tag:blogger.com,1999:blog-5165985521656307434.post6344098595484152243..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: ஜெயலலிதா – கருணாநிதியின் கலையுலக அரசியல்Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-36476070431460998402013-01-22T07:12:16.745-08:002013-01-22T07:12:16.745-08:00'எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக்...'எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் என்பது அவசியம் அல்ல;சிலருக்கு பதில் சொல்லவேண்டிய நேரத்தில் புதிதாக எதையாவது படிக்கலாம். அல்லது புதிதாக எதையாவது எழுதலாம்'என்று அடிக்கடி சுஜாதா சொல்லுவார். அது ஏனோ இப்போது ஞாபகம் வருகிறது. தங்கள் வருகைக்கு நன்றி அறிவன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-25038703902466202442013-01-19T19:06:39.452-08:002013-01-19T19:06:39.452-08:00முனுசாமி என்று தவறான பெயர் எழுதி விட்டேன். அவரது ப...முனுசாமி என்று தவறான பெயர் எழுதி விட்டேன். அவரது பெயர் இராமையா என்று நினைக்கிறேன்.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-76917112601516174842013-01-19T19:04:41.567-08:002013-01-19T19:04:41.567-08:00அடுத்த படி நினைவாற்றலுக்கு பத்ம விருது...அமுதவன், ...அடுத்த படி நினைவாற்றலுக்கு பத்ம விருது...அமுதவன், என்னால் சிரிக்காமலிருக்க முடியவில்லை..எண் கவனகம் திருக்குறள் முனுசாமி பற்றிக் கேள்விப்ப்பட்டிருக்கிறீர்களா?<br /><br />சிவகுமாருக்கு நினைவாற்றலுக்காக பத்ம விருது கொடுக்க வேண்டும் என்றால் அவருக்கு என்ன கொடுப்பது?!<br /><br />உங்களுடைய பதில்கள் சிறுபிள்ளை வாதம் போலிருக்கிறது ! <br />:)✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-27716574782088066052013-01-19T18:59:10.423-08:002013-01-19T18:59:10.423-08:00ஒரு விமர்சகருக்கு இடது வலது என்று சாயாத பார்வை வேண...ஒரு விமர்சகருக்கு இடது வலது என்று சாயாத பார்வை வேண்டும். இது தனது நண்பர்களையோ அல்லது வேண்டயவர்களையோ விமர்சிக்கும் வேளையிலும் பொருந்தும்.<br /><br />நீங்கள் நடிகர் சிவகுமாருடன் பழக்கம் உள்ள, நண்பர் என்று சொல்லத்தக்க அளவில் உள்ளவர் என்பது உங்கள் பல பதிவுகளில் தெரிகிறது.உங்களது நட்பைப் பாராட்டும் நேரத்தில் ஒரு விமர்சகராக நீங்கள் சாய்கிறீர்கள் என்பதை சுட்டாமல் இருக்க முடியவில்லை.<br /><br />நடிகர் சிவகுமார் ஒரு பன்முகத் திறமையாளர்;ஆனால் எந்த ஒரு துறையிலும் ஒரு சாதனையாளர் அல்ல.<br /><br />நடிகர் என்று எடைபோட்டால் அவரை விட சந்திரபாபு கூடத் திறமையானவர்; ஒரு பேச்சாளர் என்று எடுத்தால் அறிவொளியின் அருகில் கூட வரமாட்டார்; ஒவியராக நீங்கள் கோபுலுவுக்கு அருகில் சிவகுமாரைக் கொண்டு செல்வது, எனக்குச் சிரிப்பை வரவழைக்கிறது.இதில் சிவகுமாரின் ஓவியங்களைப் பார்த்திருக்கிறாயா என்று என்னைக் கேட்கிறீர்கள்..நீங்கள் கோபுலுவின் ஓவியங்களைக் கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?<br /><br />சிவகுமாரின் ஓவியங்களை கோட்டோவிய வடிவங்களில்,நுண்மைச் சிறப்பு வகையில் சேர்க்கலாம்;கோபுலு நீர்நிறம் மற்றும் எண்ணெய்வண்ண ஓவியங்களில்-வாட்டர் கலர் மற்றும் ஆயில் பெயிண்டிங்கில்- நுண்மை வகையில் உச்சங்களைத் தொட்டவர்.(அவரது ஓவியங்களை பலவற்றைப் பார்க்க நேரிடா விட்டாலும் நீங்கள் ஆனந்த விகடன் ஆசிரியர் பாலு கோபுலுவைப் பற்றி எழுதிய கட்டுரையைத் தேடி வாசியுங்கள்!). சிவகுமார் ஒரு நல்ல ஓவியர், அவ்வளவே.<br /><br />ஒரு நல்ல தந்தை;ஒழுக்கத்தைக் கடைப்பிடித்த நடிகர் என்பதெல்லாம் 'சாதனை' என்ற வட்டத்தில் அவரைச் சேர்ப்பதற்குப் பொருத்தமானவை அல்ல.<br /><br />சிவகுமாரை எனக்கும் பிடிக்கும்; ஒரு 'பேக்கேஜ்' ஆக அவர் ஒரு வியப்பை ஏற்படுத்தும், ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மனிதர். ஆனால் நிச்சயம் சாதனையாளர் அல்ல.