tag:blogger.com,1999:blog-5165985521656307434.post4556373711198584043..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலை…….நமக்குள் எழும் கேள்விகள்Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-4887889846413137072013-03-03T11:24:22.350-08:002013-03-03T11:24:22.350-08:00அமுதவன் சார்,
விஷ்வரூப களேபரமெல்லாம் அவ்வப்போது த...அமுதவன் சார்,<br /><br />விஷ்வரூப களேபரமெல்லாம் அவ்வப்போது தலையெடுப்பது தான் ,அதெல்லாம் போயே போச்சு :-))<br /><br />தமிழக அகதிகள் முகாமில் நிலைமை மிகவும் மோசமாகவேயுள்ளது, வெளிநாட்டில் உறவினர்கள் இருந்து பணம் அனுப்பும் நிலையில் உள்ளவர்கள் பாடு பரவாயில்லை, அப்படியான வசதி இல்லாதவர்கள், அருகில் உள்ள ஊரில் சொற்ப சம்பளத்தில் தினக்கூலியாக வேலை செய்கிறார்கள் அப்படி வேலை செய்த ஒருவரிடம் பேசினேன், அதை வைத்தே சொன்னேன்.<br /><br />அவர்களிடம் பேசினால் நம்ம அரசியல்வாதிகள், தமிழக மற்றும் புலம்பெயர்ந்த மக்கள் என அனைவர் மீதுமே கடுப்பு வரும்.<br /><br /><br />வெளிநாட்டில் அடைக்கலமானவர்களுக்கு வேலை,குடியுரிமை எல்லாம் அளிக்கப்படுவது போல ஏன் இந்தியாவில் செய்யவில்லை, அதுக்குறித்து ஏன் அரசியல்வாதிகளும் குரல் கொடுப்பதில்லை?<br />---------<br /><br />ஹி...ஹி தப்பா நினைக்கப்படாது, உங்கள் அனுமதிக்கேட்காமலே ,உங்கள் பதிவில் இருந்து சிறுவன் பாலச்சந்திரன் படத்தினை எடுத்து எனது பதிவில் பயன்ப்படுத்தியுள்ளேன்,நன்றி!<br /><br />உங்களது இவ்விடுகைக்கும் சுட்டி அளித்துள்ளேன்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-1609479042959283882013-03-03T02:33:27.174-08:002013-03-03T02:33:27.174-08:00வாருங்கள் நடராஜன் தங்கள் கருத்து - ஒரே வார்த்தையில...வாருங்கள் நடராஜன் தங்கள் கருத்து - ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் 'அருமை!'Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-34388129769817018492013-03-02T08:59:02.023-08:002013-03-02T08:59:02.023-08:00மூணாவது அனானி!விடுதலைப்புலிகள் மீதான விமர்சனம் முள...மூணாவது அனானி!விடுதலைப்புலிகள் மீதான விமர்சனம் முள்ளிவாய்க்காலோடு மரணித்து விட்டது.கடந்த நான்கு ஆண்டுகளில் ராஜபக்சே அரசின் செயல்பாட்டை நோக்கும் போது சிங்கள ஆட்சிமுறையை சரியாக புரிந்து கொண்டவன் பிரபாகரன் என்றே சொல்லத் தோன்றுகிறது.<br /><br />மக்களுக்கும்,ஆட்சியாளர்களுக்குமான இடைவெளி அதிகமாகிக்கொண்டிருக்கிறது என்பதை இலங்கை மட்டுமல்ல ஏனைய உலக நிகழ்வுகளும் தெரிவிக்கின்றன.தமிழக உணர்வே மத்திய அரசால் நிராகரிக்கப்படுகிறது.இலங்கை விசயத்தில் விடுதலைப்புலிகளை ஊட்டி வளர்த்ததே இந்தியாதான்.பின் நாரயணன்,சிவசங்கர மேனன்,நிருபமா,நம்பியார் ,பிரணாப் கூட்டணியால் இலங்கையோடு சேர்ந்த போர்க்குற்றவாளியும் இந்தியாதான்.<br /><br />வெற்றியே வரலாற்றை எழுதினாலும்,விடுதலைப்புலிகளின் கடல்,வான்,நிலம் சார்ந்த ராணுவ கட்டமைப்பும்,கட்டுக்கோப்பும் வரலாற்றில் எழுதப்படும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-31907287300569459402013-03-02T08:35:27.360-08:002013-03-02T08:35:27.360-08:00இலங்கை மிக சாதுர்யமாக காய் நகர்த்துகிறது.