tag:blogger.com,1999:blog-5165985521656307434.post602573212260264133..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: இளையராஜாவா......ரகுமானா ? – பகுதி : 2Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-8517068580111069902013-04-20T08:53:25.427-07:002013-04-20T08:53:25.427-07:00"சமீபத்தில் நான் இளையராஜா இசையைபற்றி வெகுவாக ..."சமீபத்தில் நான் இளையராஜா இசையைபற்றி வெகுவாக என் மனதில் அசை போட்டுக்கொண்டிருந்த நேரத்தில் தான் "உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல..." கேட்க நேர்ந்தது... ஏற்க்கனவே பல முறை கேட்டிருந்தாலும் ஹை க்வாலிட்டி ஹெட்செட்-இல் மேம்படுத்தப்பட்ட தரத்துடன் கேட்டதற்க்கு நான் என்னையே மறந்தேன்... அப்பொழுது தான் எனக்கு உரைத்தது, இளையராஜா மட்டுமே இசையமைப்பாளர் அல்ல என்று... "<br /><br /> இதைதான் நானும் திரு அமுதவன் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இளையராஜாவின் காலத்தில் வந்த தொழில் நுட்பம் அவரை வேறு இடத்திற்கு கொண்டுசென்றது. ரகுமானின் கால தொழில் நுட்பம் அவரை இன்னும் அதிக தூரம் கொண்டு சென்றது. ஆனால் இது எல்லாம் இல்லாத காலத்தில் பாடல்கள் அமைத்த எம் எஸ் வியின் பாடல்களை இன்றைக்கு இருக்கும் அதி நவீன தொழில் நுட்பத்தின் உதவியோடு மறுபடி பதிவு செய்ய முடிந்தால் அது மிக நவீனமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இதை நீங்கள் புரிந்து கொண்டது போல மற்ற இளையராஜா அபிமானிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம். காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-31171734110342401682013-03-13T07:21:51.801-07:002013-03-13T07:21:51.801-07:00அப்புறம் இன்னொரு முக்கிய விஷயம் இது ஒன்றும் இளையரா...அப்புறம் இன்னொரு முக்கிய விஷயம் இது ஒன்றும் இளையராஜா ரகுமான் சண்டை அல்ல. இளையராஜா ஒருவர்தான் இசையமைப்பாளர் என்று நினைத்துக்கொண்டிருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கு அப்படியல்ல நண்பர்களே என்று விளக்கங்களுடன் சில விஷயங்களைச் சொல்லும் ஒரு சிறு முயற்சிதான் இது.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-2660185204719197342013-03-13T07:18:29.398-07:002013-03-13T07:18:29.398-07:00என்ன தனுசுராசி இப்படிச் சொல்லிட்டீங்க...இங்கே வெறு...என்ன தனுசுராசி இப்படிச் சொல்லிட்டீங்க...இங்கே வெறும் இசையமைப்பாளர்களை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோமா, ஒட்டுமொத்த ஆர்க்கெஸ்ட்ராவை விட்டுவிட்டோம் போல. தோள்பட்டையையும், தொடையையும்,மேஜையையும் வாத்தியக்கருவிகளாக்கி நாக்கையும் வாயையும் வைத்தே ஒரு முழு இசைக்கச்சேரியை(அதுவும் ஆப்பிரிக்க இசைக்கச்சேரியைச்) செய்யும் வித்தை அவ்வளவு சுலபமாக யாருக்கு வரும்?<br />பன்முகத்திறமை கொண்ட அவர் ஒருதலை ராகம் படத்திற்குப் போட்டுவைத்திருந்த டியூன்கள் அபாரம். (என்னதான் எஸ்.ஏ.ராஜ்குமார் இசைக்கோர்ப்பு செய்திருந்தார் என்றாலும் மெட்டுக்களும் பாடல்களும் இவருடையதுதானே.)அதற்குப்பின் அவர் இசையமைப்பில் நிறையப் பாடல்கள் ஹிட் அடித்திருந்தபோதும் அந்தப் பாடல்களுக்கு இணையாக எதுவும் வரவில்லை. வேறொரு படத்தில் 'மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றதுவைத் தூதுவிட்டேன்' என்று எஸ்பிபியை வைத்து ஒரு மெலடி போட்டிருப்பார். அருமையாக இருக்கும்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-646165002186318612013-03-13T04:35:31.152-07:002013-03-13T04:35:31.152-07:00உங்களோட இளையராஜா ரகுமான் சண்டையில எங்கள் இன்னிசை வ...உங்களோட இளையராஜா ரகுமான் சண்டையில எங்கள் இன்னிசை வேந்தன் டி.ராஜேந்தரை வசதியாக மறந்தமைக்கு என்னுடைய வருத்தங்களை பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்...<br /><br />அவரை போன்ற ஒரு பன்முகக்கலைஞனை இந்த தேசம் கண்டதுண்டா... இனிமேலும் காணும் வரம் உண்டா... தனுசுராசிhttps://www.blogger.com/profile/03941047013708536241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-8097680792928449572013-03-13T00:28:05.241-07:002013-03-13T00:28:05.241-07:00வாருங்கள் DR. நீங்கள் இங்கே சொல்லியிருக்கும் அதே க...