<br /><br />இதை நீங்கள் வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை.எனினும் சொல்லாமலிருக்க முடியவில்லை.<br /><br />விமர்சகராக அறியப்பட முடிவுசெய்தால் அதில் உச்ச பட்ச நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எனது கொள்கைப்பாடு காரணமாகவே இதை எழுத நேர்ந்தது. நன்றி.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-61993938830951927982012-09-21T00:49:11.199-07:002012-09-21T00:49:11.199-07:00நான் நேற்று இட்ட எந்தவித அநாகரிகமான வார்த்தைக்கும்...நான் நேற்று இட்ட எந்தவித அநாகரிகமான வார்த்தைக்கும் பயன்படுத்தாத YOUTUBE லிங்க் போட்ட என்னுடைய பின்னோட்டத்தை நீக்கியதன் மூலம் வெளிபட்ட தங்களின் நேர்மையை கண்டு நான் வியர்ப்படைய வில்லை. நான் எதிர்பார்த்தது தான். MUKUNTHANnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-77795519343363783932012-09-04T08:46:00.830-07:002012-09-04T08:46:00.830-07:00வாருங்கள் காரிகன். நீங்களும் வந்து நாளாச்சே உங்கள்...வாருங்கள் காரிகன். நீங்களும் வந்து நாளாச்சே உங்கள் கருத்துக்கள் என்னவாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள நானும் ஆவலாகவே இருந்தேன்.<br />இளையராஜா அந்த நிகழ்வில் என்ன பேசினார் என்பது பற்றிய முழு தகவல் கிடைக்காததால் அந்த நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்புக்குப்பின் எழுதலாம் என்றிருக்கிறேன்.(அநேகமாக தீபாவளி அன்றைக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகலாம்)<br /><br />இதில் குமுதம் கேள்விபதில்கள் வேறு. இளையராஜாவின் பதில்கள் எல்லாமே நன்றாகவும் சரியாகவும் இருக்க கேள்வி கேட்கும் நபர்கள் பற்றித்தான் கவலையாயிருக்கிறது.நீங்கள் எழுதவேண்டியிருப்பதை எழுதுங்கள். நிறையப் பேசுவோம்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-62524039122952523222012-09-04T08:37:49.559-07:002012-09-04T08:37:49.559-07:00கண்பத் அவர்களின் இடைவெளிக்குப் பின்னான வருகைக்கு ந...கண்பத் அவர்களின் இடைவெளிக்குப் பின்னான வருகைக்கு நன்றி. உங்கள் பின்னூட்டத்தில்...'இறைவனுடைய பரிபூரண அருளுடன் நம்மை உய்விக்க நம்மிடையே தோன்றி வாழ்ந்து மறையும் இந்த மகா கலைஞர்களுக்கு நாம் என்ன அய்யா விருது அளிப்பது? அவர்கள் பொற்பாதங்களைத் தொட்டு வணங்குவதைத்தவிர'....என்ற ஒரு வரி இருக்கிறது பாருங்கள். இந்த வார்த்தைக்கு இணையான இன்னொரு விமரிசனம் இந்தக் கட்டுரைக்கு வர வாய்ப்பே இல்லை என்றே படுகிறது. தங்களின் அற்புத வரிகளுக்கு நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-57966623141944266192012-09-04T06:53:33.943-07:002012-09-04T06:53:33.943-07:00அடிக்கடி எட்டிப்பார்க்கும் உங்கள் பக்கத்திற்கு சில...அடிக்கடி எட்டிப்பார்க்கும் உங்கள் பக்கத்திற்கு சிலநாட்களாக வராமல் இருந்தேன்.காரணம் நீங்கள் புதிதாக எதையும் எழுதவில்லை என்பதால்.தற்போது வந்தபோது உங்களின் ஜெயலலிதா கருணாநிதி தலைப்பிட்ட பதிவை காணமுடிந்தது.சோடைபோகாத வழக்கமான கண்ணியமான நடையில் சிறப்பான பதிவை மீண்டும் எழுதி இருக்கிறீர்கள்.ஜெயலலிதாவை பற்றி பலவிதமான விமர்சனங்கள் இருந்தாலும் இப்போது அவர் எம் எஸ் வி,டி கே ஆர் அவர்களுக்கு எடுத்துள்ள பாராட்டு விழா அரசியல் தாண்டி விமர்சங்கங்களை வென்று விட்ட ஒரு அரிதான நிகழ்வு.இந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய கருத்துக்கள் உண்மையானவை. கிளாசிக் பாடல்களை விரும்பும் எவரும் மனதில் வைத்திருக்கும் வார்த்தைகளையே அவர் பேசிஇருக்கிறார்.இத்தனை காலமாக தமிழ் உள்ளங்களுக்கு இனிய சுகமான தாலாட்டு போன்ற பல அற்புதங்களை அனாசயமாக கொடுத்துள்ள எம் எஸ் வி அவர்களை பழங்கஞ்சி என்று சில அறிவிலிகள் ஓரங்கட்டும் இந்த வேளையில் அவர் இதை செய்திருப்பது கண்டிப்பாக பாராட்டப்படவேண்டிய ஒன்று. இந்த நிகழ்ச்சி நடந்த பிறகு திரு அமுதவன் என்ன எழுதப்போகிறார் என்று நான் காத்திருந்தேன்.