அதற்கு உல...இலங்கை மிக சாதுர்யமாக காய் நகர்த்துகிறது.அதற்கு உலக நாடுகளின் இரட்டை வேடங்களும் துணை புரிகின்றன.<br /><br />கெலம் மெக்ராவின் காணொளி தொகுப்புக்கள் சேனல் 4ல் வெளிவருவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே இணைய தளங்களில் இங்குமங்குமாக போர்க்குற்ற சாட்சிகளாக சிதறிக்கிடந்தன.பல விவாதங்களும் நிகழ்ந்தன. ஆனால் அவற்றிற்கெல்லாம் இல்லாத தாக்கம் கெலம் மெக்ராவிற்கு கிடைத்ததற்கு முக்கிய காரணங்கள் ஒளிப்படங்களாகவும்,புகைப்படங்களாகவும் இருந்ததோடு சாட்சி சொல்ல சிலர் முன்வந்ததும் ஆவணப்படங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியதும்தான்.ஆனால் இவற்றையெல்லாம் மார்பிங்க் என இலங்கைக்கான இந்திய தூதர் கரியவம்சம் மூலமூம்,சுப்ரமணியன் சுவாமி என்ற மீடியா அடியாளிடமும் இதனை விட மனித உரிமைக் குழுவில் இலங்கை ராணுவம் குற்றமே செய்யவில்லையென்பதோடு சேனல் 4 காணொளியை அனுமதித்தற்காக நவீன் பிள்ளை மீது சேற்றை வாரி இறைக்கும் உரிமையை state actors என்று சொல்லப்படும் ஆட்சியாளர்களின் அல்லக்கைகளால் உரக்க சத்தம் போட முடிகின்றது.<br /><br />இலங்கைப் பிரச்சினை உலகமயமாக்கப் பட்டும்,போர்க்கால குற்றங்கள் தெளிவாகப் புரிந்தாலும் கூட நாடுகளின் சுயநலப் போட்டிகளில் ஈழப்பிரச்சினைக்கான அடிப்படைக் காரணங்கள் இன்னும் கிடப்பில்தான் இருக்கிறது.<br /><br />விடுதலைப்புலிகளின் தோல்விக்குப் பின்பான ராணுவம் சார்ந்த குண்டுவெடிப்புக்கள் இப்பொழுது இல்லாமை இலங்கை அரசுக்கு ஒரு சாதகமான நிலை.போர்க்கால பிரச்சினைகளை சமாளிப்பதற்கு சில காலம் எடுத்துக்கொள்ளுமென்று கருதினாலும் கூட இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகள்,தமிழர்களுக்கு எதிரான சூழலகள்,மொழி,கோயில்கள் அழிப்பு,ஜனநாயகத்தின் பெயரில் ராணுவமயமாக்கல் போன்றவை மகிந்த சிந்தனையை நன்கு தெளிவு படுத்துகிறது.ஈழத்தமிழர்கள் இன்னும் சில காலம் பாரம் சுமக்க வேண்டி வரலாம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-55127069010861490782013-03-02T08:14:17.458-08:002013-03-02T08:14:17.458-08:00நாம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு காலகட்...நாம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் சில தீர்மானங்களை துணிந்து எடுத்தாக வேண்டுமென்ற சூழலில் தள்ளப்படுகிறோம்.எடுக்கும் முடிவுகளுக்கேற்ப வாழ்க்கையின் தொடர்ச்சி நிகழும்.<br /><br />கலைஞரின் முந்தைய ஆட்சிகாலத்தின் ஈழ நிலைப்பாடு பற்றி ஏகமாய் விமர்சித்தாகி விட்டது.உங்கள் பதிவில் கலைஞர் குறித்த சாரம் பழைய காயங்களை மீண்டும் ரணமாக்கவே செய்கிறது.