வாருங்கள் DR. நீங்கள் இங்கே சொல்லியிருக்கும் அதே கருத்தைத்தான் நானும் வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு வடிவங்களில் இங்கே சொல்லிக்கொண்டிருக்கிறேன். <br /><br />நல்லதொரு இசைக்கு வெறும் வாத்தியக்கருவிகள் மட்டுமே போதாது. எந்த வாத்தியமும் துணைக்கு இல்லாமல் சில சமயங்களில் பாடகர்கள் பாடும் பாடலைக் கேட்டீர்களானால் ஒரிஜினல் பாடல்களை விடவும் நன்றாக இருப்பதையும் மனதில் உடனே இடம் பிடித்துவிடுவதையும் உணர முடியும். காரணம் நல்ல பாடலுக்கு நல்ல இசைதான் முக்கியம். விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன், மட்டுமல்ல சுதர்சனத்துடைய இசையையே கூட இளையராஜாவோ அதற்குப் பின் வந்தவர்களோ இன்னமும் தாண்டிவிடவில்லை என்பதுதான் உண்மை.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-68979835542568861482013-03-12T20:49:33.565-07:002013-03-12T20:49:33.565-07:00//இன்றைக்கு ஹோம் தியேட்டர், சிடிக்கள் ,ஐபாட் ,டிஜி...//இன்றைக்கு ஹோம் தியேட்டர், சிடிக்கள் ,ஐபாட் ,டிஜிட்டல் பதிவுகள் இன்டர்நெட் , செல்போனில் மியூசிக் என்று விஞ்ஞான வளர்ச்சி எங்கேயோ போய் நிற்கிறது.//<br /><br />இதில் யாரும் வெறும் ரகுமான் பாட்டு மட்டுமே கேட்பது இல்லை... எல்லா இசைக்கலைஞர்களும் இதில் அடங்கி விடுகின்றனர்... <br /><br />சமீபத்தில் நான் இளையராஜா இசையைபற்றி வெகுவாக என் மனதில் அசை போட்டுக்கொண்டிருந்த நேரத்தில் தான் "உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல..." கேட்க நேர்ந்தது... ஏற்க்கனவே பல முறை கேட்டிருந்தாலும் ஹை க்வாலிட்டி ஹெட்செட்-இல் மேம்படுத்தப்பட்ட தரத்துடன் கேட்டதற்க்கு நான் என்னையே மறந்தேன்... அப்பொழுது தான் எனக்கு உரைத்தது, இளையராஜா மட்டுமே இசையமைப்பாளர் அல்ல என்று... <br /><br />நீண்ட பதிவுக்கு மிக்க நன்றி... DRhttps://www.blogger.com/profile/12133259273121361732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-40851751694458098582013-03-04T06:26:14.443-08:002013-03-04T06:26:14.443-08:00வாருங்கள் குட்டிப்பிசாசு இதனைத்தான் நானும் இங்கே ப...வாருங்கள் குட்டிப்பிசாசு இதனைத்தான் நானும் இங்கே பல்வேறு வகைகளில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இரண்டாவது, விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் மற்றும் விஸ்வநாதனின் பாடல்கள் காலத்தைக் கடந்து நின்றிருக்கின்றன. இன்றைக்கு (4-3-2013) பெங்களூரில் நடைபெற்ற திருமணம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். முதலில் இப்போதைக்குப் புழக்கத்தில் உள்ள கடல்,கும்கி போன்ற படங்களிலிருந்து பாடல்கள் போட்டார்கள். பிறகு திருமண வாழ்த்துக்கள் அடங்கிய பாடல்கள்....... எல்லாம் சாரதா படத்தில் மணமகளே மருமகளே வா வா வில் துவங்கி பூமுடித்தாள் இந்தப் பூங்குழலியில் தொடர்ந்து பாசமலர் என்று போய்க்கொண்டேயிருந்தது. இதில் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' என்பதுபோல் இளையராஜா மற்றும் பலரின் பாடல்கள் சுத்தமாக இல்லவே இல்லை.காலம் என்பது இப்படித்தான் பயணிக்கிறது. காலத்தைக் கடந்து நிற்பதை மட்டும்தான் சாதனையாக எடுத்துக்கொள்ள முடியும். <br /><br />நீங்கள் சொல்லியிருப்பது சரி; இதனை கங்கைஅமரன் நேரில் பேசிக்கொண்டிருந்தபோதும் சொல்லியிருக்கிறார்.<br />தங்களின் வருகைக்கு நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-58099301948589189622013-03-03T14:58:13.437-08:002013-03-03T14:58:13.437-08:00நான் எல்லோருடைய பாடல்களையும் கேட்பவன். எம்.எஸ், இள...நான் எல்லோருடைய பாடல்களையும் கேட்பவன். எம்.எஸ், இளையராஜா, ரகுமான் என அனைவரும் பிடிக்கும். ஆனால் நீங்கள் சொன்ன சாதனை என்று வரும்போது, எம்.எஸ் - ராமமூர்த்தி அவர்களின் சாதனை பெரிது. இதனை இளையராஜா அவர்கள் கூறியதைவிட கங்கையமரன் பல இடங்களில் ஆணித்தரமாகக் கூறியுள்ளார். குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-30341674811073185462012-02-23T00:15:12.867-08:002012-02-23T00:15:12.867-08:00ஊரில் யாரிடம் என்னவிதமான சிறப்புக்களும் அருமைப் பெ...ஊரில் யாரிடம் என்னவிதமான சிறப்புக்களும் அருமைப் பெருமைகளும் நிரம்பியிருந்ததை எவ்வளவு அரும்பாடுபட்டுச் சொல்லியபோதிலும் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு "என்னதான் இருந்தபோதிலும் எங்கள் எம்ஜிஆருக்கு இங்கே ஈடும் இணையும் எவரும் இல்லே" என்று சொல்லக்கூடிய ரசிகசிகாமணிகளிடம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-69607879728753642122012-02-22T12:49:27.772-08:002012-02-22T12:49:27.772-08:00அமுதவன் அவர்களே !