ஜெயலலிதாவை பற்றி நல்லவிதமாக எழுதினால் பார்ப்பனீய ஆதரவாளன் என்று வண்ணம் பூசும் சில அரசியல் கோமாளிகள் இணையத்தில் நிறையவே உண்டு.எப்படி இளையராஜா ஒருத்தர்தான் என்று மார் தட்டும் சில ஞான சூனியங்கள் இங்கே அலைந்துகொண்டிருக்கின்றனவோ அதைப்போலவே.நல்ல காரியத்தை ஒருவர் செய்யும் போது அதை பாராட்டினால் அதையும் குதர்க்கமாக சாடை பேசும் மஞ்சள்காமாலை கண் கொண்ட இவர்களை அப்படியே ஒரு ஓரமாக புறந்தள்ளி விடுங்கள். இந்த நிகழ்ச்சியில் திரு இளையராஜா என் இசை எம் எஸ் வி அவர்கள் போட்ட பிச்சை என்று சொன்னது அடிக்கோடிட்டு எழுத வேண்டிய ஒரு உண்மை. மீண்டும் நிறைய எழுத வேண்டி இருப்பதால் தற்போதைக்கு வெளியே செல்கிறேன். நன்றி அமுதவன் அவர்களே.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-70856821414749978402012-09-03T08:24:59.040-07:002012-09-03T08:24:59.040-07:00அன்புள்ள அமுதவன்,
பல மாதங்களுக்குப்பிறகு உங்களுடன...அன்புள்ள அமுதவன்,<br /><br />பல மாதங்களுக்குப்பிறகு உங்களுடன் மீண்டும் அளவளாவுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.ஒரு அரிய அற்புத பதிவிற்கும் நன்றி.<br /><br />காட்டில், எண்ணிக்கையில் மிகுந்த நரிகளும்,மான்களும்,ஆடு மாடுகளும் சேர்ந்து விருது வழங்கும்போது, அது ஏன் சிங்கத்திற்கும்,புலிக்கும் கொடுக்கப்படவில்லையென வருத்தப்படுவது தவறன்றோ?.<br /><br /> அஹிம்சை என்பதையும் ஒரு ஆயுதமாக பயன்படுத்தி எந்த போராட்டத்திலும் வெற்றி பெறலாம் என மானிட இனத்திற்கே கற்பித்த நம் தேசப்பிதாவிற்கே சமாதானத்திற்கான நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை எனும் ஒரு எடுத்துக்காட்டு போதாதா இந்த விருதுகளின் லட்சணத்தை நமக்குப்புரியவைக்க??<br /><br />சுதேசமித்திரன் நாளிதழ் 1910 களில் நடத்திய ஒரு கவிதைப்போட்டியில் முதல் பரிசு யாரோ ஒருவருக்கு கிடைத்தது.இரண்டாம் பரிசு சுப்பிரமணிய பாரதி எனும் கவிஞர் எழுதிய "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்று தொடங்கும் கவிதைக்கு கிடைத்தது.<br /><br />இறைவனுடைய பரிபூரண அருளுடன், நம்மை உய்விக்க நம்மிடையே தோன்றி, வாழ்ந்து, மறையும் இந்த மகா கலைஞர்களுக்கு நாம் என்ன அய்யா விருது அளிப்பது,அவர்கள் பொற்பாதங்களை தொட்டு வணங்குவதை தவிர? <br />சிவாஜியோ,கண்ணதாசனோ,விஸ்வனாதனோ,<br />இளைய ராஜாவோ <br />சுசீலாவோ,எந்த விருதிற்கும் மேம்பட்டவர்கள்.<br />அப்பாற்பட்டவர்கள்<br />தமிழ் பேசும் பலகோடி இல்லங்களில் எந்த ஒரு இல்லத்திற்கும்,எந்த நாளிலும்,எந்நேரத்திலும் முன் அறிவிப்பின்றி இவர்களில் எவரேனும் சென்று அழைப்பு மணியை ஒலிக்கட்டும்.கதவைத்திறக்கும் இல்லத்தலைவர்/தலைவி முகத்தில் இவரைப்பார்த்தவுடன் கோடி சூரியன் உதித்தது போன்ற ஒளியும், கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகுமே,அதைவிடவா ஒரு உயர்ந்த விருது இருக்கப்போகிறது?<br /><br />ஆம்!இன்னும் பத்ம விருதுகளுக்கு நாகேஷ்,கண்ணதாசன்,விஸ்வநாதன் ஆகியோர் கிடைக்கத்தான் இல்லை.<br /><br />அடுத்து சிவகுமார்.இவருடைய சாதனை என்ன என்று வினவும் சில நண்பர்களுக்கு என் பதில்:<br />தலைவாழை இலையில் இருபது பதார்த்தங்களுடன் தொடர்ந்து தினந்தோறும் பரிமாறப்பட்ட விருந்தை ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, பல வருடங்கள் கையே வைக்காமல் வைராக்கியமாக இருந்த சாதனை ஒன்று போதாதா? தான் பனைமரத்தின் கீழ் அமர்ந்து,கலயத்தில் குடித்தாலும் அது பாலே என மற்றவர்களுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை ஏற்படுத்திய சாதனை ஒன்று போதாதா?<br />ஆசிரியர்களே ஒழுக்கமற்று காணப்படும் இக்காலத்தில் ஒழுக்கத்திற்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் நடிகர் அல்லவா இவர்!