<br /><br />துவக்கத்தில் சொன்ன சில முடிவுகளை ஒட்டி எதிர்கால விளைவுகள் என்பதற்கு சமீப உதாரணமாக சல்மான் குர்ஷித் சொல்லும் தமிழக உணர்வுகள் ஒரு பக்கமும்,இலங்கை நட்பு நாடு என்ற இருதலைக்கொள்ளி நிலைப்பாடு மாதிரி கலைஞரின் ஆட்சிக்காலத்தில் சட்டம்,ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பதவி பொறுப்பு ஒரு புறமும்,ஈழப்போரை மழுங்க செய்வது எப்படியென்ற நிலையில் முத்துக்குமார் மரணம்,நீதிமன்ற வழக்கறிஞர்கள்,காவல்துறை கைகலப்புக்கள் எப்படி கையாளப்பட்டன என்பதோடு இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாடே தமிழக நிலைப்பாடும் என்று வாக்குமூலம் தந்தார்.எதிர்கட்சிகள் குரல் எழுப்புவதற்கும்,ஆளும் கட்சி குரல் கொடுப்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் கவிதை எழுதிய உணர்வுக்கு ஈழப்போரின் முழு வடிவமும் தெரியாமல் போனதற்கு ஜாபர் சேட் போன்றவர்களும் கூட காரணமாக இருந்திருக்கலாம் அல்லது தமிழக ஆட்சி பரிபாலனம்,குடும்பம்,பாராட்டு விழா மயக்கம்,வைரமுத்து போன்ற ஜால்ராக்களின் சங்கொலி போன்றவைகளும் கூட காரணமாக இருக்கலாம்.<br /><br />எதிர்க்கட்சியினர் ராஜினாமா செய்கிறார்களோ இல்லையோ இந்திய பாரளுமன்ற நிகழ்வுகளை திருப்பி போடும் சக்தி தி.மு.கவுக்கு இருந்தது.ஆனால் அதற்கு குறுக்கே 2ஜி நின்றது பின்புதானே வெளிச்சமானது.<br /><br />இவ்வளவுக்கும் பிறகும் டேசோ ஏதாவது மாற்றங்களை கொண்டு வருமா என்ற நினைப்பும் இன்னும் ஊர்,உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது.டெசோ தும்பை விட்டு வாலைப்பிடித்த கதைக்கு சிறந்த உதாரணம்.<br /><br />தமிழகத்தில் தி.மு.க,அ.தி.மு.க விற்கு மாற்றாக யாராவது வருவார்களா என்ற நினைப்பில் சீமான் குரல் கொடுக்கிறாரே என்ற நினைப்பில் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போன்றது மாதிரிதான் அறிக்கைகள் வெளியிடுகிறார்.வை.கோ தேர்தல் நேரத்து சமரசங்களால் தோற்றுப்போனார்.நெடுமாறனுக்கு மாஸ் அப்பீல் போதாது.திருமா தி.மு.க அகதியாகி விட்டார்.ராமதாஸ் லட்சணம்தான் தமிழகத்திலே நடமாட முடியாத படி இருக்கிறதே.ஈழப்பிரச்சினை தமிழகத்தில் அரசியல் சுயநலங்களாகப் போய் விட்டது ஒரு சோகம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-21766630699793291882013-03-01T17:47:12.045-08:002013-03-01T17:47:12.045-08:00ஆமாம் அருண். இந்த நிலைமைக் கொஞ்சமாவது மாறக்கூடாதா ...ஆமாம் அருண். இந்த நிலைமைக் கொஞ்சமாவது மாறக்கூடாதா என்ற ஆதங்கமும்கூட.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-28449405829255512182013-03-01T10:55:11.833-08:002013-03-01T10:55:11.833-08:00Amuthavan sir it is clear statement about tamilnad...Amuthavan sir it is clear statement about tamilnadu politiciansAnonymoushttps://www.blogger.com/profile/05590298797593516491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-75247902966638815932013-02-26T07:12:14.659-08:002013-02-26T07:12:14.659-08:00இல்லை பாலெனோ, என்னுடைய மையப்பிரச்சினை என்பது ஒரு க...இல்லை பாலெனோ, என்னுடைய மையப்பிரச்சினை என்பது ஒரு கொடுங்கோல் அரசு நீண்ட நெடிய காலமாக ஒரு இனத்துக்கு உரிய உரிமைகளைக் கொடுக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை அழித்துக்கொண்டு வந்து பிறகு அவர்களை ஒரே இடத்தில் சேர்த்துவைத்து கொத்துக்குண்டுகளையும், நச்சுக்குண்டுகளையும் போட்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களைக் குற்றுயிரும் குலை உயிருமாகக் கொன்று அழித்தது என்பதுதான்.