tag:blogger.com,1999:blog-5165985521656307434.post8434315921023612937..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: கர்நாடகத் தேர்தல் முடிவுகள் – பிஜேபி தோற்றது ஏன்?Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-69960893154740344972013-05-10T05:52:20.522-07:002013-05-10T05:52:20.522-07:00வாங்க நடராஜன், உங்களைப் பதிவில் சந்தித்து நீண்ட நா...வாங்க நடராஜன், உங்களைப் பதிவில் சந்தித்து நீண்ட நாட்களாகிவிட்டன. உங்களைக் காணோம் என்றெல்லாம் வவ்வால் பின்னூட்டங்களில் பலர் தேடிக்கொண்டிருந்த தமாஷூம் நடந்துகொண்டிருந்தது.<br />தமிழர்களின் ஓட்டுக்கள் முன்புபோல் காங்கிரஸை மட்டுமே ஆதரித்துப் போடப்படவில்லை. பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்துவிட்டன. எல்லாம் காசு செய்த மாயம்தான். <br />தவிர இந்த இரண்டு தேர்தல்களில் பணம் புழங்கியதைப்போல் கர்நாடகத்தில் என்றைக்கும் பணப்புழக்கம் இருந்ததில்லை. மேல்தட்டு வர்க்கம், மற்றும் நடுத்தர வர்க்கத்தினரைத் தாண்டி மற்ற அனைவருக்கும் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்ற அளவில் பணம் இறைக்கப்பட்டது.<br /> தேர்தல் அன்றைக்கு எங்கள் வீட்டில் வேலைசெய்யும் பெண்மணி 'இரவு தூங்குவதற்காக அப்போதுதான் படுத்தோம். கதவு தட்டப்பட்டது. எழுந்துபோய்த் திறந்தால் எங்கள் வீட்டில் இரண்டு ஓட்டு. இரண்டு ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தார்கள்' என்றார்.<br />"பரவாயில்லையே. உனக்கு அதிர்ஷ்டம்தான்" என்றார் என் துணைவியார்.<br />"என்னம்மா அதிர்ஷ்டம்? பக்கத்து ஏரியாவில் இருக்கும் என் மாமியார் எங்க ஓட்டுக்களையெல்லாம் கணக்குக் காட்டி பத்தாயிரம் ரூபாய் வாங்கியிருக்கார்" என்றார் அந்தப் பெண். <br />ஒரு குடும்பத்திற்குப் பத்தாயிரம் ரூபாய்... இந்தியா எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது.......... !<br />தமிழர்களை ஒருங்கிணைக்க நல்லதொரு தலைமை இங்கே கிடையாது. ஈழப்பிரச்சினை ஒன்றிற்கு மட்டும் இங்கே உணர்வுபூர்வமாக ஒன்றுகூடுவார்கள். மற்ற எல்லா விஷயங்களையும் தீர்மானிப்பது பணம்தான்.<br />எப்படியோ 'நம்மவர்கள்' பணம் சம்பாதிக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டு போகவேண்டியதுதான்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-79517649777291211702013-05-10T05:35:03.283-07:002013-05-10T05:35:03.283-07:00வாங்க அனானிமஸ், சும்மா எதையோ அடிச்சுவிடவில்லை. பிஜ...வாங்க அனானிமஸ், சும்மா எதையோ அடிச்சுவிடவில்லை. பிஜேபி தோற்றதற்கான காரணத்தை தத்துவார்த்த ரீதியாகவே எல்லோரும் அலசிக்கொண்டிருக்கின்றனர். அடிப்படையில் என்ன நடந்தது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவன் என்ற முறையிலும், கண்கூடாகச் சிலவற்றைப் பார்க்கமுடிந்தது என்ற முறையிலும்தான் ஜனதா தளத்தின் குட்டித்தலைவர்கள் 'வாங்கப்பட்ட' விவகாரம்தான் வெற்றிக்கும், தற்போதைய தோல்விக்கும் காரணம் என்பதைக் கணித்து எழுதப்பட்ட பதிவு இது. ஏனெனில் என்னுடைய நண்பர்கள் சிலர் ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்கள், 'நல்ல விலைக்கு' வாங்கப்பட்டார்கள். அந்த அனுபவமும் அவர்கள் கொடுத்த பல தகவல்களும்கூட இந்தப் பதிவை எழுதக் காரணமாயின.<br />இதில் பிராமணர்களைப் பிடிக்காது என்பதும் பிஜேபியை பிடிக்காது என்பதும்தாம் காரணம் என்று நீங்கள் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறீர்கள். இன்றைய இந்திய அரசியலில் எந்த ஒரு கட்சியையுமே முழுவதுமாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நான் இல்லை. என்னைப்பொறுத்தவரை காங்கிரஸூக்கு என்ன இடமோ அதே இடம்தான் பிஜேபிக்கும். <br />தவிர, பிராமணர்களை எனக்குப் பிடிக்காது என்பதை எதைவைத்துச் சொல்கிறீர்களோ புரியவில்லை. நீங்கள் யார் என்பதும் தெரியவில்லை.<br />நான் முன்பே ஒருமுறை இணையத்திலேயே சொல்லியிருக்கிறேன், எனக்கு பிராமண நண்பர்கள்தாம் அதிகம் என்பதை. என்னை வளர்த்து ஆதரித்த மிக முக்கியமான எழுத்தாளர்கள் சாவியும், சுஜாதாவும், நாபாவும்....