<br /><br />இப்பொழுது கருணாநிதி!<br />ஒரு எண்ணை, எத்தனை எண்களுடன் பெருக்கினாலும் அவைகளில் ஒன்று பூஜ்யம் என்றால்,விடையும் பூஜ்யமல்லவா?<br />கருணாநிதி என்ற மனிதனிடம் இருக்கும் பல திறமைகளும்,சாதுர்யங்களும், அவர் நேர்மையற்றவர்,பொய்யர்,சுயநலவாதி எனும் பூஜ்யங்களால்,வலுவிழந்து,மதிப்பிழந்து அவரையே பூஜ்யமாக்க்கி விட்டதன்றோ!<br /><br />நண்பர் அமுதவனுக்கு மீண்டும் நன்றி.<br />Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-13157292643737744682012-09-03T08:08:06.775-07:002012-09-03T08:08:06.775-07:00வவ்வால் உங்களை ராஜநடராஜன் நிறையப் புகழ்ந்து படித்த...வவ்வால் உங்களை ராஜநடராஜன் நிறையப் புகழ்ந்து படித்திருக்கிறேன். பல தளங்களில் தங்களின் அறிவுசார் விமரிசனங்களைப் படித்திருக்கிறேன். சில விவகாரங்களை உண்டுபண்ணும் என்றபோதிலும் உங்களுக்கென்று ஒரு ஸ்டைலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.சாகித்ய அகாடமி கிட்டத்தட்ட நிறையப்பேருக்கு கிடைத்திருக்கிறது. நான் சொல்ல வந்தது மாநில அரசின் விருதுகள் அல்லது மாநில அரசு சிபாரிசு செய்து வாங்கித்தரும் விருதுகள்....ஜெயகாந்தனுக்கு மட்டுமல்ல அதற்கும் முன்பே அகிலனுக்கும் ஞானபீடம் கிடைத்திருக்கிறது. அகிலன் ஞானபீட விருது பெற்றபோது அவருடன் சென்றவர்கள் அவரது மகன் அகிலன் கண்ணனும் அடியேனும். இவையெல்லாம் மாநில அரசின் சிபாரிசுகள் இல்லாமல் வழங்கப்பட்டவையே. இந்த விஷயங்களில் மாநில அரசின்(திமுக,அதிமுக ஆட்சிபீடம் ஏறிய பிறகு)போக்கு என்ன என்பதுதான் என்னுடைய பதிவின் அடிநாதம்.<br />இன்றைய இளையதலைமுறை நடிகர்களில் சூர்யா மிகத்திறமையுடனும் அதைவிடவும் மிகப்பெரும் உழைப்புடனும் நடித்துவரும் ஒரு நடிகர்.சமூக அளவில் மிகவும் மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் விளம்பர வெளிச்சம் தாண்டி செயல்படும் நல்ல உள்ளத்துக்கு சொந்தக்காரர். சூர்யா மட்டுமல்ல, கார்த்தியும் நிச்சயம் பேசப்படப் போகிறவர்களே.<br />தங்களின் வருகைக்கு நன்றி மட்டுமல்ல சந்தோஷமும்கூட. தாங்கள் அனுப்பியுள்ள இணைப்புகளைப் படிக்கிறேன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-37076115805907215862012-09-02T23:06:06.481-07:002012-09-02T23:06:06.481-07:00அமுதவன் ,
உங்கள் வெகுஜனப்பத்திரிக்கை அனுபவத்தின் ...அமுதவன் ,<br /><br />உங்கள் வெகுஜனப்பத்திரிக்கை அனுபவத்தின் அடிப்படையில் நன்றாக கட்டுரை படைத்துள்ளீர்கள், நீங்கள் சொன்னது போல கலையுலகும், அரசியலும் இணைந்தது ,அரசியல்,கலை மட்டுமில்லாமல் மக்களையும் இன்றளவும் பாதித்து வருகின்றது.<br /><br />எம்.எஸ்.விக்கு பத்மஶ்ரீ முதல் எவ்வித தேசிய விருதும் கிடைக்கவில்லை என்பதனை விகடனில் எஸ்.ரா எழுதிய கட்டுரையின் அடிப்படையில் நான் முன்னர் பதிவிட்டேன்,<br /><br /><a href="http://vovalpaarvai.blogspot.in/2007/06/blog-post_21.html" rel="nofollow">வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: இன்று உலக இசை நாள் மறக்கப்பட்ட இசை மேதை எம்.எஸ்.வி!</a><br />எம்.எஸ்.விக்கு விருது கொடுப்பட வேண்டும் என இணைய பெட்டிஷன் உருவாக்கி ஆதரவு திரட்ட சர்வேசன் என்றப்பதிவர் முயற்சித்தார்.<br /><a href="http://surveysan.blogspot.in/2007/08/blog-post_3515.html" rel="nofollow">Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: பத்மபூஷனும் விபூஷனனும் ஈயம் பித்தளைக்கு வாங்கரோமுங்கோ...</a><br /><br />//தமிழில் எந்தவொரு எழுத்தாளருக்காவது பத்மஸ்ரீ விருதோ பத்மபூஷண், பத்மவிபூஷண் போன்ற விருதுகளோ கிடைத்திருக்கின்றனவா?//<br /><br />கண்ணதாசன்னுக்கு 1980 இல் சேரமான் காதலி என்ன்ற நூலுக்கு சாகித்ய அகதமி விருது அளிக்கப்பட்டது,<br /><br />ஜெயகாந்தருக்கு 1972 இல் சாகித்ய அகதமி விருதும்,<br />2002 இல் ஞானபீட விருதும் <br />2009 இல் பத்மபூஷன் விருதும் கொடுக்கப்பட்டுள்ளது, (தமிழில் முதல் எழுத்தாளர்)<br />1996 - Fellow of Sahitya Akademi என மரியாதையும் செய்யப்பட்டுள்ளது.