tag:blogger.com,1999:blog-5165985521656307434.post5453145194154212901..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: சிவாஜிகணேசன் யார்? Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-10787694364986811692016-09-09T07:57:24.781-07:002016-09-09T07:57:24.781-07:00Siva said...
\\மிகை நடிப்பால் தமிழ் சினிமாவை கெடு...Siva said... <br />\\மிகை நடிப்பால் தமிழ் சினிமாவை கெடுத்தவர் சிவாஜி.இதுவும் மிகையாக எழுதப்படட கட்டுரை.\\<br /><br />சிவா, இம்மாதிரியான ஒற்றை வரி விமரிசனங்களையெல்லாம் கடந்து மிக அதிக அளவு உயரத்தில் இருப்பவர்தான் சிவாஜி. அவர் மிகை நடிப்பு நடித்தார் என்பது உண்மைதான். ஆனால் அந்த மிகை நடிப்புப் படங்கள் எதுவும் இங்கே பேசப்படுவதில்லை. அவருடைய ஆரம்பகாலப் படங்களில் ஆரம்பித்து கறுப்பு வெள்ளைப் படங்கள் காலம் வரையிலும் அவருடைய திறமையும் கவனமும் குவிந்திருந்த காலத்தில் வந்த எந்தப் படத்திலும் அவருடைய நடிப்பு மிகையானதாக இருக்கவில்லை. <br />பின்னர் இப்படியொரு குறை அவரைப் பார்த்து வைக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அவருடைய மாபெரும் நடிப்பு சாம்ராஜ்யத்தின் முன் அதெல்லாம் எடுபடவில்லை. அவரைப் பிடிக்காதவர்கள் இம்மாதிரி எதையாவது சொல்லி அவர்களை அவர்களே சொறிந்துவிட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.<br /><br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-19522475367156516872016-09-07T08:08:58.427-07:002016-09-07T08:08:58.427-07:00மிகை நடிப்பால் தமிழ் சினிமாவை கெடுத்தவர் சிவாஜி.இத...மிகை நடிப்பால் தமிழ் சினிமாவை கெடுத்தவர் சிவாஜி.இதுவும் மிகையாக எழுதப்படட கட்டுரை.Sivanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-11827851199966016252016-08-15T08:36:07.153-07:002016-08-15T08:36:07.153-07:00வவ்வாலை முதலில் அடித்து விரட்டுங்கள் நல்ல கட்டுரை ...வவ்வாலை முதலில் அடித்து விரட்டுங்கள் நல்ல கட்டுரை வாழ்த்துக்கள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-39721896497816486222016-03-13T03:24:13.407-07:002016-03-13T03:24:13.407-07:00அந்த மாபெரும் கலைஞனை இணைய நுனித்தட்டு மக்களுக்குச்...அந்த மாபெரும் கலைஞனை இணைய நுனித்தட்டு மக்களுக்குச் சொல்வதில் மிகச்சிறிய பங்காற்றி இருப்பதாகவே இன்னமும் கருதுகின்றேன். ஒன்றுமே இல்லாததைக் கொண்டாடுவதுதான் இணையத்தினர் பணி என்பதாகவே போய்கொண்டிருக்கும் உலகில் இம்மாதிரியான கருத்தாக்கங்கள் தேவைப்படுகின்றன. இந்தப் பதிவை நினைவு வைத்துக்கொண்டு பகிர்ந்த திரு தமிழ் இளங்கோ அவர்களுக்கும், மீண்டும் வந்து கருத்துப் பதிவு செய்திருக்கும் உங்களுக்கும் என் நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-64824483700881637182016-03-12T18:15:07.853-08:002016-03-12T18:15:07.853-08:00எனது மின் அஞ்சலில் உங்கள் பதிவுக்கு தமிழ் இளங்கோ அ...எனது மின் அஞ்சலில் உங்கள் பதிவுக்கு தமிழ் இளங்கோ அளித்த பின்னூட்ட தொடர்ச்சி மூலம் இந்தப் பதிவுக்கு மீண்டும் முன்பு போல காலை வேளையில் வந்து படிக்கத் தொடங்கினேன். முழுமையாக படித்து முடித்து, நாம் இந்தக் கட்டுரையை படிக்கவில்லையோ? என்று யோசித்த போது பின்னூட்டத்தில் என் கருத்தும் வந்துள்ளது குறித்து ஆச்சரியம். காரணம் மீண்டும் வந்து படித்த போது அப்படியே நேற்று எழுதியது போல நீங்க உருவாக்கிய தாக்கம் இன்றும் உருவானது. இந்த கட்டுரையை இன்னும் பத்து வருடங்கள் கழித்து வந்து படிப்பவர்களுக்கும் அதே உணர்வை உருவாக்கும். உங்கள் உழைப்பு உன்னதமானது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-28977145814463986342015-09-06T02:07:27.757-07:002015-09-06T02:07:27.757-07:00>>> அதனால்தான் சிவகுமார் காலில் இருக்கும்...>>> அதனால்தான் சிவகுமார் காலில் இருக்கும் கணையாழியை இவர் தரையில் படுத்து வாயால் கழற்ற வேண்டும் என்ற காட்சியை ‘மாற்றி எடுக்கலாம்’ என்று சொன்னபோது சிவாஜி ஒப்புக்கொள்ளவில்லை. தரையில் படுத்து நடித்தார். சிவகுமார் கால்விரல்களிலிருந்த கணையாழியைத் தமது வாயால் கழற்றினார்..<<<<br /><br />இந்தக் காட்சி படமாக்கப்பட்ட இடம் அந்த ஊர் மக்கள் காலைக் கடன்களைக் கழிக்கும் இடமாக இருந்தது என்று படித்திருக்கின்றேன்.. <br /><br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-57480917753431224022015-02-23T09:28:03.644-08:002015-02-23T09:28:03.644-08:00வண்ணப்படங்களில் எனக்குத் தெரிந்து அதிகம் பிரபலமாகா...வண்ணப்படங்களில் எனக்குத் தெரிந்து அதிகம் பிரபலமாகாத துணை, சாதனை போன்ற படங்கள் நன்றாக இருக்கும். அதுவே திரிசூலம் - பார்க்கவே முடியாது. அதேபோல கொளுத்தும் மத்தியான வெயிலில் கோட்டு, சூட்டு சகிதம் பார்க்கில கே.ஆர்.விஜயாவோடு டூயட் பாடும் படங்களும். பொதுவிலேயே சிவாஜி-கே.ஆர்.வி. படங்கள் என்றாலே தாங்க முடியாத அளவுக்கு செண்டிமென்ட்டல் மெலோடிராமா, ஓவர் ஆக்டிங் என்றுதான் இருக்கும். <br /><br />வியட்நாம் வீடு படத்தை சந்தானம் லொல்லு சபாவில் சூப்பராகக் கலாய்த்திருப்பார். ('எனக்கு ரிடயர்மெண்ட் கொடுத்து அனுப்பிட்டாண்டி' என்று சிவாஜி அழுதுகொண்டே சொல்ல, 'யோவ் பின்ன என்ன 58 வயசில அப்பாயிண்ட்மென்டா கொடுப்பான்?' என்ற வரி கலாய்ப்புக்குச் சொல்லப்பட்டதாக இருந்தாலும் அந்தப் படத்தின் சிக்கலை சரியாகவே படம் பிடித்துக் காட்டுகிறது.)<br /><br />கௌரவம்-- வக்கீலாக (பெயர் ரஜினிகாந்த்!) வந்து, ஒரு கேசில் தோற்றவுடன் செத்துப்போவாரே அதுதானே. வக்கீல் என்றால் வழக்குகள் வெற்றி, தோல்வி இரண்டையும் ஏற்றுக்கொள்வதுதான் புரஃபஷனலிஸம். தோல்வி என்றதும் செத்துப்போவது, இதற்கு பரிதாபப்பட்ட கவரிமானை (இந்தக் கற்பனையை உருவாக்கிந்து யார்) இழுப்பது ரசிக்கிற விஷயமே அல்ல. <br /><br />ஸ்ரீதேவியோடு நடித்த சந்திப்பு எல்லாம் அவர் தவிர்த்திருக்க வேண்டிய படம். <br /><br />சிவாஜியைப் பற்றி எழுதுபவர்கள் ஒன்று ஒரேயடியாக ஏற்றுகிறார்கள்; அவர் தலைமுடி கூட நடிக்கும் என்று சொல்லி மிரட்டுகிறார்கள். அல்லது இன்னொரு தரப்பில் முற்றிலும் நிராகரிக்கிறார்கள். அவருடைய படங்களில் இன்றைய நமது உலக, இந்திய படங்களை எளிதில் பார்க்க முடிகிற காலகட்டத்தின் புரிதல்களோடு பார்க்கும்போது சிலாகிக்கக்கூடிய படங்கள் எவை, சிவாஜிக்குப் பெருமை சேர்க்க இயலாத படங்கள் எவை என்று நடுநிலையோடு யாராவது எழுதினால் இன்றைய இளைஞர்களுக்கு அவரை எங்கிருந்து பார்க்க ஆரம்பிப்பது என்ற அறிமுகம் கிடைக்கும். அது இல்லாத நிலையில் 'வசனம் பேசியே கொல்லுவார்' என்ற ஒற்றை வரி பிம்பத்தோடு அவர் வளர்ந்துவரும் தலைமுறையால் நிராகரிக்கப்படுவது அவருக்கு இழைக்கப்படும் அநீதி.<br /><br />சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-89663798367283920932014-07-24T04:27:53.590-07:002014-07-24T04:27:53.590-07:00அமுதவன் சார்,
நன்றி!
