tag:blogger.com,1999:blog-5165985521656307434.post5224927293151928152..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: ஜெயலலிதாவும் சமஸ்கிருதப் புலிக்குட்டிகளும்.Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-51643877187363082602013-06-17T02:35:33.909-07:002013-06-17T02:35:33.909-07:00நிரஞ்சன் தம்பி, நீங்கள் சொல்வதுபோலவும்கூட இருக்கலா...நிரஞ்சன் தம்பி, நீங்கள் சொல்வதுபோலவும்கூட இருக்கலாம்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-15615649940169626392013-06-17T02:16:34.303-07:002013-06-17T02:16:34.303-07:00தமிழ் நாட்டில் தமிழில் புலிக்குட்டிகள்ளு பெயர் வைத...தமிழ் நாட்டில் தமிழில் புலிக்குட்டிகள்ளு பெயர் வைத்தால் " தமிழ் புலி" என்று யாராவது கிளப்பிவிட்டால் என்ன செய்வது என்று சிந்தித்திருப்பாரோ. தமிழில் பெயர் வைத்திருக்கலாம், ஆனால் சோதிடர் சொல்வதைத் தானே ஆள்பவர்கள் செய்வர், ஆகையால் சோதிட சிகாமணிகளின் பரிந்துரையில் சமஸ்கிருதம் வாழுதுயோய். :Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-33180103790330247842013-04-06T20:44:17.095-07:002013-04-06T20:44:17.095-07:00அமுதவன் அவர்களுக்கு, முதல் முறையாக இசை பற்றிய ஒரு ...அமுதவன் அவர்களுக்கு, முதல் முறையாக இசை பற்றிய ஒரு பதிவு என் தளத்தில் எழுதி இருக்கிறேன். நேரமிருப்பின் வருகை தரவும். பின் குறிப்பு; உங்கள் பின்னூட்டம் அவசியம்.<br />http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in/2013/04/blog-post.htmlகாரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-14338922369983602632013-04-01T07:11:50.838-07:002013-04-01T07:11:50.838-07:00முரண்பட்டு பேசுவதில் இளையராஜாவுக்கு இணையே கிடையாது...முரண்பட்டு பேசுவதில் இளையராஜாவுக்கு இணையே கிடையாது. ஒரு முறை நானே இசை அமைக்கும்போது வேறு யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்பார். பிறகு எனக்கு இந்த இசை மட்டும்தான் தெரியும் என்று நினைக்க வேண்டாம் என் இசை காலம் காலமாக வாழும் என்றும் சொல்வார். சிம்பனி அமைக்க வெறும் எட்டு நொடிகள் போதும் என்று ஒரு மகா உண்மையை சொல்லி புல்லரிக்க வைத்தவர் தானே இவர். இளையராஜா பத்தாயிரத்திற்கும் மேலே பாடல்கள் போட்டிருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் அவற்றை வடிகட்டினால் ஒரு பாதி கோப்பை நிரம்பலாம். இதுதான் நிதர்சனம்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-1051636100545357702013-03-31T09:58:18.669-07:002013-03-31T09:58:18.669-07:00காரிகன்,
பழசெல்லாம் நியாபகம் வச்சிருக்கீங்களே :-)...காரிகன்,<br /><br />பழசெல்லாம் நியாபகம் வச்சிருக்கீங்களே :-))<br /><br />ஹி..ஹி நான் எப்பொழுதும் சொல்ல வந்ததை தயங்காமல் சொல்லிவிடுவதால் ஏதோ வம்பாக பேசுவது போல இருக்கும்,ஆனால் வன்மம் இருக்காது.<br /><br />தங்களின் மேலான அபிப்பிராயத்திற்கு மிக்க நன்றி!.<br /><br />-----------<br /><br />அமுதவன் சார்,<br /><br />தங்களின் மேலான எண்ணங்களுக்கு மிக்க நன்றி! நீங்க எனது பின்னூட்டங்கள் முதல் கவனிப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி,அதே சமயம் இனிமே நாமும் கவனமாக கருத்து சொல்ல வேண்டும்னு ஒரு மணியும் மண்டைக்குள்ள அடிக்குது :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-39444609390824366842013-03-31T08:13:48.811-07:002013-03-31T08:13:48.811-07:00மறுபடியும் ஏதோ மருள் வந்தவர்கள் பேசுவது போன்ற பிதற...மறுபடியும் ஏதோ மருள் வந்தவர்கள் பேசுவது போன்ற பிதற்றல்கள்தாம். 'இசைஞானியின் அளவுக்கு இசைத்துறையில் உலக அளவிலேகூட யாரையுமே நம் இசைஞானியோடு ஒப்பிட முடியாது'<br />அட, அதுதான் அந்த ரகசியக் கருமம் என்னவென்றுதானே கேட்கிறோம். அப்படி ஏதாவது இருந்தால் நமக்கும் அதனைச் சொல்லித்தொலைக்க வேண்டியதுதானே.<br /><br />'பட்டாபிராமன் அளவுக்கு இசைத்துறையில் யாரையுமே உலக அளவிலேகூட நம் பட்டாபிராமனுடன் ஒப்பிடமுடியாது' என்றுதானே நம்முடைய ஏகாம்பரமும் சொல்கிறார்.<br /><br />'எங்களின் நாற்பது ஆண்டுகளுக்கு மேலான இசை அனுபவத்தில் எங்களின் ஒருமித்த முடிவும் கருத்தும் இது'<br />என்னமாதிரியான 'இசைத்துறைக்கான ஐநா சபையின்' டிக்ளரேஷன். கேள்விப்பட்டிருக்கிறீர்களா இம்மாதிரியான காமெடிகளையெல்லாம்?<br />'தமிழர்கள் இத்தரணியில்...' என்று ஆரம்பித்து இன்னொரு பிதற்றல்.<br />பொதுவாகவே இவர்களுக்கு இளையராஜாவைத் தூக்கிப்பிடிக்க வேறு எதுவும் கிடைக்கவில்லையெனில் அவர் தமிழர் என்ற லேபிளைக் கொண்டுவந்து அவர்மீது ஒட்டிவிட்டு அகமகிழ்ந்து போகிறார்கள்.