<br /><br /><br />வைரமுத்து ,சாகித்ய அகதமி மற்றும் பத்மஶ்ரீ பெற்றுள்ளார்.<br /><br />மேலும் நீங்கள் குறிப்பிட்ட பல எழுத்தாளர்களும் சாகித்ய அகதமி விருது பெற்றவர்களே.<br /><br />//ஒரு சூர்யாவையும் கார்த்தியையும் நமக்குத் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை.//<br /><br />இது என்ன சார் காமெடி, அப்படினா நடிகர் அல்லாதவர்கள் வாரிசுகள் என்றால் நடிக்கவே வர முடியாதா, இல்லை சூர்யாவும்,கார்த்தியும் தமிழ் கலையுலகின் பொக்கிஷங்களா?<br /><br />அவர்கள் நடிப்பதைப்பற்றி ஒன்றும் இல்லை, சிவகுமார் நடிகராகவில்லை என்றால் அவர்களை நடிகர்களாக தமிழகம் பெற்றிருக்காது மிகப்பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பது போல பேசுவது மிகையான ஒன்றாக இருக்கு.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-46525338246454361142012-09-02T09:44:34.889-07:002012-09-02T09:44:34.889-07:00வாருங்கள் நடராஜன். எனக்கான பதிலை நீங்கள் சொல்லியிர...வாருங்கள் நடராஜன். எனக்கான பதிலை நீங்கள் சொல்லியிருப்பதற்கு நன்றி.<br />பதிவினை நன்றாக அலசியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். சிவகுமார் தாம் ஏன் ஓவியராகவே தொடரவில்லை என்பதை நிறைய தடவை அவராகவே சொல்லியிருக்கிறார். அவர் ஓவியராகவே தொடர்ந்திருந்தால் இன்றைக்கு மகாபலிபுரம் போகும் சாலையில் இருக்கும் ஓவிய கிராமத்தில் அங்கிருக்கும் ஒரு முப்பது ஓவியர்களுடன் தாம் வரையும் ஓவியங்களைச் சில ஆயிரம் ரூபாய்க்கு விற்றுக்கொண்டு யாருக்கும் தெரியாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்க வேண்டியிருந்திருக்கும். எப்போதாவது ஒரு விகடன் இதழில் குட்டி போட்டோவும் பேட்டியும் வந்திருக்கும். ஒரு சூர்யாவையும் கார்த்தியையும் நமக்குத் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-58036788988518334762012-09-02T09:30:37.156-07:002012-09-02T09:30:37.156-07:00பெயரிலி என்ற பெயரில் வந்திருக்கும் நீங்கள் யாரென்ற...பெயரிலி என்ற பெயரில் வந்திருக்கும் நீங்கள் யாரென்று தெரியவில்லை. ஆனாலும் இணையம் சார்ந்து திமுகழகம் இத்தனை நாட்களும் பெரிதாக கவலை இல்லாமல் இருந்து தற்போது அதன் உண்மாயான வீச்சு தெரிந்து கலைஞரே இணையத்தின் மீது கவனம் செலுத்துகிறார் என்கிற செய்தியைத் தொடர்பு படுத்தி இந்த பதிலையும் எடுத்துக்கொள்கிறேன்.<br />முதலாவதாக உங்கள் இறுதிப்பகுதியான 'நாசுக்கான ஜெ துதி சிறப்பாக உள்ளது' என்றிருக்கீறீர்கள். பதிவை நீங்கள் சரியாகப் படிக்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.அரசியல் ரீதியாக அம்மையார் மீது நமக்கு கருத்துவேறுபாடுகள் நிறைய உள்ளது- என்றுதான் ஆரம்பித்திருக்கிறேன்.<br />அதேபோல கலைஞரைப் பற்றிக்குறிப்பிடும்பொழுதும் அவருடைய கன்னியாகுமரி வள்ளுவர் சிலையை எல்லாம் வியந்து எழுதியதை எல்லாம் சௌகரியமாக விட்டுவிடுகிறீர்கள். நமக்கிருக்கும் பெரிய குறையே இங்கே கருத்துக்கள் என்றாலேயே ஒன்று ஜெவுக்கு முழுமையான அளவில் ஆதரவு -அதே சமயம் கலைஞரை மோசமான அளவுக்கு வெறுப்பது. அதே போல கலைஞரை முழுமையான அளவில் ஆதரிப்பது-அதே சமயம் ஜெவை முழுமையான அளவில் வெறுப்பது.. இப்படித்தான் இருக்கவேண்டும் என்றே நினைக்கிறார்கள்.<br />இது அந்தந்தக் கட்சிகளின் விசுவாசமான தொண்டர்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். எல்லாரும் இப்படியே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவுடைமை ஆகாது.<br />நடிகர்கள் மக்களுக்கு செய்த பங்களிப்பு என்ன? என்று கேட்கிறீர்கள். இதையும் கலைஞரை 'முழுமையாக'ஆதரிக்கும் நிலையில் இருந்துகொண்டு கேட்கிறீர்கள். இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்வதை விடவும் கலைஞரே நல்ல பதிலைச் சொல்லுவார். ஆரம்பத்தில் எம்ஜிஆரை, கே.