tag:blogger.com,1999:blog-5165985521656307434.post1995683085412808979..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: ஸ்ரீதேவி நினைவுகள்.........Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-75518006386069568952018-04-16T09:16:16.760-07:002018-04-16T09:16:16.760-07:00வாருங்கள் ஜெயதேவ் தாஸ்.... எழுத வேண்டிய நேரத்தில் ...வாருங்கள் ஜெயதேவ் தாஸ்.... எழுத வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டிய இடத்தில்தான் இளையராஜாவைப் பற்றிச் சொல்லிச் செல்கிறேனே அல்லாமல் எடுத்ததற்கெல்லாம் இ.ராவைப் பற்றிச் சொல்வதில்லை. அதற்குத் தேவையும் இல்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் தற்சமயம் அவர் இயேசு கிறிஸ்து பற்றிப் பேசி அது மிகவும் சர்ச்சைக்குள்ளானபோது அதற்கு நான் பதில் தரவேண்டுமென்று எதிர்பார்த்தவர்கள் அநேகம். பலர் நேரிலும் சிலர் தொலைபேசியிலும்கூட கேட்டார்கள். ஆனால் நான் மத விஷயங்கள் பற்றியும், சாதி விஷயங்கள் பற்றியும் எழுதுவதில்லை என்ற கொள்கை வைத்திருப்பதால் அதனை எழுதவில்லை. ஆனாலும் நச்சரிப்புத் தாங்கமுடியாமல் போகவே, 'கூடுவிட்டுப் கூடு பாய்வதற்கும், உயிர்த்தெழுதலுக்கும் இந்த நபருக்கு வித்தியாசம் தெரியவில்லையே. இவரெல்லாம் என்ன ஞானி?' என்று முகநூலில் ஒருத்தர் கேட்டிருக்கிறார் என்ற செய்தியை மட்டும் என்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன். தவிர, இங்கே எம்.நடராஜனைப் பற்றி எழுதியிருக்கிறேனே அதில் இளையராஜாவைத் தொட்டிருக்கிறேனா? தேவையே இல்லை. விஸ்வநாதனுக்குப் பின்னர் வந்த இசையமைப்பாளர்களில் நல்ல இசையமைப்பாளர் இளையராஜாதான் என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். அதை விட்டுவிட்டு அவர்தான் இசையைக் கண்டுபிடித்தார் என்றும் அவர்தான் இசையின் கடவுள், தேவன், பிரம்மா என்றெல்லாம் எழுதுகிறவர்களை நான் ஏற்றுக்கொள்வதில்லை. சிலருடைய திறமைகளையும் சாதனைகளையும் மீறி சிலருக்குப் பணமும் புகழும் கிடைக்கும். அவர்களுக்கு மாநில முதல்மந்திரி ஆகவோ, மத்திய மந்திரிகள் ஆகவோகூட வாய்ப்புகள் கிடைக்கும். ஒழுங்காக நாலு வரி எழுதத் தெரியாதவன் எல்லாம் கோடீஸ்வரனாக இருப்பான். அம்மாதிரிதான் வெளிச்சத்திற்கு வந்த சில பேருக்குக்கூட திறமையானவர்களுக்குக் கிடைக்க வேண்டியதை விட பல மடங்கு, பல பல மடங்கு பெயரும் புகழும் மரியாதையும் கிடைத்துவிடுகிறது. அப்படிக் கிடைத்துவிட்டது என்பதற்காகவே இவரை நானும் மற்றவர்களுடன் சேர்ந்து கடவுள், பிரம்மா என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க மாட்டேன். அப்படிச் சொல்லாதீர்கள் என்ற தொனியை மட்டுமே என்னுடைய பதிவுகளிலிருந்து நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதெல்லாம் போக,அவரைப்பற்றி எழுத வேண்டியது இன்னமும் நிறைய இருக்கிறது. இப்போதே நீங்கள் சலித்துக்கொண்டால் எப்படி? (இப்போதுதான் நிறையப்பேர் அவர் சிம்பொனி செய்யவில்லை என்பதையே புரிந்துகொண்டிருக்கிறார்கள். செய்யாத ஒன்றுக்கெல்லாம் ஒருவர் புகழப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டுமென்று நீங்களும் கருதுகிறீர்களா என்ன?.... கலைஞர் நோபல் பரிசு பெற்றவர் என்று நான் எழுதுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஜெயதேவ தாஸ் சும்மா இருப்பாரா என்ன?)Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-66862539818747736312018-04-15T07:38:55.873-07:002018-04-15T07:38:55.873-07:00https://www.youtube.com/watch?v=6o6kXi44Coohttps://www.youtube.com/watch?v=6o6kXi44CooJayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-85623576774628980832018-04-15T07:38:19.204-07:002018-04-15T07:38:19.204-07:00எந்த மாதிரி விருந்து என்றாலும் கடைசியில் ஸ்வீட் பா...எந்த மாதிரி விருந்து என்றாலும் கடைசியில் ஸ்வீட் பான் இருந்தால் தான் அது முற்று பெரும். அது போல எந்த விஷயத்தைப் பத்தி பதிவு போட்டாலும் உருக்கட்டையால் இளையராஜாவை தலையிலேயே நாலு போடு போட்டால் தான் சார் உங்களுக்கு பதிவு போட்ட நிறைவே வரும்!!<br /><br />விகடனில் தமிழ் திரையிசை காப்பி பற்றி ஒரு வீடியோ வெளியிட்டார்கள், அதில் இளையராஜா, MSV, ARR பல தமிழ் இசையமைப்பாளர்கள் அந்நிய நாட்டுப் படங்களில் இருந்து டியூன்களை எடுத்து தங்களது பாடல்களில் கையாண்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. திறமையான கலைஞன் என்றால் MSV, ARR போன்றவர்களும் இந்த வேலையை ஏன் செய்ய வேண்டும் என்பது தான் தெரியவில்லை.<br /><br />இளையராஜாவுக்கு முன்னாடியும் பின்னாடியும் பல இசைக்கலைஞர்கள் வந்திருக்கலாம், ஆனால் 1980 களில் பள்ளி மாணவர்களாக, இளைஞர்களாக இருந்தவர்கள் மனதில் என்றென்றும் இளையராஜாவின் பாடல்கள் தான் வாழ்ந்து கொண்டிருக்கும்.<br /><br />இன்னொரு விஷயம், தொடர்ந்து பலமணி நேரம் கேட்கக் கூடிய பாடல்களை தந்தந்தவர்கள் இளையராஜாவுக்கு முன்னர் பலர் இருந்தனர், அந்த வரிசை இளையராஜாவோடு முடிந்துவிட்டது. அவருக்குப் பின்னர் வந்தவர்கள் எந்த ஒருவரது பாடல்களையும் 3 மணி நேர பஸ் பிரயாணத்தில் கேட்டு மகிழ முடியும் என்று சொல்லும்படி ஒருவர் கூட இல்லை என்பது தான் வேதனை. :(Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-52898564366707045172018-04-15T07:23:40.036-07:002018-04-15T07:23:40.036-07:00\\அதுவும் மும்பை சென்ற பிறகு அவர் பெற்ற செல்வம் செ...\\அதுவும் மும்பை சென்ற பிறகு அவர் பெற்ற செல்வம் செல்வாக்கு போன்றவைகள் கேள்விக்குறியாகத் தெரிகின்றது. நிழல் உலகத் தொடர்பு என்கிறார்கள். \\<br /><br />ஜோதிஜி இந்தியாவின் CBI, RAW போன்றவற்றையும், ஏன் அமெரிக்காவின் FBI போன்ற உளவுத்துறைகளையும் மிஞ்சும் வகையான இரகசிய உங்களுக்கு தகவல் தருகின்றன என்பது வியப்பளிப்பதாக உள்ளது. ஸ்ரீதேவியின் தாயாருக்கு அமெரிக்காவில் சிகிச்சையளிக்க கிட்டாத தட்ட 80 கோடி ரூபாய் அந்த கால கட்டத்தில் தேவைப்பட திவாலான ஸ்ரீதேவிக்கு உதவிக்கு வந்தவர் தான் போனி கபூர். அந்த (நன்றி) கடனை அடைக்கத்தான் அவரை கல்யாணமும் செய்து கொண்டார். இங்கே நிழல் உலகம் எங்கே வர வாய்ப்பிருக்கிறது?!