<br />இவர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக அம்பேத்கரையும் பெரியாரையும் கொண்டாடுவார்களாம். அவர்களுக்குத் தமிழர் என்ற லேபிள் கிடையாது<br /><br />(அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள் மீது நான் மிகப்பெரிய மதிப்பு வைத்திருக்கிறேன். அது வேறு விஷயம். சென்றவாரம்கூட அம்பேத்கருடைய ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசினேன்) <br /><br />இளையராஜாவைத் தூக்கிப்பிடிக்க மட்டும் தமிழர் என்ற லேபிளாம். இளையராஜாவே தம்மைத் தமிழர் என்று பிரகடனப்படுத்திக்கொண்டது கிடையாது. ஒருமுறை அவரிடம் இதுபற்றிக்கேட்டபோது 'நான் இந்தியன் என்றுகூட சொல்லிக்கொள்ளமாட்டேன்.அதையும் தாண்டி நான் உலக மானுடன்' என்றார்.(எவ்வூரு சென்றாலும் அது நம்நாட்டைப் போலவருமா? என்று பாடுவது வேறுவிஷயம்)<br />தவிர இளையராஜா இதுவரை எத்தனைத் 'தமிழ்ப்பாடகர்களை' அறிமுகப்படுத்திவைத்திருக்கிறார் என்ற கணக்கை யாராவது சொன்னார்களென்றால் நன்றாயிருக்கும்.<br />இவர்கள் பெரியார் பக்தர்கள். அவர் பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுத்தார். கேட்டதற்கு பெரியார் நாத்திகர். நான் ஆத்திகன். அது முரண்பாடில்லையா? என்று கேட்டார். இவர்களுக்கு அதில் தவறேதும் தெரியாது.<br />ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் கட்டித்தருவது, திருவண்ணாமலை ஆசிரமத்துக்கான பணிகள், ரமணரைப் பற்றிய பக்தி, பாமாலைகள் என்று இவர்களின் அரசியல் நெறிகளுக்கு மாறாகச் செயல்படுவார் ராஜா. இந்த பக்தர்கள் அதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்களாம்.<br />பிராமணியத்துக்கு இவர்கள் எதிர்ப்பாளர்களாம்.ஆனால் இளையராஜா பிராமணியத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்வதை இவர்கள் கண்டுகொள்ளமாட்டார்களாம். வருடந்தோறும் நவராத்திரி என்ற ஒரு 'நாத்திகத்திருவிழா'வின்போது அந்த ஒன்பது நாட்களும் கர்நாடக சங்கீத வித்வான்களான பிரபல பிராமண வித்வான்களை அழைத்து இவரது வீட்டில் இசைக்கச்சேரிகள் நடத்தி அவர்களுக்குப் பெருந்தொகைகளைத் தந்து அனுப்பும் வழக்கம் இவரிடம் உண்டாம். இந்த பகுத்தறிவுப் பாசறை வீரர்கள் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் திராட்டில் விட்டுவிடுவார்களாம். அவர் இசைஞானி இல்லையா இசைக்கு மொழியேது என்று பேசாமல் இருந்துவிடுவார்களாம்.இதுபோல ரொம்ப ரொம்ப காமெடிகள் இவர்கள் வசம் உள்ளன.<br />பார்ப்போம் இன்னமும் என்னென்ன கிளம்பிவருகிறது என்று.<br /><br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-28363874697569319702013-03-31T07:37:54.279-07:002013-03-31T07:37:54.279-07:00காரிகன் அவர்களே எனக்கும் உங்களைப் போலவேதான் சந்தேக...காரிகன் அவர்களே எனக்கும் உங்களைப் போலவேதான் சந்தேகம். இந்த காசிமேடு மன்னாரு என்பவரும் மதிமாறனும் ஒருவரேதானா என்று. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. <br /><br />எனக்கு இன்னமும் இந்த இணையத்தின் உள்விவகாரங்கள் தெரியாது. பதிவுகளுக்கு எப்படி ஓட்டுப்போடுவது எதற்காக ஓட்டுப்போடுவது என்பவற்றுடன் ஒரு திரட்டியில் ஒரே பதிவை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பதிவேற்ற முடியுமா என்பதும் தெரியாது. அப்படிப் பதிவேற்றக்கூடாது என்றுதான் இப்போதும் நினைத்திருக்கிறேன். அப்படியே பதிவேற்றுவதாக இருந்தாலும் மீள்பதிவு என்ற அறிவிப்புடன் பதிவேற்றலாம் என்றே நினைத்திருக்கிறேன்.இது இப்படியிருக்க மதிமாறனின் எஸ்.ஜானகி பற்றிய பதிவு முதலில் தமிழ்மணத்தில் வந்தது. படித்துப் பார்த்ததும் சில கேள்விகள் பிறந்தன. அதனை அந்தப் பதிவிலேயே கேட்கலாமா என்று நினைத்து சரி வேண்டாம் என்று சும்மா இருந்துவிட்டேன். <br /><br />மறுநாள் அந்தப் பதிவுக்கு ஏதேனும் பின்னூட்டங்கள் வந்துள்ளனவா என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்பதற்காக அவர் தளத்திற்குச் சென்றேன். எந்தப் பின்னூட்டமும் இல்லாமல் சாதாரணமாக இருந்தது.<br />சரி நாமாவது கேட்டுவைப்போம் என்று அந்தப் பின்னூட்டத்தைப் போட்டேன். அவர் என்ன பதில் எழுதியிருக்கிறார் என்று பார்ப்பதற்காக அடுத்தநாள் போகலாம் என்று பார்ப்பதற்குள் என்னுடைய பதிலுடன் மீண்டும் அதே பதிவைத் தமிழ்மணத்தில் இணைத்திருக்கிறார் மதிமாறன்.