ஆர்.ராமசாமியை,எஸ்எஸ்ஆரை,இன்னும் பல நடிகர்களை, பிறகு ராதிகாவை ஏன் இப்போது குஷ்புவை ஆதரிப்பவர் அவர்தானே? அவரது கழகம்தானே?<br />நான் குறிப்பிட்டிருக்கும் எத்தனைப்பேர் சமூகம் முன்னேற எழுதியிருக்கிறார்கள் என்று கேட்டிருக்கிறீர்கள். இலக்கியம் என்பது காலத்தையும் வாழ்க்கையையும் சமூகத்தையும் பிரதிபலிப்பதுதானே தவிர வெறும் நீதி நெறி சொல்லுவது என்று மக்களை ஏமாற்றிக்கொண்டிருப்பது அல்ல.<br />உங்கள் கருத்துப்படியே பார்த்தாலும் நீங்கள் நாபாவின் பல நாவல்களைப் படித்ததில்லை போலிருக்கிறது. நாபாவின் எழுத்துக்கள் எல்லாம் சமூகத்தை உயர்த்துவதற்காக எழுதியவைதாம். அகிலனின் பல நாவல்கள்(பால்மரக்காட்டினிலே, எங்கே போகிறோம்?) இந்த வகையைச் சார்ந்தவைதாம்.<br />கலைஞரை பதிவில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள்போக மற்ற பல விஷயங்களுக்கு ஆதரிப்பவன் நான். கவியரசர், சிவாஜி,மற்றும் பிரபாகரன் விஷயங்களில் அவருடைய நடவடிக்கைகளில் எனக்கு உடன்பாடில்லை. இதனைச் சொல்லவேகூடாது என்பது என்ன நியாயம்?Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-84038825177450014022012-09-02T09:02:20.343-07:002012-09-02T09:02:20.343-07:00மேற்கண்ட பதிலிலேயே உங்களுக்கான பங்கும் இருக்கிறது ...மேற்கண்ட பதிலிலேயே உங்களுக்கான பங்கும் இருக்கிறது அனானிமஸ்Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-83288639188758359502012-09-02T09:00:42.174-07:002012-09-02T09:00:42.174-07:00சங்கப்பலகை அறிவன் தங்களின் வருகைக்கு நன்றி. மற்ற வ...சங்கப்பலகை அறிவன் தங்களின் வருகைக்கு நன்றி. மற்ற விஷயங்களை ஒப்புக்கொண்டுவிட்டு சிவகுமார் விஷயத்துக்கு மட்டும் மாறுபடுகிறீர்கள். சிவகுமாரின் ஓவியங்களை அந்த மகாத்மா ஓவியத்தையும் கலைவாணர் மற்றும் சில ஓவியங்களையும் நேரடியாகப் பார்த்திருந்தால் இதுபோன்று சொல்லியிருக்கமாட்டீர்கள். கோபுலு போன்றவர்கள் வியக்கும் ஒரு ஓவியர் அவர். ஒரு ஓவியராக வாழ்க்கையைத் தொடங்கி நடிகராக வலம்வந்தவர் அவர். இங்கே ஒரு ஓவியராக அவரை முன்னிறுத்தவில்லையே என்று சொல்லலாம். ஒரு பன்முகத்திறமை கொண்ட அவர் இன்றைக்கு தமிழ் பண்பாட்டின் அடையாளமாக இருக்கிறார் என்பதைத்தான் எழுதியிருந்தேன்.<br />இயக்குநர் பாலச்சந்தர் ஒருமுறை சிவகுமார் பற்றிச்சொன்னார்; "நடிப்புக்கு இலக்கணம் சிவாஜிகணேசன். நடிகர்களுக்கு இலக்கணம் சிவகுமார்"<br />மற்ற மொழிகளில் யார்யாருக்கெல்லாம் விருதுகள் குறிப்பாக பத்ம விருதுகள் கிடைத்திருக்கின்றன என்கிற பட்டியலெல்லாம் தெரிந்திருந்தால் நீங்கள் இப்படிக் குறிப்பிட்டிருக்கப்போவதில்லை.<br />அவருடைய நினைவாற்றல் ஒன்றிற்காகவே அவருக்கு ஆயிரம் பத்ம விருதுகள் தரலாம்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-836788807777894512012-09-02T05:51:14.632-07:002012-09-02T05:51:14.632-07:00@சங்கப்பலகை அறிவன்!நடிகர் சிவக்குமார் தமிழக அரசியல...@சங்கப்பலகை அறிவன்!நடிகர் சிவக்குமார் தமிழக அரசியல்,திரையுலக மறைவு அரசியல் என எந்த அரசியலிலும் சிக்காமல் இருந்ததே பெரும் சாதனைதான்.கிடைத்த வரமான ஓவியத்தை இன்னும் பட்டை தீட்டியிருக்கலாம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-62490407746308390472012-09-02T05:44:56.873-07:002012-09-02T05:44:56.873-07:00பதிவில் நீங்கள் எதை சார்ந்து பேசு பேசுகிறீர்கள் என...பதிவில் நீங்கள் எதை சார்ந்து பேசு பேசுகிறீர்கள் என்ற புரிதல் இன்றி உங்களுக்கு ஜெ.துதி என அனானி பேசுவது கண்ணில் பட்டது.நான் சிரித்துக்கொண்டே அழுகிறேன். ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-10861127162639674042012-09-02T05:41:04.831-07:002012-09-02T05:41:04.831-07:00அமுதவன் சார்!