வணக்கம் .
"....மறுபடியும்...அமுதவன் அவர்களே !<br />வணக்கம் . <br /><br />"....மறுபடியும் நினைவு படுத்துகிறேன். இளையராஜாவுக்காக வாதாடுகிறேன் என்ற பெயரில் டிஎம்எஸ்,பி.சுசீலா,கண்ணதாசன்,சிவாஜி,எம்ஜிஆர்,டி.ஆர்.மகாலிங்கம்,பிபிஎஸ்,சீர்காழி போன்ற மிகப்பெரும் கலைஞர்களையெல்லாம் அவமதிக்காதீர்கள்."<br /><br />அமுதவன் அவர்களே ! திசை திருப்பாதீர்கள்.உங்களுக்கு இது தகுமா ...?<br />நான் எங்கே அவமதித்தேன் ?<br />எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது.1977 ஆம் ஆண்டு திரு.டி.எம்.சௌந்தர ராஜன் இலங்கை வந்தார்.அவர் இளையராஜாவை பற்றி என்ன சொன்னார் தெரியுமா ? " இந்த தவில் கொம்பனி எல்லாம் கன நாளைக்கு தாங்காது " இப்படி "அறம்" பாடியவர்களே அதிகம்.அந்த செவ்வியோடு அவர் தானே ராசியில்லா ராஜாவகிவிட்டார்.எல்லாவற்றிற்கும் காரணம் "வாய்".<br /><br />நல்ல பாடல் வரிகளை இசை அமுக்குகிற மாதிரியான கைங்கரியத்தைத்தான் அவர் பல காலம் செய்துவந்தார்.- அமுதவன்<br /> அந்த கருத்தில் எந்த உண்மையும் இல்லை.<br />அப்படி சொன்ன வைரமுத்து இன்று தங்கிலிஸ் (தமிழ் + ஆங்கிலம் )பாட்டு எழுதி திரிகிறார்.<br />அந்த குற்றத்தை சொன்ன வைரமுத்து இன்று என்ன எழுதுகிறார்.தனது பாட்டில் நம்பிக்கை இருந்திருந்தால் இந்த சினிமாவை விட்டு விலகி கருவாச்சி காவியம் எழுதியிருக்கலாம். இப்போது மட்டும் அவரின் பாட்டு மக்களுக்கு புரியுதோ சார் !<br /><br />விஞ்ஞான குறிப்புகளும் ,மருத்துவ குறிப்புகளும் 50 கிலோ தாஜ்மஹால் போன்ற" கவித்துவமான " வரிகளை எழுதுகிறார்.இவற்றைவிட இளையராஜாவிடம் அவர் எழுதியது தேவலை.இளையாராஜாவுடன் இவர் இருந்த போது செய்த முகஸ்துதி சொல்லி மாளாது.முகஸ்துதி செய்வதில் சினிமா துறையில் உள்ளவர்கள் பல்கலை கழகமே நடத்தலாம்.<br />அதோ ரகுமான் வந்ததாலே தப்பி பிழைத்தார்...இப்போ என்ன கதை விடுகிறார் வைரமுத்து தெரியுமா ...நீ (இளையராஜா) இல்லை என்றல் நானும் இல்லை நிலையில் நீயும் இல்லை நானும் இல்லையாம் ..என்கிறார்.சில வருடங்களுக்கு முன்பு " உன்னுடைய மூச்சும் இசைதான் ..அப்பப்ப ..<br />கவிஞர் நா.காமரசனிடம் வைரமுத்து பற்றி கேட்டதற்கு " வைரமுத்துவை நான் ஒரு கவிஞன் என்று ஒத்துக்கொண்டதே இல்லை..சும்மா வாயை கிளறாதீர்கள் ....<br />கவிஞன் என்றால் கண்ணதாசன் ,கலைஞர் என்றால் கருணாநிதி ,அறிஞர் என்றால் அண்ணாத்துரை ,புரட்சி என்றால் எம்.ஜி.ஆர், நடிகர் என்றால் சிவாஜி இதெல்லாம் திராவிட முனேற்ற கழக காரர்கள் தமக்கு தாமே சூட்டிய பட்டங்கள்.கூட்டணிகள்.(இந்த மாதிரியான "கொடுமைகளையே " அன்றைய இடதுசாரிகளும் ,ஜெயகாந்தனும் எதிர்த்தார்கள்.)இதை வைத்தே மற்றவர்களை ஓரம் கட்டியவர்கள்.<br />பின்னாளில் கவிஞர் சுரதாவிடம் ஏன் தற்போதெல்லாம் சினிமாவில் பாடல் எழுதுவதில்லை என கேட்ட போது " யார் என்னை கூப்பிடறான் ? ஆர்மோனியம் வைத்து கினு... கினு..ன்னு வாசிச்சவனை( எம்.எஸ். விஸ்வநாதன் ) நான் தான் எம்.எஸ். ஞானமணியிடம் (எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர் ,எம்.ஜி.ஆர் நடித்த மருதநாட்டு இளவரசி இசையமைப்பாளர்.எம்.எஸ். விஸ்வநாதன் அனவரிடமும் உதவியாளராக இருந்தவர் )அறிமுகம் செய்தேன்.அவன் கூப்பிடுகிறானா ?அதே பெட்டியில் கண்ணதாசனை பற்றி கேட்ட பொது நல்ல மாதிரி சொன்னார்.<br />மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன் எந்தவித பின் புலமும், கூட்டணியும் ,பரிவாரங்களும் ,அரசியல் பின் புலமும் இல்லாமல் தனித்து தன் இசை ஒன்றையே நம்பி "இசையின் எல்லா பரிமாணங்களிலும் " வெற்றிக்கொடி நாட்டியவர் இந்திய அளவில் இளையராஜா ஒருவரே.<br />அவர் பெரியோரை மதிப்பதும் உண்டு சிறியோரை தவிர்ப்பதும் நாம் கண்டவையே.