<br /><br />ஒருநாள் முழுக்க தமிழ்மணப்பதிவுத் திரட்டியில் இருந்தது அந்தப் பதிவு. இப்போதும் மறுமொழிகள் எதுவும் வரவில்லை. சரி அவராவது ஏதாவது எழுதுவார் என்று பார்த்தால் ஒன்றுமில்லை. பேசாமலிருந்துவிட்டேன். இப்போது பார்த்தால் காசிமேடு மன்னாரு என்று 'ஒருவருடைய' பதில். ஒன்று காசிமேடு மன்னாரு இவராகவே இருக்கவேண்டும். அல்லது இவரது நண்பர்களில் யாராவது இருக்கவேண்டும். யாராவது இருந்துவிட்டுப் போகட்டும். என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-83226894967500417642013-03-31T03:49:52.886-07:002013-03-31T03:49:52.886-07:00தற்போதுதான் உங்களின் பின்னூட்டத்தை மதிமாறனின் தளத்...தற்போதுதான் உங்களின் பின்னூட்டத்தை மதிமாறனின் தளத்தில் வாசித்தேன். எனக்கு மதிமாறனின் பதிவுகளை படிக்கும்பொழுதெல்லாம் தாறுமாறாக ஆவேசம் வருவதுண்டு. பல சமயங்களில் அவருக்கு பின்னூட்டம் போட்டும் ஏனோ பதிலே வருவதில்லை. இளையராஜாவை தூக்கி பிடிக்கும் பெரியார் கொள்கை பேசும் ஒரு முரண்பாடான பதிவர் மதிமாறன் . காசிமேடு மன்னாரு என்பவர் மதிமாறனின் பதிவுகளில் தவறாமல் இடம் பிடிப்பவர். இருவரும் ஒருவர் தானோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு இருவரும் ஒரே கோட்டில் நின்று கொண்டிருப்பவர்கள். காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-69661885494811499742013-03-30T09:50:00.671-07:002013-03-30T09:50:00.671-07:00வாருங்கள் காரிகன், சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்....வாருங்கள் காரிகன், சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். எத்தனைச் சொன்னாலும் விவாதத்தை செந்தில் கவுண்டமணியின் வாழைப்பழ காமெடிக்கு ஈடாகக் கொண்டுவரத்தான் பார்க்கிறார்கள். நேர்மையான கேள்விகளுக்கும் வெளிப்படையாக முன்வைத்திருக்கும் கேள்விகளுக்கும் பதில் இல்லை.<br /><br />மதிமாறன் அவரது தளத்தில் எஸ்.ஜானகி பற்றிய பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தப் பதிவிலும் இளையராஜாவை முன்னிட்டு இதே போன்ற கயமை. அந்தப் பதிவிலும் சில கேள்விகள் எழுப்பியுள்ளேன். முடிந்தால் படியுங்கள். நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-47878659398269256932013-03-30T09:02:42.838-07:002013-03-30T09:02:42.838-07:00"பெயரிலேயே நேடிவிடி இல்லாத சிலர்" என்று ..."பெயரிலேயே நேடிவிடி இல்லாத சிலர்" என்று என் பின்னூட்டத்தின் முதல் வரியை படிக்கவும். தவறுக்கு எனது மன்னிப்பை கோருகிறேன் காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-54586875888882110882013-03-28T08:42:37.153-07:002013-03-28T08:42:37.153-07:00பெயரிலேயே நேடிவிடி சிலர் திரு அமுதவனின் கருத்து...பெயரிலேயே நேடிவிடி சிலர் திரு அமுதவனின் கருத்துக்கு வேறு சாயம் பூச முற்படுவது நன்றாகவே தெரிகிறது. அவர்களின் நோக்கம் இளையராஜாவை மட்டுமே நாம் பாராட்டி பேச வேண்டும் மற்ற யாரையும் எந்த காரணம் கொண்டும் புகழ்ந்து எழுதி விட கூடாது என்பதே. இதை அவர்கள் எவ்வளவு நாகரீகமாக சொன்னாலும் படிப்பவர்களுக்கு இது மிக தெளிவாகவே புரிந்துவிடுகிறது. எத்தனை லிங்க் கொடுத்தாலும் அவர்களின் எண்ணம் இதுவே. எனவே அவர்களோடு வீண் விவாதம் செய்வது முட்டாள்தனமானது என்பது என்னுடைய கருத்து. அமுதவன் அவர்கள் இதற்கு மேல் இந்த ராஜா அடிவருடிகளுக்கு பதில் சொல்வது எனக்கு ஏற்புடையதல்ல. (நானாக இருந்தால் இவர்களை அப்போதே அலட்சியம் செய்திருப்பேன்). ராஜாவை கடவுள் அளவுக்கு கண்மண் தெரியாமல் புகழ ஒரு சிண்டிகேட் போன்ற அமைப்பே இணையத்தில் இயங்கிவருகிறது. இது போன்ற மலிவான இசை என்றால் என்னவென்றே புரியாத பலருக்கு ராஜா மட்டுமே ஒரு பெரிய இசைஞானி. இவர்களுக்கு அன்னக்கிளி படமே முதல் தமிழ் படம். பதினாறு வயதினிலே படமே முதல் நாட்டுப்புற இசையை கொண்டு வந்த படம்.இளையராஜாவுக்கு முன் யாருமே இசையை மக்கள் நேசிக்கும் அளவுக்கு கொடுக்கவில்லை என்று நம்பும் இவர்களை கண்டு நாம் பரிதாப படவேண்டும். இசையை விமர்சிக்க பாபநாசம் சிவன் முதல்கொண்டு அதன் பின் வந்த பல இசை மேதைகளின் பாடல்களை கேட்டு விட்டு பின்னர் உங்கள் கருத்தை எழுதவது நலமாக இருக்கும். சொல்லப்போனால் இளயராஜா எ எம் ராஜா, கே வி மகாதேவன், எம் எஸ் விஸ்வநாதன், டி கே ராமாமூர்த்தி, வி குமார், போன்ற இசை அமைப்பாளர்களை விட பல படிகள் கீழே இருப்பவர்தான். இவரகளை எல்லாம் முழுதும் கேட்ட பிறகு ராஜா விசிறிகள் ஊளை இட்டால் நன்று. காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-33005165698550255632013-03-27T07:54:54.295-07:002013-03-27T07:54:54.295-07:00நீங்கள் வெறும் "தெளிவூட்டல்" மட்டும் செய...