<br />இந்தக் கொடுங்கோலர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடியவர்தானே பிரபாகரன்?<br />அவருடைய நீண்ட நெடிய போராட்டத்தில் சில தவறுகள் நடைபெற்றிருக்கலாம். அந்தத் தவறுகள் ஒரு பாரிய இன அழிப்பை நியாயப்படுத்திவிட முடியாது.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-47953512075019546292013-02-26T03:25:36.074-08:002013-02-26T03:25:36.074-08:00இலங்கையில் தமிழ் பாலகன்கள், முஸ்லிம் பாலகன்கள், சி...இலங்கையில் தமிழ் பாலகன்கள், முஸ்லிம் பாலகன்கள், சிங்கள பாலகன்கள் பிரபாகரனால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.பிரபாகரன் கொன்றாலும் கொலை தான். உங்களது பிரச்சனை பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டுவிட்டார் என்பது.balenohttps://www.blogger.com/profile/06426213406131886126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-39213529891793482682013-02-25T18:51:34.684-08:002013-02-25T18:51:34.684-08:00அனானிமஸ் இந்த ஒரு கோணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு வ...அனானிமஸ் இந்த ஒரு கோணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு விடுதலைப்புலிகளையும் அதன் தலைமையையும் குறை கூறிப் புறந்தள்ளப் பார்ப்பது ஏற்புடையதன்று.<br />தினசரி அறிக்கைகள் கொடுத்துக்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தும் சாதாரண சிறிய கட்சித்தலைவர்களே ஆயிரம் விஷயங்களில் முரண்படுகிறார்கள்.தவறான முடிவுகள் எடுக்கிறார்கள். <br /><br />ஒரு நாட்டின் கொடுங்கோலாண்மைக்கும் வெறியாட்டத்திற்கும் எதிராக ஆயுதம் தூக்கிய போராளிகளின் நெடிய வரலாற்றில் ஓரிரண்டு தவறுகள் இருக்கக்கூடுமே தவிர பாதையே தவறு; செய்ததெல்லாம் தவறு அவர்களின் தவறினால்தான் இத்தனைப் பெரிய பேரழிவு நடைபெற்றது என்றெல்லாம் சொல்ல நான் தயாரில்லை.<br /><br />உலகின் பல நாடுகள் தீவிரவாதத்திற்கு எதிராகத் திரளவேண்டும் என்ற சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப எடுத்த முடிவுகளுக்குப் பலியாகிப்போனது ஈழத்தமிழ் சமூகம். <br /><br />விடுதலைப்போரின் அத்தனை முயற்சிகளும் ஒன்றுமில்லாமல் போய்விட்டது காலத்தின் கோலம்தான். அதற்கான மொத்தப்பழியும் அவர்கள்மீது மட்டுமே போடப்படக்கூடாது.<br /><br />இந்தப்போரில் பிரபாகரன் மட்டும் வெற்றிபெற்று விட்டிருந்தால் அப்போது இந்தப் பேச்சுக்களெல்லாம் வந்தே இருக்காது.<br /><br />தரைப்படை, விமானப்படை,கப்பற்படை என்றெல்லாம் நிர்மாணித்துக்கொண்டு ஒரு விடுதலைப்போரைத் துவக்கிய இயக்கம் உலகிலேயே புலிகள் மட்டும்தான் என்றே நினைக்கிறேன். இப்படியொரு கட்டமைப்புடன் உலகின் பார்வையைத் தன்பக்கம் திருப்பி வைத்துக்கொண்டு ஒரு நாட்டுக்கு எதிராகப் போரிடுவது என்பது ஒன்றும் சாதாரணமானது அல்ல. இப்படியொரு தலைமை வேறெந்த நாட்டிலாவது இருக்கமுடியுமா என்பதும் சந்தேகத்துக்குரியதுதான்.