//அதை ஒரு விளையாட்டு வீரனின...அமுதவன் சார்,<br /><br />நன்றி!<br /><br />//அதை ஒரு விளையாட்டு வீரனின் மற்றொமொரு சிறப்பாக ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் எனக்கிருந்தது. //<br /><br />பிரமாதம்!!!<br /><br />இசைவான கருத்தெனில் ஏற்பதும் எதிரான கருத்தெனில் இகழ்வதும் "பொதுசன மனப்பக்குவம்" என்பதை உணரும் மனப்பக்குவம் எனக்கும் வாய்க்கப்பெற்றிருக்கு :-))<br /><br />#//சிவாஜி பற்றிய பல சிறப்புக்கள் எல்லாருக்கும் தெரியும். ஆனால் பலவற்றை எப்படி வெளியே எடுத்துதச் சொல்வது என்பது பலருக்குத் தெரியாது. அதை நான் இங்கே இந்தக் கட்டுரையில் செய்திருப்பதாக நினைக்கிறேன்.//<br /><br />ராசா ரசிகர்கள் செய்வதற்கும் தாங்கள் செய்வதற்கும் பெரிதும் வித்தியாசமில்லை, அவர்களும் , ராசாவுக்கு முன்னரும் சரி பின்னரும் சரி இசையமைப்பாளர்களே இல்லை, அவர் தமிழ் நாட்டில் பொறந்தது தமிழ்நாட்டின் அதிஷ்டம், அவரு மட்டும் வெளிநாட்டில் பொறந்திருந்தால் கிடைக்கும் மரியாதையே வேற என நினைத்து வாழ்கிறார்கள், அங்கணமே தாங்களும் ,ஆனால் உங்கள் ஆதர்சம் சிவாசி அவர்கள், அவ்வளவு தான் வித்தியாசம்!!!<br /><br />என்னைப்பொறுத்த வரையில் நானறிந்த பொதுவான அளவுகோள்களின் அடிப்படையில் அணுகுகிறேன் ,எனவே வார்த்தைக்கு வார்த்தை விவாதம் செய்ய எனக்கும் விருப்பமில்லை, ஆனால் சொல்லாமல் போய்விட்டால் , இப்படி ஒரு கருத்துள்ளது என யாரும் அறியாமல் போய்விட வாய்ப்புள்ளது என்பதாலே பின்னூட்டமாக எனதுக்கருத்தினை பதிவு செய்து வைத்தேன் , வாய்ப்புக்கு நன்றியும் ,வணக்கங்களும்!<br /><br />மீண்டும் சந்திப்போம்,சிந்திப்போம்!!!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-21815044854650990392014-07-23T22:06:53.684-07:002014-07-23T22:06:53.684-07:00வவ்வால் விடாமல் வந்து வாதம் புரிகிறீர்கள்.
இதற்க...வவ்வால் விடாமல் வந்து வாதம் புரிகிறீர்கள். <br /><br />இதற்கு பதில் சொன்னாலும் திரும்ப வந்து பேசுவீர்கள். <br /><br />அதற்கு பதில் சொல்லியபோதும் இன்னொரு வாதத்துடன் திரும்ப வருவீர்கள். <br /><br />இது வார்த்தைக்கு வார்த்தை அக்கப்போர் புரியும் விதண்டாவாதங்களுக்கான கட்டுரை அல்லவென்றே நினைக்கிறேன். <br /><br />இதன் தாத்பர்யம் புரிகிறவர்களுக்கு நான் சொல்லியுள்ள வாதங்கள் புரியும். <br />சிவாஜி பற்றி இங்கே சொல்லியுள்ள வாதங்கள் எல்லாம் பலருடைய பல ஆண்டுக்கால நேர்மையான மனக்குமுறல்கள்தாம். <br /><br />சிவாஜி பற்றிய பல சிறப்புக்கள் எல்லாருக்கும் தெரியும். ஆனால் பலவற்றை எப்படி வெளியே எடுத்துதச் சொல்வது என்பது பலருக்குத் தெரியாது. அதை நான் இங்கே இந்தக் கட்டுரையில் செய்திருப்பதாக நினைக்கிறேன்.<br /><br />சென்ற கால்பந்து பதிவின்போது மாரடோனாவைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அவர் எப்படி விளையாடுவார் என்பதை நான் கவனித்ததைச் சொன்னேன். உங்கள் பதிலில் அவருடைய இன்னொரு சிற்றபம்சம் ஒன்றை நீங்கள் சொல்லியிருந்தீர்கள். அதை ஒரு விளையாட்டு வீரனின் மற்றொமொரு சிறப்பாக ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் எனக்கிருந்தது. சிவாஜி 'வாயசைப்பது' என்பது திரையுலகினரால் இன்னமும் வியப்புடன் பார்க்கப்படும் ஒரு அசாத்தியத் திறமை. உடனே இதெல்லாமா ஒரு சிறப்பு என்பதுபோல் கேலிபேச ஆரம்பிக்கிறீர்கள்.<br /> <br />தொடர்ந்து சிவாசி என்றே எழுதுகிறீர்கள்.........ஆகவே இதற்கெல்லாம் பதில் சொல்வது தேவையில்லை என்றே கருதுகிறேன். <br />நாம் இன்னொரு பதிவில் சந்திப்போம்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-66814085591319532082014-07-23T11:28:45.623-07:002014-07-23T11:28:45.623-07:00விட்டுப்போனது,
கண்ணதாசனின் படைப்புகள் அரசுடமையாக்...விட்டுப்போனது,<br /><br />கண்ணதாசனின் படைப்புகள் அரசுடமையாக்குவதாக அறிவித்தார் கலைஞர் ,அதனை எதிர்த்து நீக்க வச்சார் கண்ணதாசன் மகனும் கண்ணதாசன் பதிப்பக உரிமையாளருமான "காந்தி கண்ணதாசன். அரசுடமை ஆக்கினால் அந்நூலை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம், மேலும் விலை குறையும் எனவே பலரும் படிக்கும் வாய்ப்பு உருவாகும், ஆனால் புத்தகங்கள் மூலம் கிடைக்கும் ராயல்டி போய்விடுமே என விட்டுக்கொடுக்கவில்லை, அப்படி இருக்கும் போது அரசு நல்லா கவனிக்கலைனு வருத்தம் வேறா -))<br /><br />படைப்பு மக்களுக்கு போய் சேர கூட விரும்பாதவர்களுக்கு அரசின் மரியாதை மட்டும் அதிகம் தேவையா என்ன?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-24725830612244360862014-07-23T11:23:08.094-07:002014-07-23T11:23:08.094-07:00தொடச்சி...