நீங்கள் வெறும் "தெளிவூட்டல்" மட்டும் செய்திருந்தால் நான் பதிலே போட்டிருக்க மாட்டேன். "வாழ்க, வளர்க" என்று நினைத்துக்கொண்டு போயிருப்பேன் :) அதில் பொரும என்ன இருக்கிறது? நல்ல செயல் தானே :)<br /><br />"வாய் கூசவில்லையா, என் கருத்துக்கு பதில் சொல்ல ஒருத்தனும் இல்லையா, எங்கே ராசா விசிறிகள்" என்றெல்லாம் சவால் விட்டதால் தான் உமக்கு சில இணையத்தளங்களின் விவரமெல்லாம் கொடுத்து இங்கே எழுத நேர்ந்தது. <br /><br />ஆயிற்று, உமது சவாலுக்கு சில முக்கிய ஆதாரங்களுடன் விடை கொடுத்தாயிற்று. என் கடமை முடிந்தது :) <br /><br />நேரம் கிடைத்தால் கங்கை அமரன் பற்றி (கவனிக்கவும்: இளையராசா அல்ல, அவரோடு சண்டை போட்டுப்பிரிந்திருக்கும் தம்பி) நான் எழுதுவதை இங்கே பாருங்கள் :<br /><br />http://ilayaraja.forumms.net/t80-gangai-amaran-thread-for-song56<br /><br />(இது இளையராசாவுக்கே என்று உள்ள தளம் என்றாலும் எல்லார் பற்றியும் தாராளமாகப்பேசலாம் ! <br /><br />ஒரு லாபியும் கீபியும் கிடையாது :) )<br /><br />app_enginehttps://www.blogger.com/profile/02944497293600156127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-58987689941591663122013-03-26T23:06:02.172-07:002013-03-26T23:06:02.172-07:00||மற்றபடி எந்த ஒரு கலைஞருக்கும் "ஆஹா-ஓகோ- உலக...||மற்றபடி எந்த ஒரு கலைஞருக்கும் "ஆஹா-ஓகோ- உலகின் முதல்-அப்படியா-இப்படியா" என்று புகழ் பாடுவோர் இருக்கத்தான் செய்வார்கள்.<br /><br />அதையெல்லாம் சட்டை செய்வதும் பொருமுவதும் உடல் நலத்துக்குக் கேடு :)||<br />அப்படி ஒருவருக்கு தப்பும்தவறுமாகப் பொதுவெளியில் வந்து கூக்குரலிடும்போது அவர்களுக்கு சில உண்மைகளையும் இதற்கு முன்னால் இதே துறையில் மிகப்பெரும் சாதனைப்புரிந்த சாதனையாளர்களையும் சுட்டிக்காட்டுவதைச் செய்வதற்கும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். <br />இத்தகைய தெளிவூட்டல்களுக்காகப் பொருமுவதும் நொந்துகொள்வதும்கூட உடல்நலத்துக்குக் கேடுதான் நண்பரே.<br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-66838704947092105062013-03-26T22:58:57.505-07:002013-03-26T22:58:57.505-07:00அனானிமஸ், என்னுடைய பதிவுகளில் நான் என்ன சொல்லியிரு...அனானிமஸ், என்னுடைய பதிவுகளில் நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்பதையெல்லாம் நீங்கள் முழுமையாகப் படிக்கவில்லை போலிருக்கிறது. படித்துவிட்டு வந்து பேசுங்கள் என்றெல்லாம் நான் சொல்லப்போவதில்லை. அப்படியெல்லாம் வற்புறுத்துவதோ வாதாடுவதோ எனது நோக்கமும் கிடையாது. நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கெல்லாம் அவற்றிலேயே அல்லது அவற்றுக்கான பின்னூட்டங்களிலேயே பதில்கள் இருக்கின்றன.<br />தனிப்பட்ட ஒருவர் தனிப்பட்ட முறையில் சொல்லுகின்ற கருத்துக்களுக்கு யாரும் ஆட்சேபிக்கப்போவதில்லை. ஆட்சேபிக்கவும் முடியாது. பொதுவான தளத்தில் பொதுக்கருத்தை ஏற்படுத்துகின்ற முறையில் சொல்லுகின்ற விஷயங்களுக்காகத்தான் இங்கே இதுபோன்ற விவாதங்கள் எல்லாம் நடைபெறுகின்றன.<br />அவர்கள் அப்படித்தான் சொல்லுவார்கள் நமக்கு இப்படித் தோன்றினால் அதற்கு யார் பொறுப்பு? என்பதெல்லாம் நல்ல கேள்விகள்.<br />அவர்களுடைய கூட்டத்துக்கு அல்லது அவர்களுடைய குழுமத்திற்கு மட்டும்தான் 'அவர்கள்' அப்படிச் சொல்லிக்கொள்வார்கள் என்றால் நமக்கும் அதில் ஆட்சேபணை இல்லைதான்.<br />இசை என்றால் இளையராஜாதான் என்பதுபோன்ற பொதுக்கருத்தை உருவாக்க இணையத்திலும் வெளியிலும் எத்தனைப்பெரிய லாபி உழைக்கிறது என்ற விவரமெல்லாம் தெரிந்தால் நீங்கள் இப்படிப் பேசமாட்டீர்கள். போகட்டும். <br />இது வெறும் அவர்களுடைய கருத்து நமக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி இதுபோல் கருத்துத் தெரிவிக்கும் அத்தனைப்பேரையும் ஒரே மூட்டையாகக் கட்டித் தூக்கி எங்கேயோ வீசுகிறீர்கள். இனி அவர்கள் பாடு ;உங்கள் பாடு.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-58818224802181093922013-03-26T06:51:46.213-07:002013-03-26T06:51:46.213-07:00உங்கள் கண் திறக்க வேண்டும் என்றெல்லாம் கங்கணம் கட்...உங்கள் கண் திறக்க வேண்டும் என்றெல்லாம் கங்கணம் கட்டவில்லை :)<br /><br />===quote===<br /><br />பேசுவதற்கு வாய்கூச வேண்டாமா?<br /><br />இளைஞர்களுக்கு இந்தப் பாடல்களில் பரிச்சயம் இல்லாவிட்டால் பரிச்சயம் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அல்லது எங்களுக்கு இந்த சங்காத்தமே வேண்டாம் என்று ஒதுங்கிவிடுங்கள். தவறான கருத்துக்களைப் பிடிவாதமாகச் சொல்லிக்கொண்டிருக்க முனையாதீர்கள்’<br />- <br /> இதுதான் நான் வைத்த கருத்து, கேள்வி.