<br /><br />(ஒரு நான்கு பேரைச் சேர்த்துக்கொண்டு சமூகநற்பணி மன்றம் என்பதுபோல் ஒரு மன்றத்தைத் துவக்கி நடத்திப்பாருங்கள்.அதில் வரும் பிரச்சினைகளையும் உடன் இருப்பவர்கள்தரும் தொந்தரவுகளையும் சுற்றுப்புறமுள்ளவர்கள் தரும் தொந்தரவுகளையும் சுலபமாக சமாளிக்கமுடிகிறதா என்று பாருங்கள்)<br />'உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்...உன் நிலைமை கொஞ்சம் இறங்கிவிட்டால் நிழலும்கூட மிதிக்கும்' என்ற கண்ணதாசன் வரி இங்கேயும் பொருந்துகிறது. பிரபாகரன் தோற்றுவிட்டார் என்பதற்காக போகிறவருகிறவர்களெல்லாம் அவர் மீது ஒரு கல்லை எடுத்து வீசிவிட்டுப்போவது என்பதைக் கலிகாலம் என்றுதான் சொல்லவேண்டும்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-87851163007844003002013-02-25T18:18:49.759-08:002013-02-25T18:18:49.759-08:00வாருங்கள் வவ்வால் விஸ்வரூபம் களேபரங்களிலிருந்து கொ...வாருங்கள் வவ்வால் விஸ்வரூபம் களேபரங்களிலிருந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டீர்களா? எந்த விஷயத்திலும் முழு அளவில் ஊடுருவிப்பார்த்துதானே கருத்துச் சொல்வீர்கள்? இந்த விஷயத்திலும் அப்படித்தானே சொல்லியிருக்கிறீர்கள். அதனால் தங்கள் கருத்துக்களை அப்படியே ஆமோதிக்கிறேன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-22412333308176399062013-02-25T18:15:08.503-08:002013-02-25T18:15:08.503-08:00சுப்பிரமணியசாமியின் கருத்தைப் படிக்கவில்லை. ஆனால் ...சுப்பிரமணியசாமியின் கருத்தைப் படிக்கவில்லை. ஆனால் ஒன்று.ஒரு மாநில மக்களின், பெரும்பாலான மண்ணின் மைந்தர்களின் உணர்வுகளுக்கு எதிராகவே பேசிக்கொண்டு அரசியல் செய்துகொண்டு பெரிய மனிதனாகவே வலம்வந்து கொண்டிருப்பதென்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் சாத்தியம்.வேறு எந்த மாநிலத்திலும் இம்மாதிரியான பேர்வழிகளையெல்லாம் அனுமதிக்கவே மாட்டார்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-91982830623389650632013-02-25T18:10:57.956-08:002013-02-25T18:10:57.956-08:00இங்கே நிறையப்பேர் தங்கள் அடையாளங்களை மறைத்துக்கொண்...இங்கே நிறையப்பேர் தங்கள் அடையாளங்களை மறைத்துக்கொண்டுவந்துதான் கருத்துச் சொல்கிறார்கள்.கருத்துச் சொல்கிறவர்கள் பெரியமனிதர்களாகவும் இருக்கக்கூடும். இருக்கட்டும்,முதலாவது நண்பரின் விளக்கம் எப்போதும் அரசுகளிடமிருந்துவரும், அல்லது ஆட்சிபுரியும் அதிகாரிகளிடமிருந்து வரும் official version. அது அப்படித்தான் இருக்கும். அம்மாதிரியான 'ஆட்சியாளர்களின் விளக்கங்கள்'சாதாரணக் குடிமகன்களின் வாயை அடைக்கப் போதுமானவையாக இருக்கலாம். அல்லது கோர்ட்டுகளில் இம்மாதிரியான 'அரசாங்க சால்ஜாப்புகள்' மட்டுமே ஒப்புக்கொள்ளப்படுபவை என்பதனால் நீதியரசர்களின் சட்டக் கொள்கைகளுக்கு ஏற்புடையனவாக இருக்கலாம்.இம்மாதிரி அரசாங்க அறிக்கைகளுக்கும் உண்மைகளுக்கும் எப்போதுமே தொடர்பு இருப்பதில்லை.அதனால்தான் பதிவிலேயே தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.....'