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-56440743588055203022018-03-05T06:59:23.105-08:002018-03-05T06:59:23.105-08:00ஜோதிஜி உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. நீங்கள் சொன...ஜோதிஜி உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. நீங்கள் சொன்ன செய்திகள் எனக்குப் புதியவை. அதுபற்றி எனக்குத் தெரியவில்லை.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-86970213922285970432018-03-05T06:55:48.842-08:002018-03-05T06:55:48.842-08:00அருள் ஜீவா தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி.நீங்கள...அருள் ஜீவா தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி.நீங்கள் சொன்னபடி அந்தப் பாராவை நீக்கிவிட்டேன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-69791440531713373202018-03-05T04:26:41.359-08:002018-03-05T04:26:41.359-08:00நீங்க வெளியிட்ட மறுநாளே படித்து முடித்து விட்டேன்....நீங்க வெளியிட்ட மறுநாளே படித்து முடித்து விட்டேன். ஆனால் பதில் எழுத முடியவில்லை.முப்பது வருடங்களாக பிரபல்யங்கள் அனைவருடனும் பழகிய நீங்க எழுத பொருத்தமானவர் தான். ஆனால் என் பார்வையில் இவரைப் பற்றிய நான் கேள்விப்படும் செய்திகள் அதுவும் மும்பை சென்ற பிறகு அவர் பெற்ற செல்வம் செல்வாக்கு போன்றவைகள் கேள்விக்குறியாகத் தெரிகின்றது. நிழல் உலகத் தொடர்பு என்கிறார்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-13687379690853888632018-03-03T10:15:51.384-08:002018-03-03T10:15:51.384-08:00நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு இரங்கல் பதிவு.அருமை.
...நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு இரங்கல் பதிவு.அருமை.<br />அழகாலும்,தன் அபார நடிப்பாலும் ஆண்,பெண் பேதமின்றி அநேகரின் உள்ளங்களை ஆட்கொண்ட அபலையின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.<br />தங்கள் பதிவின் மூலம் ஸ்ரீதேவி குறித்து நிறைய செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது.<br />முடி குறித்த செய்திகளைத் தவிர்த்திருக்கலாம்.நடிகை என்றாலே கேவலமாக நினைக்கும் சமூகத்திற்கும்,பெண்களைப் போகப் பொருளாக எண்ணும் சில ஜென்மங்களுக்கும் இது வெறும் வாய்க்கு கிடைத்த அவல் போல ல்லவா இருக்கிறது.<br /> இறப்பு செய்தி கேட்டு ஐயோ! என்று ஆதங்கப்பட்டவர்கள் அடுத்தடுத்த நாட்களில் போதையால் மரணம் என்றவுடன் உச்சம் தொட்ட புகழை பாதாளத்தில் அல்லவா தள்ளிவிட்டார்கள்.<br />இதுவே ஓர் ஆண் எனில் இந்நிலை ஏற்பட்டிருக்குமோ? <br />வந்தாரை வாழ வைப்பவனும் தமிழன் தான்.<br />வாழ்ந்தோரை வலுவிலக்கச் செய்பவனும் தமிழன் தான்.Arul Jeevahttps://www.blogger.com/profile/14955942406542465811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-37182818277836734382018-02-28T06:58:37.159-08:002018-02-28T06:58:37.159-08:00தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி. இ.