பல உணர்வுகளைத் தூண்டி விட்டது இந்த பத...அமுதவன் சார்!பல உணர்வுகளைத் தூண்டி விட்டது இந்த பதிவு.எதற்கு பின்னூட்டமிடுவதென்றே தெரியவில்லை.தமிழகத்தின் அரசியல்,இசை,கவிதை,திரைப்படம்,கண்ணதாசன்,சிவாஜி,வைரமுத்து,கலைஞர்,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா,விஜயகாந்த் என்பவற்றோடு சுரதாவையோ அப்துல் ரகுமானையோ மேத்தாவையோ மீராவையோ சிற்பியையோ ஞானக்கூத்தனையோ என எல்லோரும் மறந்து போன வானம்பாடிக் கவிஞர்களையும் குறிப்பிட்டுள்ளது தனிச் சிறப்பு.<br /><br />சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய பாரத் பட்டம் கூட நம்ம கட்சியில் இருப்பவர்தானே குரல் எழுப்பமாட்டார் என்ற காங்கிரஸ் அரசியல் நோக்கில் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்டது என்றும் கூட செய்திகள் அரசல் புரசலாக பரவின.மக்கள் மனம் சார்ந்த கலைஞனாக எம்.ஜி.ஆர் இருந்த போதும் இன்றும் பழைய திரைப்படங்களை தொலைக்காட்சியில் பார்க்கும் போது சிவாஜி கணேசனின் குளோசப் ஷாட்கள் இப்படியொரு நடிகன் இனிமேல்தான் பிறந்து வரவேண்டும் என்ற சிவாஜி மீதான அபிமானத்தை இன்னும் வலியுறுத்தவே செய்கின்றன.<br /><br />இன்று வைரமுத்துவின் வைர வரிகளாய் கருதப்படும் மனிதன் பாதி,மிருகம் பாதி பாடலின் வரிகளை நடிகர் கே.ஆர் ராமசாமி சிவன் வேடத்தில் வாயசைக்க ஏற்கனவே சொன்னது என்பதை சமீபத்தில் கறுப்பு வெள்ளை திரைப்படப்பாடலைக் காணும் போது புரிந்தது.<br /><br />கதைக்களம் அனைத்தும் சொல்லியாகி விட்டது.கதைக்கான முகங்கள் மட்டுமே மாறுபடுகின்றன என்று நடிகர் நாகேஷ் ஒரு முறை சொன்னார்.<br /><br />நிர்வாக ஒப்பீட்டளவில் கலைஞரின் சாதனை மிகப்பெரியது என்ற போதிலும் தான் சார்ந்த உள்நோக்க அரசியல்,சுயநலம் போன்றவற்றில் கருணாநிதி கெட்டிக்காரர் எனபதை திரும்ப திரும்ப பதிவு செய்ய வேண்டியது அவசியமில்லையென்ற போதும் விடாக்கொண்டனாக அறிக்கை விடுவதால் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும் இங்கே.சென்ற வாரம் பிரணாப் சொன்னதை நம்பித்தான் உண்ணாவிரதத்தையே கைவிட்டேன் என்று அறிக்கை விடுவதை நம்புவதை விட மத்திய காங்கிரஸின் நிலைப்பாட்டில் மாநில அரசு இணங்கி செயல்பட்டது என்ற என்.ராமின் புதிய தலைமுறை நேர்காணல் வலுவானது. <br /><br />ஜெயலலிதாவை இன்னும் முழுவதுமாக அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள மனமில்லா விட்டாலும் கூட நீர் சேகரிப்பு,இசைக்கலைஞர்களுக்குப் பாராட்டாக எம்.எஸ்.விஸ்வநாதன்,ராமமூர்த்தி இரட்டையரை கௌரவித்தது ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வின் பாராட்டுக்குரிய விசயங்கள்.இரு அரசுகளின் காலகட்ட அரசியல்,நிர்வாக செயல்பாடுகளில் இன்னும் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சிக்க வேண்டிய அவசியமில்லாத நிலையே இருக்கிறது.நுணலும் தன் வாயால் கெடும் என்பது மாதிரி ஜெயலலிதா தன் வாயால் கெட்டால் ஒழிய தி.மு.கவிற்கான எதிர்காலம் கேள்விக்குறியானதே இந்தப் பின்னூட்ட கால கட்டம் வரை.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-78822002520217528422012-09-01T12:02:06.973-07:002012-09-01T12:02:06.973-07:00தமிழர்களை மிதித்து ஆட்சி புரிவது ஜெ. அடுத்தவர் புக...தமிழர்களை மிதித்து ஆட்சி புரிவது ஜெ. அடுத்தவர் புகழ் பெற கூடாது என்பதில் கவனமாக இருப்பார். (நூலகம், செயலகம், இன்னும் எவ்வளவோ)<br />மக்கள் எப்படி போனால் என்ன என்று நினைப்பவர். (மின் வெட்டு, பஸ் கட்டணம், சமசீர் பல..) சட்டத்தை படுத்திய பாடு, உலகிலே அழியா புகழ் கொண்டது.