<br />- <br />- இதுவரையிலும் யாரிடமிருந்தும் முறையான பதில் வரவில்லை.<br />=== end-quote===<br /><br />என்றெல்லாம் நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் அல்லவா? அதற்கு பதிலாகத்தான் வலையுலகின் முதல் தமிழ்த்திரையிசை விவாத மையமான tfmpage.com / the hub பற்றி சொன்னேன்.<br /><br />இதற்குப்பின் உயர் தரத்துடன் தமிழ்த்திரை இசைக்காக நடத்தப்பட்ட தளம் dhool.com <br /><br />இங்கே நாள்தோறும் பதித்துப்பரவசப்பட்ட பாடல்களின் பட்டியல் இங்கே: (இத்தனைக்கும் இதன் உரிமையாளர் ஒரு தீவிர ராசா விசிறி)<br /><br />http://www.dhool.com/sotd2/all.php<br /><br />நான் பார்த்தவரை வலைப்பூக்களிலும் (blogs) ராசாவை விமர்சித்து எழுதுவோரின் எண்ணிக்கை குறைவொன்றுமில்லை! ஐயம் இருந்தால் சொல்லுங்கள் நிறைய சுட்டி தருகிறேன் :)<br /><br />மற்றபடி எந்த ஒரு கலைஞருக்கும் "ஆஹா-ஓகோ- உலகின் முதல்-அப்படியா-இப்படியா" என்று புகழ் பாடுவோர் இருக்கத்தான் செய்வார்கள். <br /><br />அதையெல்லாம் சட்டை செய்வதும் பொருமுவதும் உடல் நலத்துக்குக் கேடு :)<br /><br />app_enginehttps://www.blogger.com/profile/02944497293600156127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-87266836060521976272013-03-26T06:00:18.651-07:002013-03-26T06:00:18.651-07:00ஐயா வணக்கம்
ஒரு தனி நபரோ, ஒரு தனி ரசிக வட்டமோ அவர...ஐயா வணக்கம் <br />ஒரு தனி நபரோ, ஒரு தனி ரசிக வட்டமோ அவர்களுக்கு பிடித்த இசையோ எழுத்தோ பற்றி சிலாகிதால், அதை ஏன் பேசவில்லை இதை ஏன் என எதிர்க்கவோ புலம்பவோ என்ன இருக்கிறது?. மற்ற ரசிகர்களும் மற்ற வட்டங்களும் ஏன் செய்யவில்லை என்று தான் கேட்க வேண்டும்.<br /><br />தனக்கு இசை கடவுள் என்று தான் சொல்கிறார்கள், நமக்கும் எல்லோருக்கும் சேர்த்து அல்ல. தமிழில் இதுதான் சிறந்தது என்று குறிப்பிட்டு சொன்னால் தான் கேட்க முடியும். நமக்காக அப்படி தோன்றினால் அதற்க்கு யார் பொறுப்பு?. ராஜா ரசிகர்கள் என்ன தமிழ் இசை துறையா நடத்துகிறார்கள், மற்ற அணைத்து இசையும் ஆய்ந்து பேச?. ஒருவர் தன் பதிவை தான் எழுதவோ எழுதாமல் இருக்கவோ முடியும், மற்றவர்கள் என்ன எழுது கிறார்கள் என்பதை எப்படி மாற்ற முடியும்? இத்தனை பதிவு ஏன் வருகிறது என்று கேட்டல் என்ன சொல்ல?<br /><br />நீங்கள் சொல்வது எல்லா வட்டத்திலும் நிழ்கிறது. ஒரு சினிமாகாரர்கள் நடத்திய விழாவில் பராசக்திக்கு முன் படமே வராதது போல் பேசினார்கள். அதற்க்கு என்ன செய்ய?.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-11974734013837740342013-03-25T19:48:10.291-07:002013-03-25T19:48:10.291-07:00மய்யம் டாட்காமைப் பார்ப்பதும் அங்கே இளையராஜா விமர்...மய்யம் டாட்காமைப் பார்ப்பதும் அங்கே இளையராஜா விமர்சிக்கப்பட்டிருப்பதும், இளையராஜாவுக்கு முன்பிருந்தோர் அங்கே மிகமிக மதிப்புடன் கவனிக்கப்படுவதையும் படித்துவிட்டு எனக்கு கண்கள் திறப்பதும் கருத்து பிறப்பதும் அப்புறம் இருக்கட்டும். இங்கே மய்யம் டாட்காமில் என்ன சொல்லப்படுகிறதோ அந்தக் கணிப்புப்படிதான் இளையராஜா மொத்தப் பதிவுலகில் கொண்டாடப்படுகிறாரா என்பது பார்க்கப்படவேண்டும்.<br /><br />ஒன்றுமேயில்லாத உருப்படாத பாடல்களையெல்லாம் ஆகா ஓகோவென்று கொண்டாடுவதும் அவர்தானே எங்கள் ஆதர்சம் அவர்தானே எங்கள் இசைக்கடவுள் அவருக்கு இணையாக இங்கே யாரிருக்கிறார்கள் என்றெல்லாம் அபத்தமாக வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பதிவுகளையெல்லாம் நீங்கள் படிப்பதில்லை போலிருக்கிறது.<br /><br />இத்தகைய பதிவுகள்தாம் நாள்தோறும் வந்துகொண்டிருக்கின்றன.அதுவும் சரம்சரமாக. <br /><br />குமுதத்தில் அவரது கேள்விபதில்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் சில கேள்விகளை மட்டும் படித்துப்பாருங்கள். அவரைச் 'சும்மாவே' எப்படியெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது புரியும்.மற்ற பல நல்ல கேள்விகளைக் கேட்டவர்களைப் பிடித்துப்பிய்த்து எறிந்துவிடும் ராஜா இத்தகைய சொறிந்துவிடும் கேள்விகளுக்கு ஒன்றுமே சொல்லாமல் அவற்றை ஏற்றுக்கொள்கிற தொனியில் பதில் சொல்லியிருப்பதும் தெரியும்.<br /><br />திரும்பவும் சொல்கிறேன்,ராஜா என்ற ஒரு நல்ல இசையமைப்பாளர்மீது எனக்கும் மதிப்பும் மரியாதையும் உண்டு. அவரது இசையை நானும் ரசிப்பது உண்டு.ஆனால் அவரால்தான் திரைஇசையே உருவானது, அவருக்கு இணை இங்கே யாருமில்லை என்ற கோணத்தில் அபத்தங்கள் பரப்பப்படுவதை(மய்யம் டாட்காமைத் தவிர)ஏற்பதற்கில்லை.