# //"உங்கள் ஊரில் அகிலனை இவ்வளவுத...தொடச்சி...<br /><br /># //"உங்கள் ஊரில் அகிலனை இவ்வளவுதான் மதிப்பீங்களா?" என்று ஒருமுறை கேட்டார் தகழி.//<br /><br />அகிலனின் எழுத்தெல்லாம் எழுத்தா என செமோ கேலி செய்கிறாரே அப்போலாம் யார் கண்ணுக்கும் தெரியாம போயிடுதே அவ்வ்!<br /><br />அகிலனுக்கு ஞான பீட விருது கொடுக்கப்பட்டுள்ளது, இன்றளவும் மதிக்கப்படுகிறார், ஊருக்கு ஊர் சிலை வைக்க மறந்துட்டாங்க அதுக்குனு இப்படியா அவ்வ்!<br /><br /># //கர்நாடகத்தில் இன்னமும் பெரிய எழுத்தாளர்களோ, கவிஞர்களோ ஏதாவது பொதுவிஷயம் பற்றி அறிக்கைகள் கொடுக்கும்போது//<br /><br />அவர்கள் யாரும் அரசியல் சாயம் பூசிக்கொள்வதில்லை ,எனவே கருத்துக்கு மதிப்பு கிடைக்குது!<br /><br />நம்ம ஊர் எழுத்தாளர்கள் யாரும் மக்கள் நலனுக்காக வாயே திறப்பதில்லையே அது ஏன்?<br /><br />முதலில் அவர்கள் மக்களுக்குக்கா வாய தொறக்கட்டுமே, அப்புறமா பேசிக்கலாம்.<br /><br />#//கண்ணதாசனை இலக்கியக்கூட்டங்களில் ஒரு மனிதனாகக்கூட பல பேர் நினைப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்தானே. நாற்பது வருடங்களாக இலக்கியப் பேச்சாளர்கள் திருவள்ளுவரிலிருந்து ஆரம்பித்து சங்க இலக்கியம் சிலப்பதிகாரம் என்று வந்து பாரதி பாரதிதாசனோடு நின்றுவிடுகிறார்கள் என்பதைத் திரும்பத் திரும்ப எழுதியும் பேசியும் வருகிறேன் நான்................... //<br /><br />சினிமாவுக்கு பாட்டெழுதினார் என்பதாலே இலக்கிய கூட்டங்களில் சிலாகிச்சு பேசியாகணுமா?<br /><br />இங்குள்ள இலக்கிய கூட்டங்கள் என்பது குழு வாரியானது , பிரமிளை புகழும் இடத்தில் , சு.ராவை கழுவி ஊத்துவார்கள், இப்படியாக மவ்னி,ஆத்மநாம், க.நா.சு, குஅழகிரிசாமி, புதுமைப்பித்தன், வண்ண நிலவன், வண்ணதாசன், அசோகமித்திரன், பிரபஞ்சன், ஜெயகாந்தன் என தனி அணிகள் லாவாணிப்பாடும் கூட்டமே இருக்கு, இதுக்குலாம் பொதுவான சட்டதிட்டங்கள் இல்லை, அதெல்லாம் ஏன் செய்யலைனு நாம கேட்கப்படாது, கேட்க உரிமையும் இல்லை, கண்ணதாசனே சிறந்த கவிஞன் என நினைப்பவர்கள் சுயமாக இலக்கிய கூட்டம் நடத்தி பேசிக்க வேண்டியது தான் :-))<br /><br /># //சிவாஜியின் அரசியல் பிரவேச தோல்வியை வைத்து அவரைப் பற்றிப் பேசும் விவாதங்களில் பங்கேற்பதும் தேவையற்றது என்று நான் நம்புவதால் அதிலிருந்தும் விலகுகிறேன்.//<br /><br />அவரது அரசியல் பிரவேச தோல்வியை மட்டும் சொல்லவில்லை, பல்வேறூ அரசியல் நிலைப்பாடுகளையும் அதன் விளைவுகளையும் சொன்னேன், பொத்தாம் பொதுவாக நழுவுறிங்களே அவ்வ்!<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-40770009813079358902014-07-23T11:22:27.374-07:002014-07-23T11:22:27.374-07:00அமுதவன் சார்,
நன்றி!
