tag:blogger.com,1999:blog-5165985521656307434.post5833133186472619354..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: கலைஞரும் ஜெயகாந்தனும்Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-70548753119662282052012-01-14T06:31:24.874-08:002012-01-14T06:31:24.874-08:00ஆமாம் தங்கள் கருத்துக்கள் முற்றிலும் உண்மை.ஆமாம் தங்கள் கருத்துக்கள் முற்றிலும் உண்மை.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-36326299880796699512012-01-14T00:22:01.488-08:002012-01-14T00:22:01.488-08:00ஹர ஹர சங்கர என்று பொங்கி எழுந்த ஜெயகாந்தன், வாழை இ...ஹர ஹர சங்கர என்று பொங்கி எழுந்த ஜெயகாந்தன், வாழை இலை வஸ்துவை வாயில் குதப்பியபடி, தமிழை வைத்து நக்கிப் பிழைக்கும் நாய்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவது வேடிக்கை. சமூக அக்கறை என்றால் என்ன விலை என்று கேட்கும் சுய நலக் கும்பல்.<br /><br />சிவாஜி கணேசனுக்கு விருது கொடுக்காதது அந்த விருதுகளுக்குத்தான் கேவலம். சிவாஜி பெயரில் விருது ஆரம்பிக்கப்பட்டு அதை திரைத்துறையின் உயரிய விருதாக கொண்டாடினால் மட்டுமே இந்த களங்கம் நீங்கும். அதெல்லாம் இந்தியாவில் நடக்காது. நடக்கவும் விடமாட்டார்கள். <br /><br />--------------------<br />தறுதலை<br />(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன '2012)தறுதலைhttps://www.blogger.com/profile/02047950253108172443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-76656875394245043672012-01-11T22:02:16.498-08:002012-01-11T22:02:16.498-08:00வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தாக்கங்களுக்கு ஆட...வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தாக்கங்களுக்கு ஆட்பட்டதாலேயே தமிழர்களின் உணர்வுகளும் உரிமைகளும் பறிக்கப்பட்டிருக்கின்றன-அல்லது அங்கீகரிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. இதுநாள் வரையிலும் சரியான திசையில் தமிழ்ச்சமுதாயம் நடைபோடவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. மற்ற மாநிலத்தவர்கள் குறைந்தபட்சம் கலை, கலாச்சாரம் இலக்கியம் போன்ற விஷயங்களில் ஒரு போதும் இம்மாதிரியான குறைபாடுகளுக்கும் சீரழிவுகளுக்கும் ஆளாவதில்லை. இங்கே ஒவ்வொரு அசைவும் கட்சி அரசியல் சார்ந்தும் மிச்சம்மீதி சாதி சார்ந்தும்தான் எடுக்கப்படுகிறது.கண்ணதாசனுக்குக்கூட பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய தகுதிக்கு மிகச்சாதாரணமான ஒரு பாடலுக்குத்தான் சிறந்த பாடலுக்கான விருது கொடுத்தார்கள். எல்லாவற்றையுமே அரசியல்தான் தீர்மானிக்கிறது என்பதிலும் மக்களிடம் சரியான புரிதலும் உணர்வும் இல்லையென்பதும்தான் இங்குள்ள பிரச்சினை. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கடகா.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-61885367364904915482012-01-11T15:52:04.247-08:002012-01-11T15:52:04.247-08:00சிவாஜி ஒரு தலை சிறந்த நடிகராக இருந்தாலும் அவருக்கு...சிவாஜி ஒரு தலை சிறந்த நடிகராக இருந்தாலும் அவருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அரசு அங்கீகாரங்கள் கடைசி வரை எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.அதுவும் எம் ஜி ஆர் ரிக்ஷாக்காரன் படத்திற்காக சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கபட்ட செய்தியை அந்த நாளில் கேட்டபோது எங்கள் வீட்டில் யாவரும் அதிர்ச்சியில் உறைந்தோம்.எங்கள் வீட்டில் அன்றுலிருந்து இன்றுவரை அனைவரும் சிவாஜி ரசிகர்கள்.அதற்காக சிவாஜி நடித்த குப்பை படங்களுக்கு வக்காலத்து வாங்கமாட்டோம்.அந்த வருடம் சிவாஜிக்கு தேசிய விருது கிடக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.ஆனால் அது எம் ஜி ஆருக்கு வழங்கப்பட்டது எங்களுக்கு இடி விழுந்தாற்போல் இருந்தது.எனக்கு தெரிந்து துக்ளக் தவிர வேறு எந்த பத்திரிகையும் சிவாஜிக்கு வக்காலத்து வாங்கவில்லை. தவிர அந்த காலக் கட்டத்தில் அதுவரை தேசிய விருதுகள் தமிழுக்கு கிடைக்கவில்லை என்றாலும் நல்ல படங்களுக்கும் நல்ல நடிகர்களுக்கும்தான் வழங்கப்பட்டன.