அந்தப் படங்களின் உண்மைத்தன்மை பற்றியும் பின்னணி பற்றியும் சாதாரணர்களான நமக்கு- குப்பனுக்கும் சுப்பனுக்கும் ராமசாமிக்கும் நாகசாமிக்கும் வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆட்சியாளர்களுக்கும், தலைவர்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியாதா?' என்று.அப்போதெல்லாம் பேசாமல் இருந்துவிட்டு இப்போது இப்படி அழுதுபுரள்கிறார்களே அல்லது புரள்வதுபோல் வேடம் போடுகிறார்களே...என்பதுதான் பதிவின் சாராம்சம்.<br />தங்கள் வருகைக்கு நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-13370778339432686622013-02-25T09:15:41.144-08:002013-02-25T09:15:41.144-08:00தவறு நான்கு வருடங்கள் அல்ல. இருபது வருடங்கள் முன்ப...தவறு நான்கு வருடங்கள் அல்ல. இருபது வருடங்கள் முன்பே ஆரம்பித்து விட்டது. தமிழினத்தின் ஒரே போராளியாய் தான் மட்டுமே இருக்க வேண்டுமென்ற எண்ணத்தில் ஆரம்பித்தது. தமிழினத்தையும் தன்னையும் பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு பிம்பத்தை உருவாக்கிய போது தொடர்ந்தது. ஒவ்வொரு போரையும் பேச்சுவார்த்தை என்ற பேரில் தங்களுக்கு பாதகமான கட்டத்தில் முடித்துக்கொண்டு ஆயுதங்கள் சேர்ந்ததும் ஆரம்பித்த போது நம்பிக்கை தகர்ந்ததில் உள்ளது.தமிழர்கள் தமிழ் இனம் என்றாலும் இந்தியன் என்ற உணர்வு கொண்டவர்கள். அவர்களிடம் இந்திய உணர்வுகெதிராக பேசி தங்களால் முடிந்தளவுக்கு அவர்களை ஒரு எதிர்மறை உணர்வை காட்ட விடாத தலைவர்களிடம் உள்ளது. எல்லாம் சேர்ந்து ஒரு இனத்தையே அழித்த பின் இன்று போங்க வைத்துள்ளது. இந்த பாலகனை கொன்றவன் வெறியன். ஆனால் அந்த வெறியை வளர்த்ததில் பங்கே இல்லை என்று புலிகள் நழுவ முடியுமா? நம் மண்ணில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களை நாம் எவ்வளவு வீறு கொண்டு கண்டிக்கிறோம். தலைவர்களை கொல்கிறேன் என்று நம் இனத்தவர்கள் கொன்ற போது எங்கே சென்றது நம் கண்டிப்பு. வெறியூட்டி வெறியூட்டி இரு இனங்களை பிரித்து விட்டோம். என்று சாமானியன் கோபம் கொள்கிறானோ அன்று எந்த போராட்டமும் வலுவிலக்கிறது. இந்த புகைபடத்தை பார்க்கும் போதெல்லாம் மனம் வலிக்கிறது. எல்லோர் மேலும் கோபம் வருகிறது. எத்தனை எத்தனை அப்பாவிகளை புதைத்து விட்டோம். போதும். இன்றும் போர் செய்வோம் என்று பேசி அவர்கள் மேல் வரக்கூடிய கொஞ்ச நஞ்ச பரிதாபத்தை கூட கெடுக்காதீர்கள். இன்றைய தேவை அவர்களுக்கு பெருமை அல்ல. நாளை வாழ்வோம் என்ற நம்பிக்கை. அதை போர் தராது. தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்கள் கோபம் தராது. கூடவே வாழப்போகும் சாதாரண சிங்கள குடிமகன்களின் மன மாற்றமே தரும். தயவுசெய்து உணருங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-197184860697179302013-02-25T03:48:12.064-08:002013-02-25T03:48:12.064-08:00அமுதவன் சார்,