<br /><br />ஒன்றும் வேண்டாம் 'என்னுயிர் ராசா' என்ற படத்தில் இளையராஜா இசையில் அமைந்த 'காட்டுக்குருவிச் சத்தம் காதுல விழுந்துச்சோ'பாடலை நேற்று இரவு கேட்டேன்.உயிரை உருக்கிவிட்டது என்று ஒரு பதிவு போடுங்கள்.'ஐயோ அந்த இசையனுபவத்தை நீங்களும் அனுபவிச்சீங்களா? அதை அனுபவிக்கக் கொடுத்துவைத்திருக்கணுமே.ராஜாவுக்கு இணை இங்கே யாரிருக்கிறார்கள்? என்ற பாணியில் எத்தனைப் பின்னூட்டம் வருகிறது என்று பாருங்கள்.<br /><br />தங்களின் தமிழ்த்தீவிர இசைப்பற்றுக்கு எனது பாராட்டுக்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-27093012354917687472013-03-25T09:36:03.466-07:002013-03-25T09:36:03.466-07:00தமிழ்த்திரை இசை குறித்து 90-களின் பிற்பகுதி தொடங்க...தமிழ்த்திரை இசை குறித்து 90-களின் பிற்பகுதி தொடங்கி இன்று வரை - ஏறத்தாழ 15-க்கும் அதிகமான ஆண்டுகள் இன்டர்நெட்டில் படித்தும், எழுதியும், விமர்சித்தும், விவாதித்தும் வரும் ஒரு தீவிர தமிழ்த்திரை இசை விசிறி என்ற முறையில் "இளையராஜா விசிறிகள்" பற்றிய உங்களது கண்டனத்துக்கு மறுப்பு எழுத வேண்டியது என் கடமை!<br /><br />உங்களது கூற்றில் சற்றும் உண்மை இல்லை!<br /><br />இன்டர்நெட்டில் முதன் முதல் தமிழ்த்திரை இசைக்கென்று தொடங்கப்பட்ட தளம் tfmpage.com என்பதே. அங்கே போய்ப்பாருங்கள், எந்த அளவுக்கு இளையராஜா விமர்சிக்கப்பட்டிருக்கிறார், அவருக்கு முன்பிருந்தோர் எவ்வளவு மதிப்புடன் கவனிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று உங்கள் கண்கள் திறக்க இது உதவும்! <br /><br />தற்சமயம் இந்தத்தளம் mayyam.com என்ற புதிய பெயரில், லட்சத்துக்கும் அதிக உறுப்பினர்களுடன் நடந்து வருகிறது, பழைய இசையும், ராசா ரஹ்மான் இசையும், புதிய இசையும் எல்லாம் புகழவும், விமர்சிக்கவும் படுவதை நீங்கள் காண முடியும். <br /><br />எடுத்துக்காட்டாக, சாகுமுன் ஒரு ஆள் கட்டாயம் கேட்டிருக்க வேண்டிய ஆயிரம் பாடல்கள் என்ற இழையில் எத்தனை எத்தனை பழைய பாடல்கள் பட்டியலில் உள்ளன என்று கவனியுங்கள்:<br /><br />http://www.mayyam.com/talk/showthread.php?8718-1000-songs-to-hear-before-you-die<br /><br />ஆதலினால், ராசா மட்டும் தான் புகழப்படுகிறார் என்ற பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதைக் கொஞ்சம் நிறுத்துங்கள் ஐயா!<br />app_enginehttps://www.blogger.com/profile/02944497293600156127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-17426676368891825522013-03-25T09:34:09.799-07:002013-03-25T09:34:09.799-07:00தமிழ்த்திரை இசை குறித்து 90-களின் பிற்பகுதி தொடங்க...தமிழ்த்திரை இசை குறித்து 90-களின் பிற்பகுதி தொடங்கி இன்று வரை - ஏறத்தாழ 15-க்கும் அதிகமான ஆண்டுகள் இன்டர்நெட்டில் படித்தும், எழுதியும், விமர்சித்தும், விவாதித்தும் வரும் ஒரு தீவிர தமிழ்த்திரை இசை விசிறி என்ற முறையில் "இளையராஜா விசிறிகள்" பற்றிய உங்களது கண்டனத்துக்கு மறுப்பு எழுத வேண்டியது என் கடமை!<br /><br />உங்களது கூற்றில் சற்றும் உண்மை இல்லை!<br /><br />இன்டர்நெட்டில் முதன் முதல் தமிழ்த்திரை இசைக்கென்று தொடங்கப்பட்ட தளம் tfmpage.com என்பதே. அங்கே போய்ப்பாருங்கள், எந்த அளவுக்கு இளையராஜா விமர்சிக்கப்பட்டிருக்கிறார், அவருக்கு முன்பிருந்தோர் எவ்வளவு மதிப்புடன் கவனிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று உங்கள் கண்கள் திறக்க இது உதவும்! <br /><br />தற்சமயம் இந்தத்தளம் mayyam.com என்ற புதிய பெயரில், லட்சத்துக்கும் அதிக உறுப்பினர்களுடன் நடந்து வருகிறது, பழைய இசையும், ராசா ரஹ்மான் இசையும், புதிய இசையும் எல்லாம் புகழவும், விமர்சிக்கவும் படுவதை நீங்கள் காண முடியும். <br /><br />எடுத்துக்காட்டாக, சாகுமுன் ஒரு ஆள் கட்டாயம் கேட்டிருக்க வேண்டிய ஆயிரம் பாடல்கள் என்ற இழையில் எத்தனை எத்தனை பழைய பாடல்கள் பட்டியலில் உள்ளன என்று கவனியுங்கள்:<br /><br />http://www.mayyam.com/talk/showthread.php?8718-1000-songs-to-hear-before-you-die<br /><br />ஆதலினால், ராசா மட்டும் தான் புகழப்படுகிறார் என்ற பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதைக் கொஞ்சம் நிறுத்துங்கள் ஐயா!<br />app_enginehttps://www.blogger.com/profile/02944497293600156127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-30664434391477623902013-03-21T10:16:48.139-07:002013-03-21T10:16:48.139-07:00வாருங்கள் குட்டிப்பிசாசு, இலங்கை விவகாரத்தில் கருண...