<br />சக மனிதருக்கு இவர் தரும் மதிப்பு பற்றி சொல்லி தெரிய வேண்டாம். இவரின் எதாவது ஒரு குணம், நமக்கு தெரிந்த யாரிடமாவது இருந்தால் அதை நாம் புகழ்வோமா ?. முடிந்தால் மற்றவரை விட தான் இன்னும் சிறப்பாக செயல் பட்டு புகழ் பெற வேண்டும் என்று மட்டும் நினைக்க இயலாதவர். <br />பார்பனியம் அப்படித்தானே நினைக்கும். <br /><br />எல்லா இடங்களிலும் கட்டாயங்கள் உள்ளன. தமிழன் எந்த காலத்தில் ஒற்றுமையாக இருந்து எதை சாதித்து உள்ளான். <br />உணர்சிக்கு முக்கியம் கொடுத்து, உண்மையை மறந்து எல்லா காலங்களிலும் அடி வாங்குவதை கடமையாக கொண்டுள்ளான். <br />தன் இனந்தில் ஒருவர் நற் பெயர் பெறுவது என்பதை எப்படி அவனால் ஏற்று கொள்ள முடியும். <br />பார்பனாகவோ அல்லது வேறு மொழி பேசுபவனாக இருந்தால் அவர்களை உயர்த்தி வைப்பதை கடமையாக கொண்டு செய்வான். இந்த மோகமெல்லாம் அவனின் டி என் ஏ விலே பல நூறு ஆண்டுகளாக பதிந்து உள்ளது. <br />அடுத்த தமிழன் சாவதை பொறுத்து இருந்த தமிழர்களுக்கு, துன்பம் எப்படி வராமல் போகும். ஏன் அப்போது எல்லோரும் ஒன்றாக குரல் கொடுக்க வாருங்கள் என்ற போது, கபட நாடகம் என்ற ஒரே வாதத்தை சொல்லி கொட நாடு ஒய்வு தேவைப்பட்டது. <br />உயிருக்கே இங்கு ஒற்றுமை இல்லை, சினிமா காரர்களுக்கும், பத்திரிக்கை காரர்களுக்கும் பரிசு என்பதில் எப்படி ஒற்றுமை வரும்.? <br />பார்ப்பனீயம் இன்றும் வெற்றி புன்னகையுடன் உள்ளது. இது மாறினால் நீங்கள் விரும்பும் பலருக்கு பரிசு கிடைக்கும். <br />மற்றவர் புகழ் பாட வேண்டுவது உங்கள் நோக்கமாக இருக்கலாம். கட்சி கடந்து பலரையும் கௌரவித்துள்ளது கலைஞர்.<br />பல தாழ்த்த பட்ட மக்கள், பிற்படுத்த பட்ட மக்கள் உயர வழி செய்தது கலைஞர். <br /><br />நடிகர்கள் மக்களுக்கு செய்த பங்களிப்பு என்ன.? சிவகுமார் என்ன செய்தார்? சாதனை என்ன ? ஒரு விவசாயி, செருப்பு தைப்பவர் , சவரம் செய்பவர் மற்றும் பலரை விட இவர்கள் எந்த விதத்திலாவது பெரியவர்களா? கம்ப ராமாயண ஆராய்ச்சி செய்து மக்களை இன்னும் மடையர்களாக்கும் வேலை, பார்பனுக்கு இனிக்கும் , ஏழை தொழிலாளிக்கு, இல்லாத மக்களுக்கு எதற்கு ? இன்னும் எவ்வளவு காலம் அடிமையாக இருப்பது. இவர்கள் நோகாமல் நொங்கு தின்று கொண்டு, சமுகத்தை ஏமாற்றுகிறார்கள். அதே போல் நீங்கள் கூறிய எழுத்தாளர்களில் எத்தனை பேர், இந்த சமுகம் முன்னேற அவர்கள் எழுதினார்கள்? பலர் தங்களின் பார்பனிய பெருமை நிலைக்க எழுதினார்கள். பலர் நடப்பதை எழுதிகிறோம் என்று ஆபாசத்தை தான் எழுதினார்கள். <br /><br />இருந்தாலும் நாசுக்கான ஜெ துதி சிறப்பாக உள்ளது. <br /><br />( ஒரு சார்பாக இருந்ததால், கலைஞர் பற்றி எழுதினேன்.) Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-91028665485669285612012-09-01T09:40:54.388-07:002012-09-01T09:40:54.388-07:00சங்கப்பலகை அறிவன் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்....சங்கப்பலகை அறிவன் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்... Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-7996134237589939892012-09-01T07:48:59.033-07:002012-09-01T07:48:59.033-07:00சிவகுமார் அவர்களைப் பற்றிய பத்தியைத் தவிர இந்தப் ப...சிவகுமார் அவர்களைப் பற்றிய பத்தியைத் தவிர இந்தப் பதிவின் அனைத்தும் அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டியவை...<br /><br />சிவகுமாரின் திரை உலகப் பங்களிப்புகளைச் சாதனை' வட்டதிற்குள் கொண்டு வர நிச்சயம் யோசிக்க வேண்டும்; அவரது சமீப காலப் பிரசங்க முயற்சிகள் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவை,ஆனால் நிச்சயம் சாதனைகள் அல்ல.<br /><br />ஒரு நல்ல மனிதர்,நல்ல தந்தை,நடிகர்களில் அபூர்வமான ஒழுக்கமான மனிதர்...அதற்காக நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்..<br /><br />மற்றபடி கண்ணதாசன், சிவாஜி கணேசன், விஸ்வநாதன் ஆகியவர்கள் விதயத்தில் நடந்தது கேவல அரசியல்..<br /><br />இப்போதைய ஜெயலலிதா நிச்சயம் சிறிது வித்தியாசமாக இருக்கிறார்..போகப்போக எப்படி இருக்கும் என்பதே கேள்வி.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.com