எம் ஜி ஆர் நல்ல மனிதர் ஆனால் நல்ல நடிகர் அல்ல.அதுவும் ரிக்ஷாக்காரனுக்கு விருது வழங்கப்பட்டது மகா கேவலம்.சிவாஜி இவ்வாறு வெவ்வேறு காலக் கட்டங்களில் வஞ்சிக்கப்பட்டார்.Ramkihttps://www.blogger.com/profile/09370635241044774765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-60917464138187035482011-02-21T06:01:52.613-08:002011-02-21T06:01:52.613-08:00இதைப்பற்றி நாமே எவ்வளவோ பேசியிருக்கிறோம், விவாதித்...இதைப்பற்றி நாமே எவ்வளவோ பேசியிருக்கிறோம், விவாதித்துமிருக்கிறோம். சிவாஜிக்கு மட்டுமென்றில்லை, தமிழ்த்திரையின் பல ரத்தினங்களைத் எந்தத் தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை என்பது அவலத்தின் உச்சம். எஸ்.வி.சுப்பையா (பாரதியாகக் கப்பலோட்டிய தமிழனில்), பாலையா, எஸ்.வி.ரங்காராவ் போன்றவர்கள் (எண்ணற்ற படங்களில்), சிவாஜியாலேயே (தனிப்பட்ட முறையில்) சிறப்புச் செய்யப்பட்டவர்கள். எண்ணிப்பார்க்கும் போது, கப்பலோட்டிய தமிழனில் சிவாஜி, ஜெமினியைப் பார்த்துச் சொல்லுவார்: ’அடே மாடசாமி, இந்தச் சரித்திர ஆசிரியர்கள் உன்னை மறந்துவிடலாம், ஆனால் சத்தியம் உன்னை மறவாது, போடா’ என்பதுதான் நினைவுக்கு வருகிறது. <br />“நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி<br />வஞ்சனைகள் செய்வாரடி - கிளியே,<br />வாய்ச்சொல்லில் வீரரடி”!!!!!!!!R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-6532033869783065592011-02-20T09:56:21.170-08:002011-02-20T09:56:21.170-08:00வருக சிவகுமார்,தங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள் பெ...வருக சிவகுமார்,தங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள் பெயர் கொண்ட நடிகர் சிவகுமாருக்குக்கூட இன்னமும் எவ்விதச் சிறப்பும் செய்யாமல் இருக்கிறார்கள். என்னுடைய இ-மெயில் முகவரி இது;<br />amudhavan6@gmail.comAmudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-81271828292623594982011-02-20T08:57:59.561-08:002011-02-20T08:57:59.561-08:00சிவாஜி பற்றிய செய்திகளை வெளியிட்டதற்கு நன்றி. அவர்...சிவாஜி பற்றிய செய்திகளை வெளியிட்டதற்கு நன்றி. அவர் மட்டுமா..மகாகவி பாரதி, நாகேஷ், விளையாட்டு நட்சத்திரங்கள் என பலரும்தான் வடக்கால் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரே தேசத்திற்குள் இப்படி பல கேவலமான பாகுபாடுகள். அருமையான பதிவு. தங்கள் இ-மெயில் முகவரி தர இயலுமா?Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-42211757878947590402011-02-20T07:01:37.773-08:002011-02-20T07:01:37.773-08:00தங்கள் தளத்தில் இணைப்பு வழங்கியிருப்பதற்கும் தங்கள...தங்கள் தளத்தில் இணைப்பு வழங்கியிருப்பதற்கும் தங்கள் பாராட்டிற்கும் நன்றி கவிஞரே.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-82123630133960772512011-02-20T06:59:57.945-08:002011-02-20T06:59:57.945-08:00இந்த விழிப்பு தமிழ் ஆர்வலர்களுக்கு வரவேண்டும் அகில...இந்த விழிப்பு தமிழ் ஆர்வலர்களுக்கு வரவேண்டும் அகில், அப்போதுதான் இலக்கியத்தளத்தில் நிறைய மாறுதல்கள் நடைபெறும். தங்களின் வருக்கைக்கும் கவனிப்பிற்கும் நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-43255582294549690992011-02-19T23:29:03.329-08:002011-02-19T23:29:03.329-08:00ஐயா தங்கள் இலக்கிய சமூக அரசியல் கட்டுரைகள் அனைத்து...ஐயா தங்கள் இலக்கிய சமூக அரசியல் கட்டுரைகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. தங்கள் தளத்திற்கு என் வலைப்பதிவில் இணைப்பு வழங்கியிருக்கிறேன்...Anonymoushttps://www.blogger.com/profile/01179665706599568497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-36582196999886419792011-02-19T00:38:45.237-08:002011-02-19T00:38:45.237-08:00\\இலக்கியவாதிகள் என்றால் திருக்குறளில் ஆரம்பித்து ...