<br /><br />அன்புடன்<br />தாஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-36808688747787636482012-02-22T01:40:10.359-08:002012-02-22T01:40:10.359-08:00திரு தாஸ் அவர்களே எவ்வளவு பேசினாலும் திரும்பத் திர...திரு தாஸ் அவர்களே எவ்வளவு பேசினாலும் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டு இருப்பதற்குப் பெயர் என்னவென்று தெரியவில்லை. நான் பட்டியலிட்டிருக்கும் அத்தனை சாதனையாளர்களின் பாடல்களும் ஐம்பது அறுபது வருடங்களைத் தாண்டி இன்றைக்கும் நிலைத்திருக்கின்றன. பாடல்களோ கதையோ கவிதையோ ஒரு படைப்பு என்பது அது எத்தனை ஆண்டுக்காலம் அதற்குப் பிந்தைய அதனைச் சார்ந்த அதே போன்ற படைப்புக்கள் வருகின்றனவோ அவற்றையெல்லாம் தாண்டியும் இவை நிற்கின்றன என்றால் அதுதான் நிலைத்திருப்பவையாக அர்த்தம் கொள்ளப்படுபவை. <br /><br />இந்த நியதி எல்லாவற்றுக்குமே பொருந்தும். பாடல்களும் அப்படித்தான். இந்த அடிப்பைடையில்தான் நான் மேற்குறிப்பிட்ட பாடல்களும் இன்னமும் எத்தனையோ பாடல்களும்கூட இன்றைக்கும் உலகம் பூராவும் இருக்கும் பல்வேறு டிவி சேனல்களிலும் அமுதகானம் என்ற பெயரிலும் தேன்கிண்ணம் என்ற பெயரிலும் நினைத்தாலே இனிக்கும் என்ற பெயரிலும் இன்னமும் எத்தனையோ பெயரிலும் நாள்தோறும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.<br />இன்னமும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பழையபாடல்களின் ரசிகர்களாயிருப்பதெல்லாம் சொல்லித்தெரியவேண்டியதில்லை. இந்த அடிப்படையில்தான் ஒரு பாடல் நிலைத்திருக்கிறதா என்பதும் அது எத்தனை ஆண்டுகள் நிலைத்திருக்கின்றன என்பதும் ஒருவர் இசையமைத்த எத்தனைப் பாடல்கள் இப்படி நிலைத்திருக்கின்றன என்பதையும் பார்த்துத்தான் கட்டுரையின் மேற்கண்ட முடிவுகள் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.<br /><br />சிவாஜிக்கும் கண்ணதாசனுக்கும் மட்டும் நான் நல்ல ரசிகனாக இருந்துவிட்டுப்போவதில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையாம். ஆனால் விஸ்வநாதன் ராம மூர்த்தி உட்பட வேறு பலருக்கும் 'நல்ல ரசிகனாக' இருக்கக்கூடாதாம். என்ன தமாஷ் இது?<br /><br />பாடல்களின் சாதனை என்பது அந்தப் பாடல் வெளியானபிறகு வந்த லட்சக்கணக்கான பாடல்களுக்குப் பிறகும் அதையெல்லாம் தாண்டி ஒரு பாடல் நிற்கிறது என்பதுதான். <br />இதைத்தாண்டி அந்தப் பாடல்போட்டவருக்கு பியூஷன் தெரியுமா,மேண்டலின் வாசிக்கத்தெரியுமா,கடம் தெரியுமா என்பதெல்லாம் கேள்வி இல்லை.<br /><br />அம்மாதிரி காலத்தைத் தாண்டி நிற்பவையாக இளையராஜாவின் பாடல்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. <br />இந்த எண்ணிக்கையை ரகுமான் கடந்துசென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.<br />'இளையராஜாவின் சிறப்பு என்னவென்றால் எந்த நடிகருக்கு எந்த பெரிய பாடகர் பாடகி பாடினாலும் அது இளையராஜா பாட்டு என்றுதான் அறியப்படுகிறது. நடிகர் பாடகர் இயக்குநர் என்பது எல்லாம் அதற்குப் பிறகே. இதுதான் இளையராஜா நாட்டிய சாதனை' என்கிறீர்கள்.<br />இளையராஜாவுக்காகப் பேசுகிறேன் பேர்வழி என்று நீங்கள் பயங்கரமாகச் சறுக்கி விழும் இடமே இதுதான்.கூடவே உங்கள் இளையராஜாவையும் சேர்த்துக்கொண்டு சறுக்கிவிழும் சாகசத்தைச் செய்கிறீர்கள்.<br />தன்னுடைய சுய திறமையில் நம்பிக்கை கொண்ட எந்த சாதனையாளனும் இன்னொரு கலைஞன் மேலே வருவதைத் தடுக்கமாட்டான். கையை வைத்து அவனுடைய தலையைப் பிடித்து அழுத்த மாட்டான். ஆனால் இளையராஜா இதனைச் செய்திருக்கிறார். <br /><br />நல்ல பாடல் வரிகளை இசை அமுக்குகிற மாதிரியான கைங்கரியத்தைத்தான் அவர் பல காலம் செய்துவந்தார். <br /><br />இப்படிப்பட்ட விவகாரங்களெல்லாம் நிறைய இருக்கின்றன. அவை பற்றியெல்லாம் பேச இது சந்தர்ப்பம் அல்ல.<br /><br />படங்களில் இதைத்தான் எம்ஜிஆரும் செய்துவந்தார். எம்ஜிஆருடைய 'உயரத்துக்கு' என்ன அக்கிரமங்கள் செய்தாலும் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு போவதற்கான 'வணிகத்தேவைகள்' தயாரிப்பாளர்களுக்கும் திரைபடத்துறைக்கும் இருந்தன. அதனால் அவ்வளவையும் 'ஏற்றுக்கொண்டு' வாய்பொத்தி சென்றார்கள். <br /><br />இளையராஜா அப்படியான முயற்சிகளில் முனைந்தபோது வெகு சீக்கிரத்திலேயே அதற்கான ஆப்பு வைக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் ரகுமான் வந்தார். தேவா வந்தார்.