வசனத்தை மனோரமா பேசும் பேச்சைக் கேட்டுப் பாருங்க. 70 வயதில் இந்த அளவுக்கு ஞாபக சக்தி இருக்க முடியுமா?<br /><br />https://www.youtube.com/watch?v=8L-uS9Ui-Igஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-50604257365969811782015-10-13T21:16:48.970-07:002015-10-13T21:16:48.970-07:00வீட்டுக்குப் பக்கத்திலேயே கண்ணம்மாபேட்டை சுடுகாடு ...வீட்டுக்குப் பக்கத்திலேயே கண்ணம்மாபேட்டை சுடுகாடு இருந்தாலும் மின் மயானத்தில் தன் உடலை எரிக்கக்கூடாது. பழைய முறைப்படி விறகுகளால்தான் எரிக்கப்பட வேண்டும் என்பது ஆச்சியிின் விருப்பம் என்பதால் தொலைதூரத்தில் உள்ள மயிலாப்பூர் இடுகாட்டிற்கு ஆச்சியை கொண்டு சென்றார்கள். !ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-13846494379781054402015-10-13T21:15:42.748-07:002015-10-13T21:15:42.748-07:00நடிகர் நாகேஷின் சொந்த மைத்துனர் கொலையான வழக்கில் ந...நடிகர் நாகேஷின் சொந்த மைத்துனர் கொலையான வழக்கில் நாகேஷி்ன் மனைவியை போலீஸ் கைது செய்திருந்தது. நாகேஷையும் கைது செய்யப் போவதாக வதந்திகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் கைதாகவில்லை.<br />வழக்கு விசாரணையின்போது தனக்கு ஆதரவாக சாட்சி சொல்ல மனோரமாவை அழைத்தார் நாகேஷ். மனோரமா ஏனோ மறுத்துவிட்டார். அடுத்த படத்தில் இருந்து நாகேஷ்-மனோரமா ஜோடி பிரிந்தது.. நாகேஷ் இதன் பின்பு பல்வேறு நடிகைகளும் ஜோடி போட்டு நடித்தார். அதிகமாக பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்தது..<br />கடைசியாக நாகேஷ் காலமாவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு விழா மேடையில்தான் மனோரமாவை ஆச்சி என்று சொல்லியும் பெயர் சொல்லியும் அழைத்தார். ஆச்சி மனோரமா அப்போது துளிர்த்த கண்ணீருக்கும் ஒரு விலை இருந்தது. அதுதான் அவரது பொறுமை..!ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-66212326247496502342015-10-13T21:15:16.261-07:002015-10-13T21:15:16.261-07:00ஆச்சி அதிகப் படங்களில் நடித்தமைக்கு இன்னொரு முக்கி...ஆச்சி அதிகப் படங்களில் நடித்தமைக்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. எந்தப் படத்தின் தயாரிப்பாளரிடமும் பணத்தை கறாராக வாங்க மாட்டார். அப்படி செய்யவும் அவருக்குத் தெரியாது. அவருடைய தாயார்தான் ஆரம்பக் கட்டத்தில் சம்பளம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். பாதியைக் கொடுத்துவிட்டு மீதியை கடைசி ஷூட்டிங நாளில் தருவதாகச் சொல்வார்கள். கடைசி நாளில் கண்ணில் படவே மாட்டார்கள். மனோரமாவும் ஆபீஸ் தேடிப் போய் கேட்கவும் மாட்டார். இப்படியே விட்டுக் கொடுத்த பணத்தை இன்னிக்கு எண்ணினா 1 கோடிக்கு மேல வரும்ப்பா.. என்றார் ஒரு பேட்டியில்.. முக்தா சீனிவாசன் மட்டுமே வீடு தேடி வந்து பணத்தை செட்டில் செய்வார் என்றும் சொல்லியிருந்தார்..!ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-78382456753475985442015-10-13T21:14:57.910-07:002015-10-13T21:14:57.910-07:00சின்னத்தம்பி படத்தின் ஷூட்டிங்கிற்காக கிளம்பிய கால...