என்ன இது நான் நினைச்சத அப்படியே எழு...அமுதவன் சார்,<br /><br />என்ன இது நான் நினைச்சத அப்படியே எழுதிட்டிங்க, முன்னரே பாலச்சந்திரன் சுடப்பட்டு இறந்தது ,புகைப்படம் எல்லாம் வந்த பின்னும், இப்போ ஒரு அயல்நாட்டு ஊடகம் வெளியிட்டுவிட்டது சும்மா இருந்தா நல்லா இருக்காதுனு நீலிக்கண்ணீர் வடிக்கிறாங்க, ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது அம்மையார் முதல்கொண்டு கலிஞர் வரைக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டிப்போட்டு பெர்ஃபார்மென்ஸ் கொடுக்கிறாங்க :-))<br /><br />சீமான் மாதிரி ஆளுங்களை நினைச்சா எனக்கு உண்மையிலே செம கடுப்பாகுது ,திடீர் போராளியாக்கிளம்பிட்டு , எல்லாரையும் குத்தம் சொல்லிக்கிட்டு,ஆனால் அதே வேலையை தான் அவரும் செஞ்சுகிட்டு இருக்கார், மத்தவங்களாவது பொதுவா அரசியல் இயக்கம் நடத்திக்கிட்டு ,கூட ஈழம்னும் பேசிக்கிறாங்க, ஆனால் சீமான் அரசியல் இயக்கமே ஈழப்பிரச்சினைக்காக ஆரம்பிச்சாப்போல காட்டிக்கிட்டார், ஆனால் நடைமுறையில் எதுவுமே செய்யாமல் ,அறிக்கை புலியாக இருக்கார்.<br /><br />தமிழக அரசியல்வாதிகள் எல்லாம் ,நாமும் கருத்து சொல்லவில்லை என்றால் ,பேசவில்லை என்றால் தப்பாகிடும்னு சும்மா பெயரளவுக்கு பேசுறவங்க தான்,உண்மையில் ஒரு துறும்பையும் கிள்ளி போட முடியாத கூமுட்டைகள்.<br /><br />அட ஒன்னும் வேணாம் தமிழகத்தில் இருக்கும் புலம்பெயர்ந்தோர் முகாமில் அடிப்படை வசதி கூடவா செய்து தரமுடியாது, அய்யா,அம்மானு ரெண்டு பேரும் தான் மாத்தி மாத்தி வராங்க,அப்படி இருந்தும் ஏன் அங்கே நாறிக்கிடக்கு, இதை எந்த தமிழக பத்திரிக்கையும் பேசாது.<br /><br />தமிழன் ,தமிழன்னு கூவுகிறோம்,அடிப்படையில் தமிழனை ,தமிழனே சுரண்டுகிறான் என்பதே உண்மை, முகாமில் இருந்து வேலைக்கு வருபவர் எனில் உள்ளூர் காரனை விட சம்பளம் குறைவு, இதான் நம்ம தமிழ் உணர்வு, அட தமிழ் உணர்வு கூட வேண்டாம்,அடிப்படையா ஒரு தொழிலாளி என்றாவது உரிய சம்பளம் கொடுத்தால் என்ன?<br /><br />நம்ம அரசியல்வியாதிகள் கடல் கடந்து இருக்கு அதான் ஒன்னும் செய்யலைனு சொல்லக்கூடும்,உள்நாட்டில் இருக்கும் நம்மளை போல தமிழக தமிழனை ஏய்த்தார்கள் போகட்டும்,இங்கே அடைக்கலம் தேடி வந்த ஈழத்தமிழனுக்கு என்ன செய்தார்கள்?<br /><br />ஏன் அதுக்கும் ராசபக்சே தடைப்போட்டாரா?<br /><br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-65137305277005501222013-02-25T01:49:40.827-08:002013-02-25T01:49:40.827-08:00சுப்ரமணிய சுவாமி கூறிய கருத்துதான் மிக கொடுமையானது...சுப்ரமணிய சுவாமி கூறிய கருத்துதான் மிக கொடுமையானது Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-51293622899778248032013-02-25T01:48:47.106-08:002013-02-25T01:48:47.106-08:00அன்பரே,
ஆரம்பத்தில் பாலச்சந்திரன் இறந்து கிடந்த பட...அன்பரே,<br />ஆரம்பத்தில் பாலச்சந்திரன் இறந்து கிடந்த படம் மட்டும் தான் வெளி வந்திருந்தது. அதை ஸ்ரீலங்கா அரசு தங்கள் செய்யவில்லை என்று சுலபமாக நிராகரித்து விட்டது. அவனை புலிகள் தான் கொன்றிருக்க வேண்டும் அல்லது மோதலில் இருந்திருக்க வேண்டும் என்று காரணங்கள் கூறியது.<br /><br />ஆனால் தற்போதுதான் அவன் உயிருடன் இருந்த படமும் வெளியானது. அதன் பிறகுதான் அவன் பிடிக்கப்பட்டு பின் கொல்லப்பட்ட சம்பவம் உறுதியாக்கப்பட்டது. அதனால் இந்த சம்பவம் சற்று கொந்தளிப்பை ஏற்படுத்தியது. <br />நன்றி Anonymousnoreply@blogger.com