இம்மாதிரியான விவகாரங்களெல்லாம் நிறைய இருக்கின்றன. ஆனால் நாம் எடுத்துக்கொண்ட விஷயத்திற்காக எல்லாவற்றையும் இங்கே இழுத்துப்போட்டுச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அது தேவையும் இல்லை.<br />இன்னொன்று தாஸ், உங்களுக்கு ஏற்கெனவே சொன்னதையே மறுபடியும் நினைவு படுத்துகிறேன். இளையராஜாவுக்காக வாதாடுகிறேன் என்ற பெயரில் டிஎம்எஸ்,பி.சுசீலா,கண்ணதாசன்,சிவாஜி,எம்ஜிஆர்,டி.ஆர்.மகாலிங்கம்,பிபிஎஸ்,சீர்காழி போன்ற மிகப்பெரும் கலைஞர்களையெல்லாம் அவமதிக்காதீர்கள்.<br />அவர்களின் சாதனைப் பெருமைகளை அவர்களிடமே விட்டுவிடுங்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-34011314208305982492012-02-21T14:50:45.151-08:002012-02-21T14:50:45.151-08:00இளையராஜாவை " ஒன்றும் இல்லை " என்பதே கட்ட...இளையராஜாவை " ஒன்றும் இல்லை " என்பதே கட்டுரையின் மைய்ய கரு. <br /><br />ஆதாரம் இதோ :<br />"...விஸ்வநாதன்-ராம மூர்த்தியின் பெருமை.அவர்களுக்குப் பிறகுவந்து வர்த்தகரீதியில் வெற்றிபெற்ற இசையமைப்பாளர்கள் யாரும் இவர்களுக்கு இணையானவர்கள் இல்லை என்பது உண்மையே. " - அமுதவன்<br /><br />அமுதவன் அவர்களுக்கு தனது ரசிப்புக்கு உகந்ததாக இருக்கும் இசையை வைத்து ( விஸ்வநாதன் -ராமமூர்த்தி )எழுதுகிறார்.<br />அது இசை ஒப்பீடு அல்ல.<br />அப்படி அல்ல என்றால் தலைப்பை வேறுவிதமாக வைத்திருக்க வேண்டும்.<br />அப்படியும் இல்லை என்றால் முன்னவர்கள் இசையில் என்னென்ன துறைகளில் சாதனை செய்து உள்ளார்கள் என்ற பட்டியலாவது இருக்க வேண்டும்.அதுவும் இல்லை.வெறும் ரசிக மன நிலையில் எழுத நிறைய பேர் இருக்கிறார்கள்.<br />கட்டுரையின் அடிப்படை கரு இக்ளையராஜாவை மட்டம் தட்டுவதே!<br />அமுதவன் ஒரு நல்ல ரசிகராக இருக்கிறார்.சிவாஜிக்கு ,கண்ணதாசனுக்கு .....இருக்கட்டும்.<br />நல்ல இசை பற்றி எழுத இந்த தகுதி மட்டும் போதுமா ?<br /><br />1) தமிழில் டி.எம்.சௌந்தர ராஜன் பாடிய பாடல்கள்.<br /><br />2) பி.சுசீலாவின் பாடல்கள்.<br /><br />3) கண்ணதாசனின் பாடல்கள்<br /><br />4) சிவாஜிகணேசனின் பாடல்கள்<br /><br />5) எம்ஜிஆர் பாடல்கள்<br /><br />6) சந்திரபாபு பாடல்கள்<br /><br />7) பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்கள்<br /><br />8) எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல்கள்<br /><br />9) சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்<br /><br />10) டி.ஆர்.மகாலிங்கம் பாடல்கள்<br /><br />என்று பட்டியல் தந்திருக்கிறார். நல்லது .இளையராஜாவின் சிறப்பு என்னவென்றால் எந்த நடிகருக்கு ,எந்த பெரிய பாடகர் ,பாடகி பாடினாலும் அது "இளையராஜா பாட்டு "என்று தான் அறியபடுகிறது.நடிகர் ,பாடகர் ,இயக்குனர் என்பது எல்லாம் அதற்க்கு பிறகே.<br />இது தான் இளையராஜா நாட்டிய சாதனை.<br /><br /><br />தாஸ்<br />லண்டன் <br />21.02.2012<br /><br />எனது விரிவான பதில் பகுதி 1இல் உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-51294298626463172842012-02-20T07:38:19.563-08:002012-02-20T07:38:19.563-08:00வாருங்கள் ஆர்எஸ்கே...உங்களைப்போன்று பூரணமாக இசையைய...வாருங்கள் ஆர்எஸ்கே...உங்களைப்போன்று பூரணமாக இசையையும் திரைத்துறை பற்றிய சகல விஷயங்களையும் அறிந்தவர்கள் சொல்லுவதை ஏற்றுக்கொள்கிறேன். அதனால் இந்த விவாதத்தை இத்துடன் முடித்துவிட்டு அடுத்தவேலையைப் பார்ப்பதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும். ஆனாலும் இந்த இடத்திலும் சில வார்த்தைகள்...'பலர் பிடிவாதத்தோடு எதிராளியின் கருத்துக்களைப் புரிந்துகொள்ள மாட்டேன் என்று நிற்கிறார்கள்' என்கிறீர்கள். <br />இங்கே 'கருத்துக்கள்'கூட பிரச்சினை அல்ல. எந்த பாடாவதிக் கருத்துக்களை யார் வைத்துக்கொண்டிருந்தால் நமக்கென்ன பிரச்சினை? பிரச்சினை என்னவென்றால், இந்தியாவின் முதல் பிரதமரான மன்மோகன் சிங் அவர்களே என்று யாராவது ஆரம்பித்தால், 'அய்யா தவறு. முதல் பிரதமரே நேருதான். அதற்கடுத்த நிறைய பிரதமர்கள் வந்தார்கள். இந்திராகாந்தி போன்று மிகப்பிரபல பிரதமர்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள்' என்று பாலபாடத்தைச் சுட்டிக்காட்டுவதில்லையா அதைத்தான் செய்திருக்கிறேன்.