வாருங்கள் குட்டிப்பிசாசு, இலங்கை விவகாரத்தில் கருணாநிதி மீது மட்டும் தவறில்லை எல்லார் மீதும்தான் தவறிருக்கிறது என்பதைத்தான் நானும் என்னுடைய பதிவுகளில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இதை அப்படியே ஒட்டுமொத்தமாக கருணாநிதிக்கு எதிராக மட்டுமே திருப்பும் அரசியலைத்தான் நான் கோடிட்டுக் காட்டுகிறேன்.<br />திரைப்படங்கள் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு சரியே. எல்லாமே ஏதோ இவர்கள் காலத்தில் இவர்களால்தான் நடந்துகொண்டிருக்கிறது என்று ஏற்படுத்தப்படுகின்ற பிம்பத்தை உடைக்கும் வேலைதான் நம்முடையதாக இருக்கப்போகிறது. இருக்கவேண்டும்.<br />நீங்கள் நினைவுபடுத்தியிருக்கும் வின்சென்ட்டின் அந்தக் காட்சி மிகவும் பாராட்டப்பட்ட ஒன்று என்பது நினைவில் இருக்கிறது.<br /><br />ஒளிப்பதிவுத் துறையில் மார்க்கஸ் பார்ட்லேயின் ஒளிப்பதிவும் நிபுணத்துவம் வாய்ந்தது. அவர் ஒரு ஆஸ்திரேலியர் என்று நினைக்கிறேன். செம்மீன் கூட அவருடைய ஒளிப்பதிவில் வந்த படம் என்றுதான் ஞாபகம்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-85327416215018011202013-03-21T10:04:57.739-07:002013-03-21T10:04:57.739-07:00காரிகன், நுணுக்கங்களுடனும் ஆதாரங்களுடனும் மட்டுமல்...காரிகன், நுணுக்கங்களுடனும் ஆதாரங்களுடனும் மட்டுமல்ல வெளியேவராத பல ரகசியத்தகவல்களையும் இணையத்தில் கொண்டுவந்து கொட்டுகிறவராக இருக்கிறார் திரு வவ்வால். இதனால்தான் திரு ராஜநடராஜன் நீங்கள் உளவுத்துறையில் இருக்கிறீர்களா என்று அவர் தளத்தில் வவ்வாலைக் கேட்டிருக்கிறார். இவற்றையெல்லாம் தாண்டி எனக்கு அவரிடம் பிடித்தது அவர் தமக்கென்று ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தனி ஸ்டைல். இது அவருடைய பதிவுகளை விடவும் அவர் போடும் பின்னூட்டங்களில் அதிகமாகப் பளிச்சிடுகிறது என்றே தோன்றுகிறது.<br />இந்த இளையராஜா ரசிகர்கூட்டம் செய்யும் அலப்பறைகளினால் அவருடைய நல்ல பாடல்களைக்கூட ரசிக்கமுடியாமல் அவரை அடிக்கடி விமர்சிக்க வேண்டியிருக்கிறதே என்ற வருத்தமும் ஏற்படுகிறது. அவரது ரசிகர்கள் மீசையை முறுக்கிக்கொண்டு வந்தாலும் சரி; அப்படியே சும்மா வந்தாலும் சரி நியாயமெனப்பட்டதைச் சொல்லியே தீருவோம்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-4778159629113006632013-03-21T08:05:35.175-07:002013-03-21T08:05:35.175-07:00ஐயா,
கருணாநிதி மீதான வெறுப்பு வைகோ,சீமான் போன்ற...ஐயா,<br /> <br /> கருணாநிதி மீதான வெறுப்பு வைகோ,சீமான் போன்றவர்களால் அதிகமாக்கப்பட்டது உண்மையே. ஈழத்தமிழர்கள் மத்தியில் கருணாநிதிதான் முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்குக் காரணம் என பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அப்போது தமிழகத்தில் யார் ஆட்சியில் இருந்தாலும், நடந்த படுகொலையை யாராலும் தடுத்திருக்க முடியாது. தோற்கவில்லை, வீழ்ந்தாலும் விதையாவோம் என வெட்டியாக பேசி வீணாகப்போனது தான் மிச்சம். <br /> <br /> இளையராஜா கூட ஏ.எம்.ராஜாவின் இசைக்குழுவில் சிலகாலம் கிட்டார் வாசித்தார் என கேள்விபட்டிருக்கிறேன். இளையராஜாவின் இசை எனக்குப் பிடிக்கும். ஆனால் தானே பாடல் எழுதுவது, தனக்குப் பொருந்தாத பாடல்களைப் பாடிக் கெடுப்பது என சில அபத்தங்கள் அவரிடம் உள்ளன. <br /> <br /> தற்போது தாங்கள் சொன்னது போல ஒரு பரப்புரை செய்யப்படுகிறது. ஏதோ இப்போது இருக்கும் சிலரால் தான் தமிழ் சினிமாத்துறையே புதுமை அடைந்தது என. உலகப்படம் என எதையோ பார்த்துவிட்டு, படம் எடுப்பது எப்படி என சிலர் பாடம் எடுக்கின்றார்கள். வசதியில்லாத காலத்தில் அவர்கள் எப்படி படம் எடுத்திருப்பார்கள். எவ்வளவு மெனக்கெட்டிருப்பார்கள். <br /> <br /> வின்சென்ட் அவர்கள் அவருடைய காலத்தில் பல புதுமைகள் செய்தவர். உதாரணமாக சொன்னது நீதானா... பாடலில் காமிரா ஊஞ்சலின் கீழ் சென்று மேலெழும்பும். இது அக்காலத்தில் முற்றிலும் புதுமையானது. குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-88645213417961724252013-03-21T00:03:09.441-07:002013-03-21T00:03:09.441-07:00வவ்வால் அமுதவனின் தளத்திற்கு வருவது ஒரு மகிழ்ச்சி...