// ஒரு கிண்டலுக்காகத்தான் ச...அமுதவன் சார்,<br /><br />நன்றி!<br /><br />// ஒரு கிண்டலுக்காகத்தான் சிவாஜியை சிவாசி என்று எழுதுகிறீர்கள் என்று புரிந்தது. <br />நீங்கள் சிவாசி என்றெழுதுவதால் அவருக்கு ஒரு மாற்றுக்குறைவு ஏற்பட்டு விடுகிறது என்று நீங்கள் நினைப்பீர்களேயானால் உங்கள் அப்பாவி மனப்பான்மையில் நான் குறுக்கிட விரும்பவில்லை.//<br /><br />எம்.சி.ஆர்னும் சொல்லியிருப்பதால் ,அதுவும் ஒரு மாற்றுக்குறைவான செயல் என சொல்லாமல் விட்டீங்களே :-))<br /><br />#//அரசியல்வாதிகளின் ஊழல் என்பதை 'கலைஞர்மீது மட்டும்' என்று பார்ப்பதை மட்டும்தான் நான் எதிர்த்தேன். இப்போதும் எதிர்க்கிறேன். இந்திய நாட்டில் ஊழல் இல்லாமல் அரசியல் நடத்தும் அரசியல்வாதி யாரையாவது ஒருவரைச் சொல்லிவிட்டு தாராளமாக நீங்கள் இந்த வாதத்தைத் தொடரலாம். //<br /><br />கலைஞர்களில் கண்டுக்கொள்ளாமல் விடப்பட்டவர்கள்( உண்மையில் அப்படியில்லை போதுமான அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது) சிவாசி ஒருவர் மட்டும் தான் என என்பதை தான் மறுத்தேன்.<br /><br />இந்தியாவை விடுங்க, தமிழக கலையுலகில் புறக்கணிக்கப்பட்ட கலைஞர் சிவாசி ஒருவர் மட்டும் தானா? எல்லாரும் நன்றாக சிறப்பிக்கப்பட்டார்கள் சிவாசியை மட்டும் புறக்கணித்தார்கள் என்பதை மெய்பித்துவிட்டு தாராளமாக உங்கள் குமுறலை தொடரலாம்.<br /><br />டி.பி.ராஜலக்ஷ்மி என்ற பழம் பெரும் நடிகை தான் தமிழின் முதல் பேசும் பட நாயகி, பின்னாளில் மிஸ்.கமலா(1936) என்ற படத்தினை இயக்கியதன் மூலம் தமிழின் முதல் பெண் இயக்குனர் என்ற பெயரும் கிடைத்தது, அது மட்டுமல்லாமல்ல் முதல் பெண் தயாரிப்பாளர், எடிட்டர் என பல சாதனைகள் படைத்தவர், அக்காலத்தில் ஹீரோக்கள் பெயருக்குலாம் முன்னதாக அவரது பெயரை போட்டுள்ளார்கள், போஸ்டரில் கூட அவரது பெயருக்கு அப்புறம் ஹீரோ பெயர் வரும், எம்சிஆர், நடித்த குலோபகாவலி படத்ததின் போஸ்டரில் கூட அவரது பெயருக்கு அடுத்து தான் எம்சிஆர் பெயர் இருக்கு, அப்படியான ஒரிஜினல் போஸ்டரை இணையத்தில் தான் பார்த்துள்ளேன்.<br /><br />1964 இல் வறுமையில் வாடி செத்துப்போனார், இன்னிக்கு எத்தினி பேருக்கு இப்படி ஒரு நடிகை கலைச்சேவை செய்து செத்துப்போனது தெரியும், அக்காலத்தில் சிவாசிக்குலாம் தெரியாமலே வறுமையில் வாடி செத்துப்போனவருக்கு "என்ன அங்கீகாரம்" கொடுக்கப்பட்டது என சிவாசி கவலைப்பட்டிருப்பாரா, இல்லை அவரது ரசிக கண்மணிகள் கவலைப்பட்டிருப்பாங்களா?<br /><br />ஏன் இதனை சொல்கிறேன் என்றால் காலம் தோறும் "புறக்கணிக்கப்பட்டவர்கள்" ஏராளம், இதில் ஓரளவு நல்ல கவனிப்பு கொடுக்கப்பட்டு செல்வாக்குடன் வாழ்ந்து மறைந்தவர்களையே சொல்லி " தமிழனுக்கு கலை உணர்வு இல்லை" ஆட்சியாளர்கள் கண்டுக்கலைனு லாவாணி பாடும் பக்தர்கள் என்ன கொடுமை சார் இது அவ்வ்!<br /><br /># //ஒரு இனத்தின், சமூகத்தின், கலையும் கலாச்சாரத்தையும் இலக்கியங்களையும் காப்பாற்ற வேண்டியதும் அரசாங்கத்தின் கடமைதான்.<br />இந்த விழுமியங்களுக்குப் பங்களிப்பவர்களைச் சிறப்பித்து கௌரவிப்பதும் அரசாங்கத்தின் கடமைதான்.'.........இது என் பதிவில் உள்ளது. இப்போதும் இந்தக் கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.//<br /><br />நானும் கலை என்பது சினிமா மட்டுமா ,முதலில் அது தமிழனின் கலையா எனக்கேட்டேன் , அதனை கவனமாக தவிர்த்து விட்டு உறுதியாக இருக்கீங்களெ :-))<br /><br />தமிழக மண்ணின் கலைகளான , தெருக்கூத்து ,வில்லுப்பாட்டு, பாவைக்கூத்து, பொய்க்கால் குதிரை போன்றவற்றை சொன்னேன் , அவர்களுக்கு கேவலம் கலைமாமணி கூட எட்டாக்கனி என ஏன் எவரும் கவலைப்படவில்லை?<br /><br />எம்.எஸ்.விக்கு இன்றளவும் ஒரு பத்மசிரி கூட இல்லை என்பதையும் குறிப்பிட்டேன் கவனிக்கவேயில்லை, நான் சொன்னவர்களை எல்லாம் ஒப்பிட்டால் ,நீங்கள் சொன்னவர்கள் "சிறப்பான கவனிப்புடன்" இருந்துள்ளது புரியும்.<br /><br /># //உங்களால் நமிதாவையும் சிவாஜியையும், அல்லது கலைஞரையும் நமிதாவையும் இணைத்து வாதிடுவது உங்களால் முடியும். அதுதான் உங்கள் நோக்கம் அல்லது கிண்டலடிக்கும் பாணி எனில் அந்த லாவணிக்கு நான் வரவேண்டாம் என்றே நினைக்கிறேன்.//<br /><br />பெண்களீன் கலைச்சேவையை அலட்சியம் செய்யும் ஆணாதிக்க போக்கு!!!<br /><br />மானாவாரியாக கண்டிக்கிறேன்!!!<br /><br /># //ஆனால் 'தொடரும்' போட்டு எழுதின முதல்வர் நீங்கள்தான் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.//<br /><br />இப்படி தொடரும் போட்டு அடிக்கடி பின்னூட்டமிடுவது வழக்கமே, நீங்க கவனிச்சு இருக்க மாட்டின்க,<br /><br /># //கன்னடத்தின் பிரபல எழுத்தாளரான ஆல்னஹள்ளி ஸ்ரீகிருஷ்ணாவும்(இவர்தான் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் மூலக்கதையான நாவலைக் கன்னடத்தில் எழுதியவர்) கவிஞர் ஆர்என் ஜெயகோபால் போன்றோரும் கேட்டிருக்கிறார்கள். இதனை அவர்கள் கோணத்தில் நின்று பார்க்கும்போதுதான் புரிந்துகொள்ளமுடியுமே தவிர, தமிழகச் சூழலில் நின்றுகொண்டு பார்த்து வியாக்கியானம் செய்யும்போது புரியாது.//<br /><br />ஆல்னஹல்லி சிரிகிருஷ்ணா மற்றும் செயகோபால் பெயரில் கர்நாடகவில் ,நகர்கள் உருவாக்கப்பட்டு ,சிலைகள் வைக்கப்பட்டுள்ளதா, அவர்களுக்கு சாகித்த அகதமி விருது கொடுக்கப்பட்டுள்ளதா விவரம் தரவும்.<br /><br />தொடரும்...வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-748307102124547542014-07-23T09:43:30.677-07:002014-07-23T09:43:30.677-07:00வணக்கம், வவ்வால் ஒரு மாமேதை, அவரை விட யாரும் கருத்...வணக்கம், வவ்வால் ஒரு மாமேதை, அவரை விட யாரும் கருத்து சொல்ல அருகதை இல்லை என்று என்னும் ஒரு அவதார புருஷன். அவரை யாரும் கடிந்து கொள்ளாதீர்கள் (மீறினால் அவரின் கோபத்திற்கு ஆளாக வேண்டும்) <br />நன்றி! அனந்தராமகிருஷ்ணன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-52932373724475733162014-07-23T09:26:24.658-07:002014-07-23T09:26:24.658-07:00வவ்வால், பின்னூட்டங்களில் அடுத்தடுத்து வந்து எழுது...வவ்வால், பின்னூட்டங்களில் அடுத்தடுத்து வந்து எழுதுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் 'தொடரும்' போட்டு எழுதின முதல்வர் நீங்கள்தான் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.<br />//அவருக்கு ஏன் உங்கள் அரசுகள் சரியான மரியாதை தரவில்லை?” என்று ஒரு சில கன்னட எழுத்தாளர்களும் கவிஞர்களும் விசாரித்திருக்கிறார்கள்.\\<br />கன்னடத்தின் பிரபல எழுத்தாளரான ஆல்னஹள்ளி ஸ்ரீகிருஷ்ணாவும்(இவர்தான் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் மூலக்கதையான நாவலைக் கன்னடத்தில் எழுதியவர்) கவிஞர் ஆர்என் ஜெயகோபால் போன்றோரும் கேட்டிருக்கிறார்கள். இதனை அவர்கள் கோணத்தில் நின்று பார்க்கும்போதுதான் புரிந்துகொள்ளமுடியுமே தவிர, தமிழகச் சூழலில் நின்றுகொண்டு பார்த்து வியாக்கியானம் செய்யும்போது புரியாது.<br />கர்நாடகத்திலும் கேரளத்திலும் வங்காளத்திலும் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் வழங்கப்படும் மரியாதையே வேறு. "உங்கள் ஊரில் அகிலனை இவ்வளவுதான் மதிப்பீங்களா?" என்று ஒருமுறை கேட்டார் தகழி.<br />கர்நாடகத்தில் இன்னமும் பெரிய எழுத்தாளர்களோ, கவிஞர்களோ ஏதாவது பொதுவிஷயம் பற்றி அறிக்கைகள் கொடுக்கும்போது இங்குள்ள முதல் அமைச்சர்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்று பதில் சொல்லி சமாதானப்படுத்திவிட்டு வருகிறார்கள்.<br />கண்ணதாசனை இலக்கியக்கூட்டங்களில் ஒரு மனிதனாகக்கூட பல பேர் நினைப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்தானே. நாற்பது வருடங்களாக இலக்கியப் பேச்சாளர்கள் திருவள்ளுவரிலிருந்து ஆரம்பித்து சங்க இலக்கியம் சிலப்பதிகாரம் என்று வந்து பாரதி பாரதிதாசனோடு நின்றுவிடுகிறார்கள் என்பதைத் திரும்பத் திரும்ப எழுதியும் பேசியும் வருகிறேன் நான்................... <br /><br />சிவாஜி வாயசைப்பு பற்றியும் வசனம் பேசுவது பற்றியும் எம்ஜிஆர் ரசிகர்கள் என்ன பேசுவார்களோ அதை மட்டுமே பேசியிருக்கிறீர்கள். உங்களுடைய 'மைண்ட் செட்' அப்படி ஆகிவிட்டபிறகு எதை பதிலாகச் சொல்லியும் பிரயோசனமில்லை.<br />ராஜ்குமார் எம்ஜிஆர் பாணியில் நடித்ததால்தான் அவருக்கு மக்கள் அபிமானம் மிகுதியாக இருந்தது என்பதும் அவரை ஒப்பிட்டாலும் எம்ஜிஆருடன்தானே ஒப்பிடவேண்டும் என்றும் நீங்கள் நினைப்பது தவறான கற்பிதம். அவர் குடும்பப் பாங்கான ரோல்களிலும் புராணப்படங்களிலும் நிறைய நடித்தவர். அவர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவரது துணைவியார் சிவாஜி பற்றியும் ராஜ்குமார் பற்றியும் என்னவெல்லாம் சொன்னார் என்பதெல்லாம் இங்கு தேவையில்லாத விஷயமாகப் போய்விடும் என்பதால் தவிர்க்கிறேன்.<br />சிவாஜியின் அரசியல் பிரவேச தோல்வியை வைத்து அவரைப் பற்றிப் பேசும் விவாதங்களில் பங்கேற்பதும் தேவையற்றது என்று நான் நம்புவதால் அதிலிருந்தும் விலகுகிறேன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-88427365381363124222014-07-23T08:41:24.479-07:002014-07-23T08:41:24.479-07:00வவ்வால் said...
\\வரலாறு முக்கியம் அய்யா, சிவாசில...வவ்வால் said... <br />\\வரலாறு முக்கியம் அய்யா, சிவாசிலாம் கேமிரா எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்கும் முன்னரே "எம்.சி.ஆர்" வெற்றிகரமான நாயகர் ஆகிட்டார், எம்சிஆருக்கு இணையாக ஒருத்தரை கொண்டு வர வேண்டும் என அக்காலத்தில் சிலர் தம் கட்டித்தான் சிவாசியை நிறுத்தினார்கள்,\\<br /><br />வாருங்கள் வவ்வால் நீங்கள் தனித்தமிழ் உணர்வு கொண்டவரென்றும் அதனால்தான் சிவாஜியை சிவாசி என்றும் எம்ஜிஆரை எம்சிஆர் என்றும் எழுதுகிறீர்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் இதே பின்னூட்டங்களில் ராஜ்குமார் என்றும், ஜெயின் வளர்ப்பு மகன் என்றும், ஹாலிவுட் என்றும் எழுதியிருப்பதைப் படித்தபின்தான் ஒரு கிண்டலுக்காகத்தான் சிவாஜியை சிவாசி என்று எழுதுகிறீர்கள் என்று புரிந்தது. <br />நீங்கள் சிவாசி என்றெழுதுவதால் அவருக்கு ஒரு மாற்றுக்குறைவு ஏற்பட்டு விடுகிறது என்று நீங்கள் நினைப்பீர்களேயானால் உங்கள் அப்பாவி மனப்பான்மையில் நான் குறுக்கிட விரும்பவில்லை.<br />மற்றபடி, சிவாஜி காமிராவைப் பார்ப்பதற்கு முன்பேயே எம்ஜிஆர் கதாநாயகர் ஆகிவிட்டார் என்பதெல்லாம் சீனியாரிடி சம்பந்தப்பட்ட, வயது சம்பந்தப்பட்ட விஷயமே தவிர திறமை சம்பந்தப்பட்ட விஷயமல்ல.<br /><br />\\பராசக்தி படத்தில் நடிப்பிசை புலவர்.k.a.ராமசாமி நடிப்பதாக அட்வான்ஸ் எல்லாம் கொடுக்கப்பட்டு அவரை தூக்கிட்டு தான் சிவாசி இடம் பெற்றார்\\ <br />இவையெல்லாம் ரொம்ப ரொம்ப சாதாரண விஷயங்கள் இல்லையா? இன்றைக்குக்கூட அஜித் நடிக்கவிருந்த படத்தில் இன்னொருவர் நடிப்பதும், சிம்பு நடிக்கவிருந்த படத்தில் தனுஷ் நடிப்பதும் ...... என்று நிறைய நாள்தவறாமல் வந்துகொண்டே இருப்பதில்லையா?