மூவருமே பிராமணர்கள்தாம். தவிர எனக்குப் பிடித்த தி.ஜானகிராமன், ஸ்ரீவேணுகோபாலன்,ராகி.ரங்கராஜன், அகஸ்தியன் இன்னும் நிறைய நிறைய எழுத்தாளர்கள் பிராமணர்களே. இப்போதைய பாலகுமாரனும், மாலனும்கூட என்னுடைய மிக நல்ல நண்பர்களே. இத்தனை இருந்தும் அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு நீங்கள் அரசியல்ரீதியான காரணங்களைத் தேடி அடுக்காதீர்கள். மேலே உள்ள பதிவில் பிஜேபியை விமர்சன வளையத்துக்குள் கொண்டுவந்ததும் அனந்தகுமாரை விமர்சித்ததுவும் மட்டுமே உங்களுடைய 'முத்திரையைக்' குத்துவதற்குப் போதுமானது என்றால் ஹெக்டே பற்றி நல்லவிதமாகத்தானே சொல்லியிருக்கிறேன். அவர் பிராமணர் இல்லையா?<br />தேவேகௌடாவையும், ஈஸ்வரப்பாவையும் லேசாக குற்றம் சாட்டியிருக்கிறேனே-அவர்கள் பிராமணர்கள் அல்லவே.<br />ஆக, உங்களுக்கு அவ்வளவுதான் புரிந்தது என்பதற்காக மனம்போன போக்கில் கமெண்ட் போடாதீர்கள். தனிப்பட்ட தொகுதிகளில் பிஜேபி வெல்ல தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. 'ஐடியாலஜிக்காக' எங்கேயும் பிஜேபி ஜெயிக்கவில்லை. அதேபோல ராகுல் பிரவேசத்துக்காகவும் காங்கிரஸ் எங்கும் ஜெயிக்கவில்லை.<br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-73082327362836508742013-05-09T05:03:12.335-07:002013-05-09T05:03:12.335-07:00அமுதவன் சார்! இந்திராவின் சிக்மகளூர் காலம் தொட்டே ...அமுதவன் சார்! இந்திராவின் சிக்மகளூர் காலம் தொட்டே நீங்கள் கர்நாடக அரசியலை பிரித்து மேயும் வல்லமையுள்ளவர் என்பதை இந்த பதிவு மீண்டுமொரு முறை உணர்த்துகிறது.நேற்று புதிய தலைமுறை நேர்பட கலந்துரையாடலை விட சிறப்பாக பல விசயங்களை பதிவு தொட்டுச் செல்கிறது.<br /><br />என்னைப்பொறுத்த வரையில் பிஜேபியின் தோல்விக்கு இரண்டே காரணங்கள் ஊழல் மற்றும் எடியூரப்பா மட்டுமே.பிஜேபி தென்னிந்தியாவில் கால் ஊன்றும் சந்தர்ப்பத்தை கோட்டை விட்டு விட்டார்கள்.அகில இந்திய அளவிலும் கூட ஜனதா ஆட்சி,பிஜேபி ஆட்சியின் குறைகளே காங்கிரஸை இன்னும் மாற்று சக்தியாக நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.<br /><br />பெங்களூர் வாழ் தமிழர்களால்தான் ஒரு சில இடங்களையாவது பிஜேபி பிடிக்க முடிந்தது என்கிறீர்கள்.ஆனால் தமிழர்கள் அதிகம் வாழும் கோலார் பகுதிகளிலும் கூட பிஜேபி தோல்வியடைந்துள்ளது என்பதோடு போட்டியிட்ட தமிழர்களும் தோல்வியடைந்துள்ளதுக்கு காரணம் என்ன?<br /><br />பெங்களூர் வாழ் இணையதாரர்கள் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-12912925158494265042013-05-09T02:28:44.857-07:002013-05-09T02:28:44.857-07:00ஏதாச்சும் அடிச்சு உடாதீங்க
உங்களுக்கு பிஜேபி பிடிக...ஏதாச்சும் அடிச்சு உடாதீங்க<br />உங்களுக்கு பிஜேபி பிடிக்காது<br />பிராமணர்களை பிடிககதுன்னு வெளிபடையாக சொல்ல வேண்டியது தானே<br /><br />பெங்களூர் தெற்க்கு, ஜெயநகர், பொம்மனகல்லி , பவனகுடி. இதெல்லாம் பிஜேபி ஜெயித்த தொகுதிகள். இங்கு எத்தனை தமிழ் கவின்சிலர்கள் இருக்கிறார்கள்?<br /><br />காங்கிரஸ் ஜெயித்த பிடிஎம், சிவாஜி நகர், காந்திநகர் தொகுதிகள் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி.<br /><br />ஏதாச்சும் எழுதனும்னு எழுதகூடாதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-82805961852348238632013-05-09T02:00:24.266-07:002013-05-09T02:00:24.266-07:00நீங்கள் சொல்வதென்னவோ உண்மைதான் விஜயன்.நீங்கள் சொல்வதென்னவோ உண்மைதான் விஜயன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-57199509235613227562013-05-09T00:42:54.429-07:002013-05-09T00:42:54.429-07:00 இன்றைய தேதியில் குமாரசாமி அளவிற்கு மக்கள் செல்வாக... இன்றைய தேதியில் குமாரசாமி அளவிற்கு மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர் காங்கிரஸ் மற்றும் பிஜேபி யிலோ கிடையாது.ஆனால் இந்த தேர்தலில் மீடியாக்கள் ஜனதா தளத்தை ஒரு வழி ஆக்கிவிட்டன.vijayanhttps://www.blogger.com/profile/05392179336401967133noreply@blogger.com