வவ்வால் அமுதவனின் தளத்திற்கு வருவது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வுதான். முன்னர் ஒரு பதிவில் அவரும் நானும் எங்கள் பெயர் காரணமாக முட்டிக்கொண்டது நினைவிருக்கிறது. அதன் பின் அவர் பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். எந்த தலைப்பை பற்றியும் ரொம்ப நுணுக்கமாகவும் ஆதாரங்களுடனும் நிறைய அவர் எழுதுவது குறித்து எனக்கு வியப்பு வருவதுண்டு. இதே போலவே தருமி அவர்களின் பதிவுகளும் நன்றாகவே இருக்கும். உங்கள் தளத்திற்கு இது போன்று இணையத்தில் நாகரீகமாக கருத்துக்களை சொல்லும் பலர் வரவேண்டும் என்பதே என் விருப்பம். நான் முன்பே ஒரு முறை சொன்னது போல உங்களின் தளத்தில் நல்ல தமிழையும் ஆரோக்கியமான விவாதங்களையும் படிக்க முடிகிறது. இசையை பற்றி நீங்கள் கொடுத்திருக்கும் தகவல் நான் (இளையராஜாவுக்கு எங்கே ஆரம்பித்து எங்கே முடிப்பது என்பது நன்றாக தெரியும் போன்ற "அபூர்வ" துணுக்குகள்) எங்கோ படித்ததாக ஞாபகம். இதையும் விட இளையராஜாவின் இயற்பியல் என்று ஒரு பதிவு இங்கே இருக்கிறது. இளையராஜாவுக்கே தெரியாத பல இசை நுணுக்கங்களை அந்த பதிவர் வரிக்கு வரி எழுதி நம்மை வியப்பின் எல்லைக்கே கொண்டு செல்வார். வவ்வால் சொன்னது போலன்றி ரகுமான் விசிறிகளை விட இளையராஜாவின் அபிமானிகளே அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறார்கள். இப்படி எழுத ஆரம்பிக்கும் போதே இன்னும் எழுத தோன்றுகிறது. இருந்தும் இந்த பதிவின் நோக்கம் அரசியல் என்பதால் இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கிறேன். பின்னர் "ராஜா ராஜாதான்" கும்பலிலிருந்து யாராவது திடீரெனெ குதித்து மீசையை முறுக்கலாம்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-31421762047491029512013-03-20T19:04:47.914-07:002013-03-20T19:04:47.914-07:00வாசகன், நீங்கள் சொல்வது சரிதான். அதைப்பற்றித்தான் ...வாசகன், நீங்கள் சொல்வது சரிதான். அதைப்பற்றித்தான் இங்கே திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக்கிறோமே.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-65538434042314102592013-03-20T19:03:19.106-07:002013-03-20T19:03:19.106-07:00வவ்வால் அவர்களே நீங்கள் சொன்னது சரிதான். கலைஞரின் ...வவ்வால் அவர்களே நீங்கள் சொன்னது சரிதான். கலைஞரின் தமிழைத்தான் எனக்கும் ரொம்பவும் பிடிக்கும். தவிர, இந்த வயதிலும் ஒரு நிமிடம்கூட வீணாக்காமல் சுறுசுறுப்புடன் இருப்பது. இப்போதுகூட விடியற்காலை நான்கு மணிக்கும் ஐந்துமணிக்கும் எழுந்து கொள்கிறார் என்று கேள்விப்பட்டேன். காங்கிரஸூடன் சேர்ந்துகொண்டு அவர் செய்த தவறுகள்தாம் அவரின் புகழை பாதாளத்துக்குக் கொண்டுசென்று விட்டன.<br /><br />வின்சென்ட்டின் பயணம் ஸ்ரீதரின் தேன்நிலவு படத்திலிருந்தே ஆரம்பித்துவிடுகிறது என்று நினைக்கிறேன். வண்ணப்படங்களில்கூட பிரமாதப் படுத்தியிருப்பார் அவர். ஒன்றுமில்லை காதலிக்க நேரமில்லை, வெண்ணிற ஆடை படங்களின் பாடல் காட்சிகளை கவனியுங்கள். ஒவ்வொரு பிரேமையும் அப்படியே கழற்றி சட்டம்போட்டு வீட்டில் மாட்டிவைத்துக்கொள்ளலாம் போல ஒரு ஓவிய எஃபக்ட் கொண்டுவந்திருப்பார் பாருங்கள் கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போலிருக்கும்.<br /><br />ஏ.எம்.ராஜா மிக அருமையான பாடகர், இசையமைப்பாளர். பொதுவாகத் திரையுலகில் ஒரு பாடகர் இசையமைப்பாளராக உருமாறினார் என்றாலேயே அவரை ஒதுக்க ஆரம்பித்துவிடுவார்கள். நமக்குப் போட்டியாக வந்துவிட்டான் என்ற நினைப்புதான் இசையமைப்பாளர்களுக்கு முன்நிற்கும். கல்யாணப்பரிசும், தேன்நிலவும் தந்த மிகப்பெரிய இசைவெற்றிகளுக்குப் பின்னர் ஸ்ரீதர்கூட அடுத்த நெஞ்சில் ஓர் ஆலயம் படத்திற்கு விஸ்வநாதன்-ராம மூர்த்தியிடம் வந்துவிட்டார். இளையராஜாவிடம் ஏ.எம்.ராஜாவே பலமுறை போய் வாய்ப்புக்கேட்டும்- கூப்பிடுகிறேன், கூப்பிடுகிறேன் என்று சொல்லியே இளையராஜா தட்டிக்கழித்துவிட்டார் என்றும் சொல்லக்கேட்டிருக்கிறேன்.<br /><br />நேற்றைய இளைஞன் இசையென்றால் இளையராஜாவிடமிருந்து ஆரம்பிக்கிறது என்று சொல்வதும் இன்றைய இளைஞன் ரகுமானிலிருந்து ஆரம்பிக்கிறது என்று சொல்வதும் நாளைய இளைஞன் ஜி.வி.பிரகாஷிலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்று சொல்லப்போகும் அபாயமும் இருக்கிறது என்பதனால்தான் இளையராஜா ரசிகர்களிடம் இந்தப் போங்காட்டம் வேண்டாம் என்கிறேன். <br />மிகப்பெரிய சாதனையாளர்களை நீ மதிக்கவில்லையென்றால் ஒரு சாதாரண சாதனையாளன் உன்னை மதிக்கமாட்டான். அதுவும் இல்லாமல் ஒரு மிகமிகச் சாதாரணன் உன்னை இடறிவிட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருப்பான் என்பதுதான் இயற்கை.<br /><br />பல பெரிய தலைவர்களை மதிக்காமல் பல முக்கிய சாதனையாளர்களை அங்கீகரிக்காமல் கேலி பேசியும் நைச்சியமாய்த் தட்டிக்கழித்தும் வந்ததனால்தான் கலைஞர் இன்றைக்கு மிகமிக சாதாரணர்களால் இடறிவிடப் படுகிறார் என்பதும் அலைக்கழிக்கப் படுகிறார் என்பதும் நடக்கிறது என்பதே என்னுடைய அபிப்பிராயம்.<br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.com