<br />தோற்று ஓடுவதற்கெல்லாம் இங்கே வாய்ப்பே இல்லை. ஐம்பது வருடங்களாக மகா மகா மேதைகளெல்லாம் சேர்ந்து உருவாக்கி வைத்திருக்கும் பொக்கிஷமாக ஏராளமான தமிழ்ப்பாடல்கள் நம்மிடம் நிறைய இருக்கின்றன. அவை பற்றிய தகவல்களும் குறிப்புக்களும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.யார் என்னவிதமான வாதங்களைக் கொண்டுவந்தாலும் அவற்றை சந்திக்கும் வல்லமையும் இருக்கிறது. இது ஒன்றும் சவடால்தனமான வாதம் கிடையாது. மகாகலைஞர்களை ஒன்றுமேயில்லை என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்குச் சிலவற்றைச் சுட்டிக்காட்டும் சாதாரண வேலையைத்தான் செய்கிறேன். இணையத்தில் மட்டுமே சிலவற்றைப் படித்துவிட்டு இவ்வளவுதான் உலகம் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இதைத்தாண்டியும் நிறைய இருக்கிறது என்று சொல்வது தவறாகாது அல்லவா?<br />ஆனாலும் தங்கள் கோரிக்கையை ஏற்று இத்துடன் அமைகிறேன்.வணக்கம்!Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-84824303477735279742012-02-20T06:54:05.854-08:002012-02-20T06:54:05.854-08:00இந்தப் பின்னூட்டங்களைப் பார்க்கும்போது ஒன்று தெரிக...இந்தப் பின்னூட்டங்களைப் பார்க்கும்போது ஒன்று தெரிகிறது. வாதம் செய்யத்தொடங்கியவர்கள் பலர் பிடிவாதத்தோடு எதிராளியின் கருத்துக்களைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்று நிற்கிறார்கள். தூங்குபவர்களை எழுப்பலாம்-தூங்குவதுபோல நடிப்பவர்களை? எல்லாவற்றையும் ரசியுங்கள் என்று சொன்னால் நான் இவரைமட்டுமே ரசிப்பேன் என்றால் நஷ்டம் யாருக்கு? அமுதவன் அவர்களே, இத்தோடு இந்த வாதங்களுக்கு முடிவு கட்டுவது நல்லது என நினைக்கிறேன். உடனே சிலர், நீங்கள் தோற்று ஓடுகிறீர்கள் என்று புதிய வாதம் ஆரம்பிப்பார்கள்- அவர்களுக்கு வேண்டியது அதுதான்! கொடுத்துவிடுஙளேன்! காரணம் சொல்லிவிட்டோம்-(இனி நம்)காரியங்களைக் கவனிப்போம்!R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-39695856025136848072012-02-19T07:14:08.772-08:002012-02-19T07:14:08.772-08:00நண்பரே இதைவிடவும் நல்ல இனிமையான இளையராஜா இசையமைத்த...நண்பரே இதைவிடவும் நல்ல இனிமையான இளையராஜா இசையமைத்த பாடல்களின் பட்டியலை என்னாலேயே தரமுடியும். உங்கள் பட்டியலின் ஆரம்பமே இதுதான் என்றால் நீங்கள் இன்னமும் இளையராஜாவின் இசையையே சரிவர தெரிந்துகொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். பிரச்சினை இளையராஜா சில நல்ல இனிமையான பாடல்களைப் போடவில்லையா என்பதல்ல. மறுபடியும் நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். தயவுசெய்து என்னுடைய கட்டுரையை முழுமையாகப் படித்துவிட்டு வாதம் செய்ய வாருங்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-29687370049063590082012-02-19T03:07:43.806-08:002012-02-19T03:07:43.806-08:00பெண் குரல் (தனி) பாடல்கள்
----------------------...பெண் குரல் (தனி) பாடல்கள் <br />------------------------------------<br /><br />1. மச்சான பார்த்திங்களா<br />2. காற்றில் எந்தன் கீதம் <br />3.நானே நானா யாரோதானா<br />4. நின்னுக்கோரி வரணும் <br />5. பாடறியேன் படிப்பறியேன் <br />6. நித்தம் நித்தம் நெல்லு சோறு <br />7.சின்னக் குயில் பாடும் பாட்டு கேட்குதா <br />8. பூவே பூ சூடவா<br />9.வரம் தந்த சாமிக்கு <br />10. யமுனை யாற்றிலே <br /><br />இந்தப் பாடல்களுக்கு இணையாக எதை சொல்லுவீர்கள். இது சவால் விடும் நோக்கமல்ல. அப்படிப்பட்ட பாடல்கள் இருந்தால் தெரிந்துகொள்ள உதவும். <br /><br />நீங்கள் இணையாக கொடுக்கும் பாடல்களை இசை நுணுக்கத்துடன் ஒப்பிட இசை ஞானம் உள்ளவர்கள் திறன் ஆய்வு செய்தால் பல பரிமாணங்களை தெரிந்து கொள்ளலாம். <br /><br />-------------------------------<br />தறுதலை <br />(தெனாவெட்டுக் குறிப்புகள் - பிப்'2012)தறுதலைhttps://www.blogger.com/profile/02047950253108172443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-63070272086849805132012-02-16T23:01:43.675-08:002012-02-16T23:01:43.675-08:00அப்படியே உங்களுடைய பட்டியலின்போது இதனையும் கொஞ்சம்...