சின்னத்தம்பி படத்தின் ஷூட்டிங்கிற்காக கிளம்பிய காலைப் பொழுதில்தான் அவருடைய முன்னாள் கணவர் ராமநாதன் காலமான நியூஸ் அவருக்குத் தெரிந்தது. தாயின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் மகனை அழைத்துக் கொண்டு போய் கணவருக்கு கொள்ளி வைக்க வைத்துவிட்டு தனது கடமையையும் செய்து முடித்துவிட்டுத்தான் வந்தார்.<br />3 நாட்கள் கழித்து அவர் நடிக்க வந்த முதல் காட்சியே சின்னத்தம்பி படத்தில் ராதாரவி, கிராமத்து நடுவில் அவரைக் கட்டி வைத்து அவருக்கு பொட்டு வைத்து கலர் புடவை கட்டி அவமானப்படுத்தும் காட்சிதானாம்..<br />இயக்குநர் பி.வாசு சொன்ன தகவல் இது..!ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-63678294558601594952015-10-13T21:14:35.849-07:002015-10-13T21:14:35.849-07:00ஒரு குறிப்பிட்ட பத்திரிகையில் தொடர்ச்சியாக தேங்காய...ஒரு குறிப்பிட்ட பத்திரிகையில் தொடர்ச்சியாக தேங்காய் சீனிவாசனையும் ஆச்சியையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்து கொண்டேயிருந்தன. ஒரு நாள் ஷூட்டிங்கின்போது இதைப் படித்து கண் கலங்கிப் போய் நடிக்கவே தோணாமல் அமர்ந்திருந்தாராம் ஆச்சி.<br />எம்.ஜி.ஆர். இதைப் பார்த்துவிட்டு என்ன விஷயம் என்று கேட்டிருக்கிறார். ஆச்சியும் சொல்ல.. "அதை நானும் படிச்சேன்.கண்டுக்காத. இதெல்லாம் இங்க சகஜம். இதையெல்லாம் தாண்டித்தான் நாம போகணும். இல்லைன்னா நாம தொழில் செய்ய முடியாது.." என்று ஆறுதல் சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர்..<br />சொன்னதோடு இல்லாமல் ஆச்சிக்கு தெரியாமலேயே அந்த பத்திரிகையாளரை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரவழைத்து மேக்கப் ரூமில் வைத்து கும்\மியெடுத்து அனுப்பி வைத்திருக்கிறார். எம்.ஜி.ஆர்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-66652295466930090362015-10-13T21:14:13.402-07:002015-10-13T21:14:13.402-07:00ஒரு தெலுங்கு படப்பிடிப்பு.. 2 மணி நேரமாக கலர் புல்...ஒரு தெலுங்கு படப்பிடிப்பு.. 2 மணி நேரமாக கலர் புல்லாக மேக்கப் போட்டு அசத்தலாக செட்டுக்குள் நுழைந்திருக்கிறார் ஆச்சி. இயக்குநரை பார்த்து வணக்கம் சொன்னவுடன்.. "இன்னிக்கு சீன்ஸ் மாத்திட்டோம்மா.. பிளாஷ்பேக் சீன்ஸ்தான் எடுக்கப் போறோம்.. மேக்கப்பையெ்லலாம் கலைச்சிட்டு கொஞ்சம் வயசான மாதிரி வாங்க..." என்று கூலாக சொல்லிவிட்டுப் போனாராம். வேற ஆர்ட்டிஸ்ட்டா இருந்தா கத்திக் குமிச்சிருப்பாங்க. ஆச்சியோ எந்த ரியாக்ஷனையும் காட்டாமல் "ஓகே ஸார்.." என்று சொல்லி மேக்கப் அறைக்குத் திரும்பினாராம்..!ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-68461193799919626782015-10-13T21:13:48.162-07:002015-10-13T21:13:48.162-07:00"பொம்பளைங்க எல்லாம் புருஷனுக்கு முன்னாடியே சா..."பொம்பளைங்க எல்லாம் புருஷனுக்கு முன்னாடியே சாகணும்னு நினைக்காதீங்க. நமக்காவது வீட்டு வேலை செய்யத் தெரியும். சமைக்கத் தெரியும்.. நாலு வீடு வாசல்ல பழகத் தெரியும். நம்ம புருஷன்களுக்கு என்னத்த தெரியும். அதுனால கடைசிவரைக்கும் அவங்க உசிரோட இருக்குறவரைக்கும் அவங்கள பத்திரமா பார்த்துக்கணும்னு நினைங்க. நம்ம சாவு ஆம்பளைக்கு பின்னாடிதான் இருக்கணும். இதைத்தான் ஒவ்வொரு தாயும், ஒவ்வொரு மனைவியும் நினைக்கணும்.."