<br />சிவாஜியின் தாக்கம் பெரியது என்பதால் இம்மாதிரி தகவல்கள் எல்லாம் இன்னமும் இருந்துகொண்டிருக்கின்றன.<br /><br />\\போராடி வாய்ப்பு வாங்கிக்கொடுத்து ஏ.எஸ் சாமி (எஸ்.ஏ ?) போன்றோரை எல்லாம் பின்னாளீல் சிவாசி அலைய விட்டதெல்லாம் வரலாறு :-))\\<br />இம்மாதிரியான 'செய்திகளை' எல்லாப் பிரமுகர்கள் பற்றியும் சொல்லமுடியும். நீங்கள் விரும்பும் திரைப்பட பிரமுகர்கள் லிஸ்ட் கொடுங்கள். அவர்களைக் 'கைதூக்கி விட்டவர்களை' அலைய வைத்த கதைகளை நான் சொல்கிறேன்.<br />தமக்கு வாழ்வளித்த நேஷனல் பிக்சர்ஸ் பெருமாளை ஒவ்வொரு தீபாவளிக்கும் மறக்காமல் வீடு தேடிச்சென்று அவருக்கு அன்பளிப்பு தந்து காலில் விழுந்து ஆசி வாங்கி வருவார் சிவாஜி என்பதுதானே கடைசி நாள்வரை இருந்த செய்தி. இந்த இடத்தில் இதையும் சேர்ந்தே எண்ணுவோம்.<br />தவிர இந்தக் கட்டுரை சிவாஜியின் மனிதநேயத்தையும் பண்புகளையும் சொல்லவந்த கட்டுரையும் அல்ல.<br /><br />\\பல்லாயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டு சொன்னால் கூட அதுக்காக கலைஞரை திட்டவா முடியும் என கேட்டது நீங்க தானே அவ்வ்!!!\\<br />அரசியல்வாதிகளின் ஊழல் என்பதை 'கலைஞர்மீது மட்டும்' என்று பார்ப்பதை மட்டும்தான் நான் எதிர்த்தேன். இப்போதும் எதிர்க்கிறேன். இந்திய நாட்டில் ஊழல் இல்லாமல் அரசியல் நடத்தும் அரசியல்வாதி யாரையாவது ஒருவரைச் சொல்லிவிட்டு தாராளமாக நீங்கள் இந்த வாதத்தைத் தொடரலாம். பெரிய கட்சியை நடத்தும் தலைவர்களை விடுங்கள்...நம்மூர் தெரு முனையில் நின்று கழுத்தில் பதினைந்து சவரண் செயினும் இரு கைகளிலும் மொத்தையான மோதிரங்களும் அணிந்து அரசியல் பேசும் கவுன்சிலர்களை அல்லது கவுன்சிலர்களாக வரப்போகிறவர்களை உங்களுக்கும் தெரியும்தானே! அவர்களிடம் புரளும் பணம் பற்றியும் தெரியும்தானே.<br /><br />\\கலைஞர் முதல்வராக நாட்டுக்கு ஒன்னும் செய்ய தேவையில்லை நடிகர்களுக்கு சினிமாவுக்கும் என்ன செய்தார் என்பது தான் உங்கள் தலையாய பிரச்சினையா , முடியலை அய்யா முடியல அவ்வ்!\\<br />ஒன்றும் செய்யத் தேவையில்லை என்றா சொன்னேன்?<br />'பாலங்கள்கள் கட்டுவதும், ரேஷன் வழங்குவதும், போக்குவரத்துகளை சரி செய்வதும் மட்டுமே ஒரு அரசாங்கத்தின் கடமை அல்ல.<br />ஒரு இனத்தின், சமூகத்தின், கலையும் கலாச்சாரத்தையும் இலக்கியங்களையும் காப்பாற்ற வேண்டியதும் அரசாங்கத்தின் கடமைதான்.<br />இந்த விழுமியங்களுக்குப் பங்களிப்பவர்களைச் சிறப்பித்து கௌரவிப்பதும் அரசாங்கத்தின் கடமைதான்.'.........இது என் பதிவில் உள்ளது. இப்போதும் இந்தக் கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.<br /><br />\\வருங்காலத்தில் "மானாட மயிலாட" நமிதாவுக்கு சிலை வைத்தாரா கலைஞர்னு கேட்பாங்களோ அவ்வ்!\\<br />உங்களால் நமிதாவையும் சிவாஜியையும், அல்லது கலைஞரையும் நமிதாவையும் இணைத்து வாதிடுவது உங்களால் முடியும். அதுதான் உங்கள் நோக்கம் அல்லது கிண்டலடிக்கும் பாணி எனில் அந்த லாவணிக்கு நான் வரவேண்டாம் என்றே நினைக்கிறேன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-78922532031212598012014-07-23T05:04:12.539-07:002014-07-23T05:04:12.539-07:00அமுதவன் சார்,
நன்றி!
ராஜ்குமார் அவர்களுடன் ஒப்பி...அமுதவன் சார்,<br /><br />நன்றி!<br /><br />ராஜ்குமார் அவர்களுடன் ஒப்பிட்டு அவரைப்போல ஊருக்கு ஊர் சிலை இருக்கானு கேட்கிறிங்க இது என்ன வகை லாஜிக்?<br /><br />ராஜ்குமார் , எம்சிஆர் ஃபார்முலாவில் நடித்தார் ,எனவே எளிதில் மக்கள் அபிமானத்தினை பெற்று , அதிக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார், எனவே ஒப்பிட்டாலும் எம்சிஆருடன் தானே ஒப்பிட வேண்டும்? எம்சிஆருக்கு தான் ஊருக்கு ஊர் சிலை இருக்கே!!! <br /><br />எனவே தமிழன் கலை உணர்வுடன் இல்லைனு குறைப்பட்டுக்க தேவையில்லை :-))<br /><br />இப்படி சொன்னதும் , எம்சிஆர் தமிழர் இல்லை, தமிழன் தமிழ் கலைஞரை கொண்டாடவில்லைனு சொல்லுவீங்களே அவ்வ்!<br /><br />ராஜ்குமார் கூடத்தான் கனடர் இல்லை, அவர் தமிழர் , அவர் மனைவி கனடம், ஆனாலும் கர்நாடகாவில் கொண்டாடுகின்றனர்!!!<br />(ராஜ்குமார் கடத்தப்பட்டப்போது பல பத்திரிக்கைகளும் ,அவர் தமிழ் என்றே எழுதின, அதை வைத்து சொல்கிறேன்)<br /><br />அப்படியே பார்த்தாலும் சினிமா ஒன்று தான் கலையா, வேறு கலைகளே இல்லையா? அவற்றை எல்லாம் கண்டுக்க கூட வெகுஜனம் தயாரில்லை, சினிமாவுக்கு நல்ல கவனிப்பும், வருமானமும் எப்பவும் இருக்கு, சோத்துக்கே வழியில்லாமல் செத்து மடிந்த நாடக , பொம்மலாட்ட, பாவைக்கூத்து, பொய்க்கால் குதிரை, வில்லுப்பாட்டு கலைஞர்களின் பெயர்கள் கூட தமிழ்நாட்டில் யாருக்கும் தெரிவதில்லை, தமிழக கலைகள் என்றால் இவை போன்றவை தான் சினிமா அல்ல, அது ஃபிரஞ்ச் கலை :-))<br /><br />#<br />சிவாசி மைக்ரோ லெவல் சப்ஜெக்ட்களில் அதிகம் நடிச்சார், எனவே குடும்பத்தினரை மட்டும் அதிகம் ஈர்த்தது, வெகுஜனம் அனைவரையும் ஈர்க்கும் வகையில் மேக்ரோ லெவல் சப்ஜெக்ட்களில் எம்சிஆர் நடித்தார் எனவே ஆட்சியையே மக்கள் தூக்கிக்கொடுத்தனர். எனவே சினிமா என்ற கலையை தமிழக மக்கள் வெறியோடு ஆதரித்து தான் இருக்கிறார்கள், இன்னமும் ஆதரிக்கிறார்கள், அடுத்த முதல்வரை கூட சினிமா கொட்டாயில தான் தேடிக்கிட்டு இருக்கான் தமிழன் :-))<br /><br />ஆனால் நீங்கள் என்னமோ தமிழன் சினிமா கலையை கண்டுக்காம விட்டது போலவும் அதனால் சிவாசிக்கு பெருமை கிடைக்காம போனதாகவும் வருத்தப்படுறிங்க, தமிழ் சினிமாவும் அரசியலும் பின்னிப்பிணைந்தவை, சிவாசி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அரசியல் ரீதியாக " தவறான நிலைப்பாட்டினை" அல்லது சூழலை உருவாக்கிக்கொண்டது ,அவரது "அரசு ரீதியான" அங்கீகாரத்துக்கு பாதகமானது.