ராவின் விவகாரத...தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி. இ.ராவின் விவகாரத்தை வேண்டுமென்றே செருகவில்லை. இயல்பான ஓட்டத்தில் வந்த தகவல்தான் அது. சாவித்திரி, பத்மினி,வின்சென்ட்,பாரதிராஜா என்றெல்லாம் பேசும்போது இ.ராவை மட்டும் பேசத்தவிர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-53837665613646184712018-02-28T00:45:00.896-08:002018-02-28T00:45:00.896-08:00மிகவும் அருமையான நினைவுப்பதிவு! அறிந்திராத தகவல்கள...மிகவும் அருமையான நினைவுப்பதிவு! அறிந்திராத தகவல்களுடன் சுவாரஸ்யமாய் பயணித்த நினைவுகளில் திடீரென இளையராஜா விவகாரம் முளைத்தது எதனால் என்று தெரியவில்லை! சிறப்பான கட்டுரை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-60715420581307761532018-02-27T01:40:28.904-08:002018-02-27T01:40:28.904-08:00ஸ்ரீதேவி சந்திப்பின்போது உடனிருந்த நீங்களும் இந்த ...ஸ்ரீதேவி சந்திப்பின்போது உடனிருந்த நீங்களும் இந்த நினைவுகளையெல்லாம் அசை போட்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த முடி பற்றிய பாராவை நீக்கிவிடலாமா என்றுகூட யோசித்தேன். ஆனால் அவர் மது அருந்தியதால் இறந்தார் என்ற அளவிற்கு அவர் பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கும்போது இந்த விஷயம் அவருடைய இமேஜுக்கு ஒன்றும் பாதிப்பை ஏற்படுத்திவிடாது என்பதனால்தான் அதனை அப்படியே விட்டுவிட்டேன். அதுவும் அவர் உயிருடன் இருந்தவரை இதையெல்லாம் எழுதவில்லையே...இளையராஜா பற்றிய பேச்சுக்கள், சர்ச்சைகள் வெகுவாகக் குறைந்துதான் போயிருந்தன. இந்த பத்மவிபூஷன் அறிவிப்புக்குப் பிறகு மறுபடியும் வழக்கமான பல்லவி இணையத்தில் மிக அதிகமான ஜால்ரா சத்தத்துடன் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. நல்ல வேளையாக இப்போதெல்லாம் யாரும் சிம்பனி பற்றி மட்டும் மூச்சு விடுவதில்லை.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-5412867194580306192018-02-26T23:52:25.440-08:002018-02-26T23:52:25.440-08:00உங்களின் இந்த ஸ்ரீதேவி பற்றிய வரைவை எதிர்பார்த்தேன...உங்களின் இந்த ஸ்ரீதேவி பற்றிய வரைவை எதிர்பார்த்தேன். நடிகைகளும் (ரொம்பவும்) நெருக்கத்தில் சாதாரணப் பெண்கள் போன்றவர்கள் என்பதை நீங்களும் நானும் பலமுறை உணர்ந்திருக்கிறோம், பேசியிருக்கிறோம்! ஸ்ரீதேவியின் ’முடி’குறித்து நாம் சொன்னால் யாராவது நம்புவார்களா?! ஒரு நல்ல நடிகையை இழந்துவிட்டோம் என்பதைத் தவிர பெரிய அதிர்ச்சிகள் தேவையற்றது என்றே கருதுகிறேன். ஆமாம், ஸ்ரீதேவியிடமிருந்து ஏன் இசைக்கடவுளிடம் சென்றுவிட்டீர்கள்? நாம் பார்க்காதவரா அவர்? இவ்வளவு உந்துதலுக்குப் பிறகும் ‘முரசு’ வெற்றிகரமாகத்தானே ஓடிக்கொண்டிருக்கிறது!நல்ல ரசனை சாகாது, ஸ்வாமி!!R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.com