<br />- இப்படியொரு முறை பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்து பெண்ணிய போராளிகளிடத்தில் கன்னா பின்னாவென்று 'ஓல்டு பார்ட்டி' என்று வாங்கிக் கட்டிக் கொண்டார் ஆச்சி..!ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-37244866714962295202015-10-13T21:13:27.503-07:002015-10-13T21:13:27.503-07:00ஒரு படத்தின் டப்பிங்கிற்காக டப்பிங் ஸ்டூடியோவுக்கு...ஒரு படத்தின் டப்பிங்கிற்காக டப்பிங் ஸ்டூடியோவுக்கு போன போது அங்கே இருந்த மேஜர் சுந்தர்ராஜனை சந்தித்தார். ஆச்சியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு குறிப்பிட்ட படத்தைப் பற்றி பேசிய மேஜர், "அற்புதமான படம்.. ஆனா தமிழ்ல வருமான்னே தெரியலை.. விநியோகஸ்தர்கள் யாருமே வர மாட்டேன்றாங்க.." என்று அலுத்துக் கொண்டார்.<br />ஆர்வம் கொண்ட ஆச்சி மனோரமா "அந்தப் படத்தை நான் பார்க்கணுமே.." என்று சொல்லி படத்தை பார்த்திருக்கிறார். படத்தில் லயித்துப் போன ஆச்சி, "நானே இதை வாங்கி விநியோகம் பண்றேன்..." என்று சொல்லி மேஜரின் உதவியால் படத்தை வாங்கி தமிழகம் முழுவதும் அந்தப் பட்ததை வெளியிட்டார்.<br />ஆச்சி தயாரிப்பு, விநியோகத் தொழிலில் ஈடுபட்டதில்லை. விநியோகத் தொழிலில் ஈடுபட்ட முதலும், கடைசியுமான படம் அதுதான்..<br />அந்தப் படம் "சங்கராபரணம்"ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-20978458784389224802015-10-13T21:13:05.336-07:002015-10-13T21:13:05.336-07:00ஒரு சமயம் எம்.ஜி.ஆரின் படத்தில் நடிக்கும்போது ஆச்ச...ஒரு சமயம் எம்.ஜி.ஆரின் படத்தில் நடிக்கும்போது ஆச்சி கால்ஷீட் சொதப்பல் செய்துவிட அதிலிருந்து 3 படங்களுக்கு தொடர்ச்சியாக ஆச்சிக்கு எம்.ஜி.ஆர். வாய்ப்பளிக்வில்லை.<br />தன்னை புறக்கணிக்கிறார் என்பதை தெரிந்தவுடன் ஆச்சி சோ-விடம் சொல்லி வருத்தப்பட.. சோவும், அசோகனும்தான் எம்.ஜி.ஆரிடம் வாக்குவாதம் செய்து மனோரமாவை நடிக்க வைத்தார்களாம்..<br />இந்த நன்றிக் கடனுக்காகத்தான் யார் தடுத்தும் கேளாமல் சோவின் தொடர் நாடகங்களில், அரசை கிண்டல் செய்யும் அரசியல் நாடகங்களில்கூட மனோரமா நடித்தார்.<br />மேலும் 'உண்மையே உன் விலை என்ன' திரைப்படத்திலும், 'முகமது பின் துகளக்'கிலும் அவர் நடித்ததை போல வேறு எந்த நடிகையாவது நடித்திருப்பாரா என்பது சந்தேகம்தான்..!<br />- சோவே எழுதியிருக்கும் தகவல்..!ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-26153168561124410102015-10-13T21:12:41.795-07:002015-10-13T21:12:41.795-07:00'அபூரவ சகோதரர்கள்' படத்தில் முதலில் மனோரமா...'அபூரவ சகோதரர்கள்' படத்தில் முதலில் மனோரமா நடிக்கவே இல்லை. காந்திமதிதான் அந்தக் கேரக்டரில் நடித்திருந்தார். காந்திமதியை வைத்து ராஜா கைய வைச்சா பாடலைகூட ஷூட் செய்துவிட்டார்கள். ஆனால் நடனம் மற்றும் சென்னை பாஷை டயலாக் மாடுலேஷனில் காந்திமதியின் பெர்பார்மென்ஸ் எடுபடாமல் போக இருக்கவே காந்திமதியை நீக்கிவிட்டு மனோரமாவை புக் செய்தார் கமல்ஹாசன்.