அப்படியே உங்களுடைய பட்டியலின்போது இதனையும் கொஞ்சம் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இது அடுத்த பதிவான 'நன்றி நண்பர்களே நன்றி' என்ற பதிவில் எழுதியது. உங்களுடைய பட்டியலுக்கு உதவுமே என்பதற்காக நினைவுபடுத்துகிறேன். நீங்கள் சொன்னமாதிரியே பத்துப் பத்து பாடல்களைப் பட்டியலிடுங்கள் இந்த அடிப்படையில்...நன்றி. நாம் பிறகு பேசுவோம்.<br />விஸ்வநாதன்-ராமமூர்த்தியைத் தள்ளிவைத்துவிட்டுப் போவது அவ்வளவு சாதாரணமில்லை. ‘கார் உள்ளளவும் கடல் உள்ளளவும்’ என்று சொல்வார்களே அப்படி நிற்கக்கூடிய பாடல்கள் சில உள்ளன.<br /><br />1) தமிழில் டி.எம்.சௌந்தர ராஜன் பாடிய பாடல்கள்.<br /><br />2) பி.சுசீலாவின் பாடல்கள்.<br /><br />3) கண்ணதாசனின் பாடல்கள்<br /><br />4) சிவாஜிகணேசனின் பாடல்கள்<br /><br />5) எம்ஜிஆர் பாடல்கள்<br /><br />6) சந்திரபாபு பாடல்கள்<br /><br />7) பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்கள்<br /><br />8) எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல்கள்<br /><br />9) சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்<br /><br />10) டி.ஆர்.மகாலிங்கம் பாடல்கள்<br /><br />11) வாலி பாடல்கள்..........................................இன்னமும் எம்கேடி பாடல்கள், பட்டுக்கோட்டை பாடல்கள், கே.வி.மகாதேவன் பாடல்கள், மருதகாசி பாடல்கள், ஏ.எம்.ராஜா பாடல்கள், சிதம்பரம் ஜெயராமன் பாடல்கள் கே.பி.சுந்தரம்பாள் பாடல்கள்......இப்படியெல்லாம் வகைப்பிரித்துக்கொண்டே போகலாம். குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்பதற்காக இவற்றை மட்டும் இங்கே சொல்லியிருக்கிறேன். இந்தப் பாடல்களையெல்லாம் விட்டுவிட்டு ‘அப்படியே’ இளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் ஓடிவந்துவிட வேண்டுமா? முறையாகுமா? தகுமா?<br /><br />என்ன பேசுகிறீர்கள்?<br /><br />இவர்களிலெல்லாம் எங்கிருந்து இளையராஜாவையும் ரகுமானையும் தேடுவது?<br /><br />இவைதாம் ஐம்பது ஆண்டுகாலமாக தமிழன் நேசித்தும் சுவாசித்தும்வரும் பாடல்கள். சிவாஜி எம்ஜிஆர் கண்ணதாசன் டிஎம்எஸ் பி.சுசீலா இல்லாமல் எந்தப் பாடல் தமிழ்ப் பாடல்? பேசுவதற்கு வாய் கூச வேண்டாமா?Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-19335502048160596112012-02-16T06:52:04.546-08:002012-02-16T06:52:04.546-08:00நண்பரே மீண்டும் முதலிலிருந்து தொடங்கவேண்டிய நிர்ப்...நண்பரே மீண்டும் முதலிலிருந்து தொடங்கவேண்டிய நிர்ப்பந்தத்தையே உங்கள் கருத்துக்கள் ஏற்படுத்துகின்றன. உங்களுடைய கேள்விகளுக்கான பதில்கள் என் பதிவிலேயே இருக்கின்றன.'காலத்தால் அழியாத பாடல்களாக நீங்கள் போட்டிருக்கும் ஒவ்வொரு பாடலுக்கும் இணையாக பத்து பாடல்களை கொடுக்கமுடியும்' என்கிறீர்கள் .தயவுசெய்து கொடுங்கள். பிறகு தொடர்ந்து பேசுவோம்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-33483985868738466372012-02-14T03:25:43.172-08:002012-02-14T03:25:43.172-08:00நேற்றைய நீட்சியே இன்றாக இருக்கிறது. இன்றாக இருப்பத...நேற்றைய நீட்சியே இன்றாக இருக்கிறது. இன்றாக இருப்பதுவே நாளையாக நீளும். இது நியதி.<br /><br />இங்கே நாம் பேசுவது மரபுகளை மீறியவர்களை அல்லது புது மரபுகளை உருவாக்கியவர்களை. உங்கள் கட்டுரையிலேயே சிவாஜியிலிருந்துதான் நடிப்பின் இலக்கணம் தொடங்குகிறது. அதுதான் சரி. மரபு என்று சொல்லிக்கொண்டு பாகவதர்களிளிருந்து தொடங்க முடியாது. <br /><br />பண்டைய இலக்கியங்களுக்குப் பிறகு பாரதியில்தான் புதிய மரபு உருவாகிறது. இங்கே மரபு என்று சீட்டுக்கவிகளை கூட்டு சேர்க்க முடியாது.<br /><br />எனக்கு இசை அறிவு கிடையாது. பிடித்த பாடல்களை கேட்பேன். அதன்படி, சலில் சௌத்ரியின் 'திங்கள் மாலை வெண்குடையான்' தொடங்கி 'கொலை வெறி' வரை பத்து பாடல்களை பட்டியலிட்டால் அதில் ஏழு பாடல்கள் இளையராஜவுடையதாக இருக்கிறது. இது என் தனிப்பட்ட விருப்பமே.<br /><br />என்னைக்குத் தெரிந்து தமிழில் திருடி இந்தியில் போடப்பட்ட காலம் இளையராஜவிளிருந்துதான் தொடங்குகிறது. அதற்கு முன் இந்தி திணிப்பு எதிர்ப்பு உச்சத்தில் இருந்த காலத்திலும் அவப்போது இந்திப் பாடல்கள் தமிழில் நேரடியாகவும் , மறைமுகமாகவும் ஊடுருவிக்கொண்டிருந்தன. <br /><br />காலத்தால் அழியாத பாடல்களாக நீங்கள் போட்டிருக்கும் ஒவ்வொரு பாடலுக்கும் இணையாக பத்து பாடல்களை கொடுக்க முடியும்.