<br /><br />திமுக சார்பில் இருந்து "திருப்பதி திருப்பமாக" காங்கிரஸ் தாவினார், நீண்ட கால காங்கிரஸ் விசுவாசியாக இருந்தும் ,அவருக்கு ஏன் கவனிப்பு இல்லாமல் போச்சோ? பின்னர் அங்கிருந்தும் கழண்டு தமிழக மக்கள் முன்னணிய்யோ என்னமோ உருவாக்கி , என் தமிழ் என் மக்கள்னு அரசியல் படமெல்லாம் எடுத்து கைய தான் சுட்டுக்கிட்டார். <br /><br />பின்னரும் சும்மா இல்லாமல் ஜெவின் வளப்பு மகனுக்கு பெண் கொடுத்து , அரசியல் சாயம் பூசிக்கொண்டதால் , பின்னர் ஆட்சிக்கு வந்த மஞ்சத்துண்டு "பாராமுகம்" காட்டினார், இதெல்லாம் உங்களுக்கும் தெரியும் ,ஆனால் என்னமோ "அவரை தமிழகமே" புறக்கணித்து விட்டாற்போல பேசுறிங்க அவ்வ்!<br /><br />ஹாலிவுட்டின் "காட்ஃபாதர்" மார்லன் பிராண்டோவுக்கு அமெரிக்காவில் எத்தனை சிலை வச்சு எத்தனை அரசுகள் கொண்டாடியது என அமெரிக்கன் எவனும் இப்படி பொலம்புறாங்களானு தெரியலை, இத்தினிக்கும் மார்லன் பிராண்டோ, 1972 இல் காட்ஃபாதருக்கு கிடைச்ச ஆஸ்கார் விருதினை, செவ்விந்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளூக்காக புறக்கணிச்ச "உண்மையான" புரட்சி நடிகர்"<br /><br /># தமிழனின் சினிமா வெறி நல்லா முத்திப்போய் தான் இருக்கு, இன்னும் ஏன் அதிகமாகவில்லைனு வருத்தப்படுறீங்களே அவ்வ்!<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-23247568158402221762014-07-23T04:25:06.619-07:002014-07-23T04:25:06.619-07:00அமுதவன் சார்,
நன்றி!
காலையிலேயே தொடர்ச்சியும் பி...அமுதவன் சார்,<br /><br />நன்றி!<br /><br />காலையிலேயே தொடர்ச்சியும் பின்னூட்டமிட்டேன்,ஏனோ வெளியாகவில்லை, பிலாக்கர் சொதப்பிடுச்சு போல,அதனையே மீண்டும் இடுகிறேன், தங்களுக்கு ஏற்புடையதாக இருக்காது எனினும் அப்பொழுது சொன்னதையே தான் இடுகிறேன்.<br /><br />தொடர்ச்சி...<br /><br />//அவருக்கு ஏன் உங்கள் அரசுகள் சரியான மரியாதை தரவில்லை?” என்று ஒரு சில கன்னட எழுத்தாளர்களும் கவிஞர்களும் விசாரித்திருக்கிறார்கள். எம்ஜிஆரால் தரப்பட்ட அரசவைக் கவிஞர் என்ற ஒன்றுமட்டும் இல்லாவிட்டால் அவருக்கு எந்தவித அரசாங்கச் சிறப்பும் கிடைத்திருக்காது.//<br /><br />கண்ணதாசனின் சேரமான் காதலிக்கு 70 களிலேயே <br />சாகித்ய அகதமி விருது கொடுக்க(வைக்கப்)பட்டது!!!<br /><br />அக்கால சிறப்பான எழுத்தாளர்களுக்கு கூட அது எட்டாக்கனி , இன்னிக்கு கூட ஜெமோ. எஸ்.ரா போன்றொர்கள் ஏங்கும் ஒன்று :-))<br /><br />ரோஹிணி ஹோட்டல் அருகே கண்ணதாசனுக்கு சிலை இருக்கு ,அது அவரே கட்டி வச்சதானு தெரியாது, ஆனால் சிலை, சாலைக்கு பெயர், வட சென்னையில் வியாசர் பாடி அருகே கண்ணதாசன் நகர் னு இன்னும் மக்கள் மறக்காத வகையில் நினைவு கூறப்படுகிறார் எனலாம்.<br /><br />சிவாசிக்கும் அவ்வகையில் செவாலியே சிவாசி சாலை, சிலை , மணி மண்டபம் எல்லாம் (இடம் ஒதுக்கினாங்க ,இன்னமும் கட்டலை போல) என அரசு கவனிச்சு இருக்கு.<br /><br />இன்றளவும் எம்.எஸ்.வி,க்கு ஒரு பத்மசிரி விருது கூட கிடைக்கலை, அதுக்காக யாரும் கவலைப்பட்டதாக தெரியலை, அதுவா நாட்டுக்கு முக்கியம்னு இப்போ கேட்பீங்களே , எனவே கவனிப்புகள் ஆளூக்கு ஆள் மாறித்தான் கிடைக்குது , அதான் உலகம்!!!<br /><br /># //சிவாஜியின் வாயசைப்பெல்லாம் வரலாற்றுப் பக்கங்களில் பதியப்படவேண்டிய சாதனைகளாகவே இருக்கும்.//<br /><br />தமிழனுக்கு ஏன் முழுமையான வரலாறு இல்லாம போச்சுனு இப்போ தான் புரியுது, இதே போல வரலாற்றில் வாயசைப்பை எல்லாம் எழுதுவதற்கு வரலாறெ இல்லைனு சொல்லிடலாம் அவ்வ்!<br /><br />#//சிவாஜி உருவானவரோ, உருவாக்கப்பட்டவரோ அல்ல; திரைப்படக் கலைக்காகவே ‘தோன்றியவர்களில்’ ஒருவர் சிவாஜிகணேசன்.//<br /><br />ஷ்ஷ்ப்பா முடியலை, ஆனாலும் நீங்க அதி தீவிர சிவாசி வெறியரா இருப்பீங்க போல அவ்வ்!<br /><br />அக்காலத்தில் இயக்குனர் சிரிதர் போன்றோர் தமிழ் சினிமாவை யதார்த்தப்பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதை அழித்து , நாடகப்பாணியில் அழுத்தியதில் ஒருவர் தான் சிவாசி, வணிகத்தில் அழுத்தி அழுக வைத்தது எம்சிஆர் :-))<br /><br />#//பாட்டுப்பாடும் பாகவதர்கள் மட்டும்தான் சினிமாவில் நடிக்கமுடியும் என்றிருந்த நிலைமை லேசுபாசாக அங்கொன்றும் இங்கொன்றுமாக உடைபட ஆரம்பித்த காலத்தில் சிவாஜியின் வருகைதான் அதை முற்றிலுமாக ஒரேயடியாக உடைத்துப்போட்டு இனிமேல் ‘நடிகர்கள்தாம்’ சினிமாவில் கதாநாயகர்களாக நடிக்கமுடியும் என்ற இலக்கணம் உறுதியாக வகுக்கப்படுகிறது. //<br /><br />பாட்டுப்பாடும் நாயகர்கள் என மரபை உடைத்தது எம்சிஆர், அவருக்கு பின்னர் சுமார் 10 ஆண்டு கழித்து வந்தவர் சிவாசி, ஆரூர் தாஸ் எழுதிய புத்தகத்தில்(நானும் தமிழ் சினிமாவும் என நினைக்கிறேன்,அவர் பல சினிமா நூல்கள் எழுதி இப்போ நல்லா கல்லா கட்டுறார் என நினைக்கிறேன்) கூட இதனை குறிப்பிட்டதை படித்த நினைவு.