<br />இதனால் தான் சாகின்றவரையிலும் மனோரமா மீது பிணக்கில்தான் இருந்தார் காந்திமதி. சின்னக்கவுண்டர் படத்தில் மனோரமாவின் கேரக்டர் காஸ்ட்யூம்ஸ் மேக்கப் பற்றி ஓவராக கிண்டல் செய்து பத்திரிகைகளில் பேட்டி கொடுத்திருந்தார் காந்திமதி.<br />வழக்கம்போல ஆச்சி கப்சிப்புதான்..!ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-43226991174254316432015-10-13T21:12:15.908-07:002015-10-13T21:12:15.908-07:001996 தேர்தலின்போது அதிமுகவில் சேர்ந்த ஆச்சி மனோரமா...1996 தேர்தலின்போது அதிமுகவில் சேர்ந்த ஆச்சி மனோரமா, அதிமுக மேடைகளில் ரஜினியை வெளுத்துக் கட்டினார். 'மெண்டல்', 'அரை லூஸு', 'கன்னடன்', 'குடிகாரன்', 'பேக்கு பய' என்றெல்லாம் விளாசி தள்ளிவிட்டார்..<br />தேர்தலில் தோல்வியடைந்து அவரவர் வேலைக்கு திரும்பிய பிறகு அருணாச்சலம் படத்தில் முதலில் பு்ககானவர் மனோரமாதான். அந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சியில் ரஜினியை சந்தித்தபோது சற்றுக் கூச்சத்துடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார்..! ஆனால் ரஜனியோ எதையும் கேட்காமலேயே போய்விட்டார்.. இதன் பின்பு யாரைப் பற்றியும் அரசியல் ரீதியாக அவர் தாக்கிப் பேசவே இல்லை..!ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-22289547397786385872015-10-13T21:11:57.730-07:002015-10-13T21:11:57.730-07:00கலைஞரின் மணிமகுடம் நாடகத்திற்காக ஒத்திகை பார்க்க க...கலைஞரின் மணிமகுடம் நாடகத்திற்காக ஒத்திகை பார்க்க கைக்குழந்தையோடு வந்திருக்கிறார் ஆச்சி. பக்கம், பக்கமான வசனங்களை கைக்குழந்தைக்கு பால் கொடுத்தபடியே ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு மனப்பாடம் செய்வாராம்.. இப்படித்தான் அவரது நாடக வாழ்க்கை அழுகையோடும், கஷ்டத்தோடும் துவங்கியிருக்கிறது..!ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-15878610259599656932015-10-13T21:11:39.012-07:002015-10-13T21:11:39.012-07:00கலைஞர் மு.கருணாநிதி கட்சிக் கூ்டடத்திற்காக வெளியூர...கலைஞர் மு.கருணாநிதி கட்சிக் கூ்டடத்திற்காக வெளியூர் போய்விட்டு சென்னை திரும்பும்போது விபத்துக்குள்ளாகி செனனை பொது மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தார்.<br />அப்போது அவரைப் பார்க்க மனோரமா ஆஸ்பத்திரிக்கு போயிருந்தார். அந்த அறையில் ராஜாத்தியம்மாளும் இருந்திருக்கிறார். மனோரமாவுக்கு ராஜாத்தியம்மாவை நன்கு தெரியும். இருவருமே நாடகங்களில் கருணாநிதியுடன் நடித்தவர்கள். கருணாநிதி அவரை திருமணம் செய்து கொண்டதும் தெரியும்.<br />சிறிது நேரத்தில் அந்த அறைக்குள் தயாளு அம்மாவும் வந்திருக்கிறார். ராஜாத்தியம்மாவை கை காட்டி "யார் இந்த அம்மா..? என்று கேட்டிருக்கிறார் தயாளு அம்மாள். வழக்கம்போல கலைஞர் மு.கருணாநிதி பதில் சொல்லாமல் இருக்க.. மனோரமா வெள்ளந்தியாக "இவங்களைத் தெரியாதா..? இவங்கதான் ராஜாத்தி.." என்று சொல்லிவிட்டு சந்தேகத்தோடு கலைஞரிடம், "என்னங்க நீங்க சொல்லலையா..?" என்றும் கேட்டு பட்டென்று போட்டு உடைத்துவிட்டாராம்..!<br />இதை கருணாநிதியே ஆச்சி மனோரமா இருந்த ஒரு மேடையில் சொன்னார்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com