\\இலக்கியவாதிகள் என்றால் திருக்குறளில் ஆரம்பித்து சங்க இலக்கியம் வந்து பாரதிதாசனோடு நின்றுவிடுபவர்கள் மட்டும்தாம். இலக்கியக்கூட்டங்களில்கூட இவ்வளவு மட்டும்தாம் பேசுவார்கள். இதுவே போதும் என்கிற ஒரு மனோபாவம் இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது.// <br />சரியாகச்சொன்னீர்கள். எனக்கும் விவரம் தெரிந்ததிலிருந்து நானும் நிறைய இலக்கியக்கூட்டங்களுக்குச் சென்று வருகிறேன். எல்லாரும் இதையேதான் செய்கிறார்கள். பாரதிதாசனோடு நின்றுவிடுகிறார்கள். அவரைத்தாண்டி கீழே வருவதேயில்லை.இந்தச் சிந்தனையே எனக்கு இதுநாள்வரையிலும் வந்ததில்லை.இந்தக் கருத்தை முதன்முதலாக நீங்கள்தான் பொதுவில் வைத்திருக்கிறீர்கள் என்றே கருதுகிறேன்.Unknownhttps://www.blogger.com/profile/13376596081634880867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-79207666246322997912011-02-19T00:10:01.133-08:002011-02-19T00:10:01.133-08:00நன்றி மதிசீலன். உங்கள் சந்தேகம் நியாயமானதுதான்.அப்...நன்றி மதிசீலன். உங்கள் சந்தேகம் நியாயமானதுதான்.அப்படி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.இம்மாதிரியான அரசியலைத்தானே நாம் தொடர்ந்து பார்த்துவருகிறோம்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-40963323115797013862011-02-19T00:04:11.426-08:002011-02-19T00:04:11.426-08:00வருகைக்கு நன்றி மாணிக்கம்.இனிமேலாவது இம்மாதிரியான ...வருகைக்கு நன்றி மாணிக்கம்.இனிமேலாவது இம்மாதிரியான மாறுதல்கள் ஏற்படவேண்டி ஒரு பொதுக்கருத்தை நாம்தான் உருவாக்கவேண்டும்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-3594224046276538872011-02-19T00:01:46.551-08:002011-02-19T00:01:46.551-08:00ஆமாம் சுதா, முதல்வருக்கும் இலக்கியப் படைப்பாளிகளுக...ஆமாம் சுதா, முதல்வருக்கும் இலக்கியப் படைப்பாளிகளுக்கும் நல்லதொரு தொடர்பு இருக்கவேண்டும். கர்நாடகத்திலும் மற்ற மாநிலங்களிலும் அப்படித்தான் இருக்கிறது.<br />உங்களின் திலோத்தமி பதிவை அன்றைக்கே உங்கள் வலைப்பூவில் படித்துவிட்டேன்.<br /> நன்றாக இருந்தது.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-31346899753130221032011-02-18T00:56:37.616-08:002011-02-18T00:56:37.616-08:00நல்ல கட்டுரை. ஆனால் நீங்கள் எழுத்தாளர்களுக்கும் கவ...நல்ல கட்டுரை. ஆனால் நீங்கள் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் பத்மஸ்ரீ போன்ற விருதுகளை வாங்கித்தரவேண்டும் என்று கலைஞருக்கு ஐடியா கொடுப்பதுதான் விபரீதமாக இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் அவர் உடனடியாகத் தமது கைத்தடியான வைரமுத்துவுக்கு வாங்கித்தந்து விடுவார்.Mathiseelanhttps://www.blogger.com/profile/02156237597151185065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-22833329686951184762011-02-17T23:15:57.896-08:002011-02-17T23:15:57.896-08:00//இனிமேல் படிப்பகங்களுக்கும் இலக்கியம் சார்ந்த நிற...//இனிமேல் படிப்பகங்களுக்கும் இலக்கியம் சார்ந்த நிறுவனங்களுக்கும் தற்காலப்படைப்பாளர்களின் பெயர்களைச் சூட்டுங்கள். கல்கி,அகிலன், ஜெயகாந்தன்,தி.ஜானகிராமன்,கண்ணதாசன்,சுரதா,புதுமைப்பித்தன் என்றெல்லாம் பெயர்களைச் சூட்டுங்கள். <br /><br />சுஜாதாவின் பெயரை நீங்கள் ஏதாவதொரு இலக்கிய நிறுவனத்துக்குச் சூட்டினால் உங்களை இளைஞர் சமூகம் எப்படிக் கொண்டாடும் தெரியுமா!//<br /><br />அருமையான யோசனை. ஆனால் யாரும் ( கருணா/ ஜெயா) இதை செயல் படுத்த மாட்டார்கள். தொட்டதெற்கெல்லாம் அண்ணா, கலைஞர், அம்மா,ஆத்தா, தாத்தா, என்றுதான் பெயர்சூட்டுவார்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-44847057537286181562011-02-17T22:09:49.668-08:002011-02-17T22:09:49.668-08:00இருவரம் இலக்கிய ரீதியாக நண்பர்களாக இருப்பதே எழுத்த...இருவரம் இலக்கிய ரீதியாக நண்பர்களாக இருப்பதே எழுத்துலகிற்கு சிறந்தது..<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://mathisutha.blogspot.com/2011/02/blog-post_12.html" rel="nofollow">தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.com