<br /><br />இன்னும் சொல்ல நிறைய இருக்கு, இதை சொன்னதுக்கே "நெற்றிக்கண்" திறந்தாலும் திறக்கலாம், நாம எல்லாம் மெய்யான நக்கீர பரம்பரை :-))<br /><br />மீண்டும் சந்திப்போம்!<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-75652033019446334662014-07-22T22:54:54.623-07:002014-07-22T22:54:54.623-07:00வாருங்கள் தருமி....நீங்கள் சொல்வதுபோல் திரையுலகில்...வாருங்கள் தருமி....நீங்கள் சொல்வதுபோல் திரையுலகில் நம்பமுடியாத பல ஆச்சரியங்களுக்கு சொந்தக்காரர்தான் நடிகர்திலகம். அவரை வியந்துபோற்றாமல் தமிழகத்தின் உட்கட்சி அரசியலுக்குள் அவரைக்கொண்டுவந்து நிறுத்தி, (அவர் என்ன சின்ன பப்பாவா?அவர் ஏன் அந்த சுழலுக்குள் மாட்டிக்கொண்டார்? என்று உடனே ஒரு எதிர்வினை வரும்) அதற்கேற்ப அந்த மகா கலைஞனை ஆலவட்டம் சுற்றி அவமானப்படுத்திய காரியத்தைத்தான் தமிழர்கள் செய்தார்கள். இன்னமும் செய்துகொண்டும் இருக்கிறார்கள். தங்கள் விமரிசனத்திற்கு நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-53216300625316305942014-07-22T22:39:14.450-07:002014-07-22T22:39:14.450-07:00//உயர்ந்த மனிதனில் ஒரு நடை,// ஒன்றல்ல .. அந்தப் பட...//உயர்ந்த மனிதனில் ஒரு நடை,// ஒன்றல்ல .. அந்தப் படத்தின் அந்த நாள் ஞாபகம் படத்தில் 14 வகை நடை என்று எண்ணிய நினைவுண்டு.<br /><br />எல்லாவற்றிலும் மிகவும் ஆச்சரியமான, நம்பவே முடியாத அதிசயம் - சேரன் செங்குட்டுவன் நாடகத்தில் அத்தனை அழகாக எழுதப்பட்ட பல்லுடைக்கும் வசனங்களை நடிப்போடும், உடல் அசைவுகளோடும் “ஒரே டேக்கில்” எப்படி மனிதன் பேசி நடித்தார் என்பது இன்றும் அதிசயமாகவே படுகிறது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-33780594448750798492014-07-22T18:52:21.497-07:002014-07-22T18:52:21.497-07:00கரந்தை ஜெயக்குமார் said...
\\அருமை
தம4\\
...கரந்தை ஜெயக்குமார் said...<br /><br /> \\அருமை<br /> தம4\\<br />தங்களின் வருகைக்கு நன்றி ஜெயக்குமார்.<br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-21433421191800733052014-07-22T18:51:04.926-07:002014-07-22T18:51:04.926-07:00ஜோதிஜி திருப்பூர் said...
\\அதிகாலையில் வாசித்த இ...ஜோதிஜி திருப்பூர் said... <br />\\அதிகாலையில் வாசித்த இந்த பதிவு எனக்கு மிக முக்கியமான ஒன்று.\\ <br /><br />நன்றி ஜோதிஜி.<br /><br />\\எப்போதும் இல்லாத அளவுக்கு எல்லா பக்கத்திலும் உள்ள நிறை குறைகளை அழகாக அலசியிருக்கீங்க. நாம் நம் இருக்கும் துறையில் எந்த அளவுக்கு தெளிவாக நாகரிகமாக நேர்மையாக இருந்தாலும் இங்கு எந்த அளவுக்கு மரியாதை கிடைக்கும்? எந்த அளவுக்கு மரியாதையை எதிர்பார்க்க முடியும்? என்பதற்கு சிவாஜியே நமக்கு முன் உதாரணமாக இருக்கின்றார்.\\<br /><br />மிக அற்புதமான பாயிண்ட் நீங்கள் நினைத்திருப்பது....<br /><br /> \\நான் இவரைப் பற்றி பல விசயங்களை மனதில் யோசித்த போதெல்லாம் என் எண்ணத்தில் என்னவெல்லாம் தோன்றியதோ அதிசயமாக நீங்க அனைத்தையும் எழுதியிருக்கீங்க.\\<br />தங்கள் விமரிசனத்திற்கு மீண்டும் என் நன்றி.<br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-325375303497045322014-07-22T18:44:20.322-07:002014-07-22T18:44:20.322-07:00வருண் said...
\\உங்களுடைய இந்தப் பதிவு தமிழனா ஒரு...வருண் said... <br />\\உங்களுடைய இந்தப் பதிவு தமிழனா ஒரு மாபெரும் கலைஞனுக்கு நீங்க செய்த ஒரு சின்ன உதவி. இந்தப் பதிவு ஒரு கோடி ஆண்டுகள் உயிருடன் வாழணும் என்று வாழ்த்திவிட்டு நான் நிறுத்திக்கிறேன். Thanks a lot! \\<br /><br />உங்களுடைய உணர்வுபூர்வமான இந்தப் பாராட்டிற்கு என்னுடைய இதயபூர்வமான நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-74868253699994214822014-07-22T18:42:05.653-07:002014-07-22T18:42:05.653-07:00வவ்வால் said...
\\மேற்கொண்டு வரும் கருத்துக்கள் ஒ...வவ்வால் said... <br />\\மேற்கொண்டு வரும் கருத்துக்கள் ஒவ்வாது எனில் , புறக்கணிக்கவும்! உங்களை வருத்துவது எனது நோக்கமல்ல!\\<br /><br />\\தொடரும்...\\<br />வாருங்கள் வவ்வால் நீங்கள் உங்கள் கருத்தை முழுவதுமாகத் தெரிவியுங்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-13248419955335410932014-07-22T17:14:04.327-07:002014-07-22T17:14:04.327-07:00அருமை
தம4அருமை<br />தம4கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-21184023871433637992014-07-22T17:05:03.707-07:002014-07-22T17:05:03.707-07:00அதிகாலையில் வாசித்த இந்த பதிவு எனக்கு மிக முக்கியம...அதிகாலையில் வாசித்த இந்த பதிவு எனக்கு மிக முக்கியமான ஒன்று. பெரிதான விமர்சனம் எழுதி வைக்க ஆசை. ஆனால் எழுதத் தேவையில்லாத அளவுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு எல்லா பக்கத்திலும் உள்ள நிறை குறைகளை அழகாக அலசியிருக்கீங்க. நாம் நம் இருக்கும் துறையில் எந்த அளவுக்கு தெளிவாக நாகரிகமாக நேர்மையாக இருந்தாலும் இங்கு எந்த அளவுக்கு மரியாதை கிடைக்கும்? எந்த அளவுக்கு மரியாதையை எதிர்பார்க்க முடியும்? என்பதற்கு சிவாஜியே நமக்கு முன் உதாரணமாக இருக்கின்றார். நான் இவரைப் பற்றி பல விசயங்களை மனதில் யோசித்த போதெல்லாம் என் எண்ணத்தில் என்னவெல்லாம் தோன்றியதோ அதிசயமாக நீங்க அனைத்தையும் எழுதியிருக்கீங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com