<br /><br />திரை இசையில் புதிய மரபை உருவாக்கியவர் இளையராஜா மட்டுமே. இளையராஜவிளிருந்துதான் முன்னும் பின்னும் பார்க்க வேண்டும். இதை சரியாக செய்ய வேண்டுமென்றால், இசையின் பல பரிமாணங்களை பட்டியலிட்டு, அதில் ஒவ்வொன்றிலும் யார் எப்படி செய்திருக்கிறார்கள் என்று அலசலாம். அதற்கான புற sUzalkaLaiyum கணக்கில் கொண்டு செய்ய வேண்டும். இதை இரண்டு பதிவுகளில் அடைக்க முடியாது. இல்லையென்றால் ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தின் அளவுகோளாகவே அமையும். <br /><br />பி.கு.: இதையும் என் கருத்தாக சொல்லியே ஆக வேண்டும். இசையில் மட்டும்தான் ஞானி. மற்றபடி வெறும் சாணி.<br /><br />-----------------------------<br />தறுதலை<br />(தெனாவெட்டுக் குறிப்புகள் - பிப் -'2012)தறுதலைhttps://www.blogger.com/profile/02047950253108172443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-21403957944839259742012-02-14T02:45:53.445-08:002012-02-14T02:45:53.445-08:00//சுப்புடு சொன்ன பதில்; தேவா//
என்ன கொடுமை சரவணன்...//சுப்புடு சொன்ன பதில்; தேவா//<br /><br />என்ன கொடுமை சரவணன்? <br />ஏனிந்த கொலை வெறி உங்களுக்கு?<br /><br />-----------------------------<br />தறுதலை<br />(தெனாவெட்டுக் குறிப்புகள் - பிப் -'2012)தறுதலைhttps://www.blogger.com/profile/02047950253108172443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-69544029274766944852012-01-10T11:20:02.205-08:002012-01-10T11:20:02.205-08:00No sir, I pasted a long post, totally 5 paragraphs...No sir, I pasted a long post, totally 5 paragraphs but the blogger said that the comment exceeded the limit, so i posted in 2 parts. but the 2nd part didn't appear till now. <br /><br />See the below link, that has my whole comment<br /><br />http://pastebin.com/1GutaxJ3tekvijayhttps://www.blogger.com/profile/14650985045855131827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-63125966816512343942012-01-10T04:58:18.412-08:002012-01-10T04:58:18.412-08:00சிலிகான் சில்லு, நீங்கள் சரிவர கவனிக்கவில்லையா? மே...சிலிகான் சில்லு, நீங்கள் சரிவர கவனிக்கவில்லையா? மேலே இருப்பது உங்களுடைய இரண்டாவது கமெண்ட்தானே?Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-75897796567323455262012-01-10T04:57:02.679-08:002012-01-10T04:57:02.679-08:00கோவி.கண்ணன் தலைமுறைகள் தொடர்ந்தால் யாரும் சாதனையாள...கோவி.கண்ணன் தலைமுறைகள் தொடர்ந்தால் யாரும் சாதனையாளர் ஆகமுடியாதா என்ன? சாதிப்பவர்கள் எல்லாரும் சாதனையாளர்களே. தவிர, தேவாவைப் பற்றி ஒரு விஷயம் சொல்லலாமென்று நினைத்தேன். இருக்கின்ற தகராறுகள் போதாதென்று புதிய விவாதங்களுக்கு எதற்கு வழியேற்படுத்த வேண்டுமென்பதற்காகத் தவிர்த்துவிட்டேன். நீங்கள் தேவாவையும் தொட்டதனால் இதனைச் சொல்கிறேன். இளையராஜா உச்சத்திலிருந்த சமயம் பிரபல விமரிசகர் சுப்புடுவை இன்றைய இசையமைப்பாளர்களில் சிறந்த இசையமைப்பாளராக யாரைக் கருதுகிறீர்கள்? என்று கேட்டார்கள்.<br />சுப்புடு சொன்ன பதில்; தேவா.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-3112282466693775782012-01-09T02:47:32.410-08:002012-01-09T02:47:32.410-08:00my 2nd comment is missing....my 2nd comment is missing....tekvijayhttps://www.blogger.com/profile/14650985045855131827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-30354488063865869592012-01-08T19:22:58.621-08:002012-01-08T19:22:58.621-08:00நன்றாக இருக்கிறது, தலைமுறைகள் தொடர்கின்றன, இதில் ச...நன்றாக இருக்கிறது, தலைமுறைகள் தொடர்கின்றன, இதில் சாதனையாளர் இவர் தான் என்று சொல்ல ஒன்றும் இல்லை, தேவா கூட 90 - 2000 ஆண்டுகளில் பெரும் சாதனைகள் புரிந்துள்ளார்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com