Friday, May 24, 2019

அமேசானில் என்னுடைய நூல்கள்


இது கணிணி யுகம். அச்சு யுகத்தில் எல்லா இதழ்களிலும் எழுதிப் புகழ் பெற்றவர்களாக இருந்தவர்கள் கூட , கணிணி யுகத்தில் காணாமல் போய்விடுகிறார்கள். ஏனெனில் 'தொழில்நுட்ப மாற்றத்தால்' கணிணியிலும் கையிலுள்ள செல்பேசியிலும் 'மட்டும்தான்' - 'படிப்பது' என்ற மனநிலைக்கு இன்றைய இளைஞர்கள் வந்துவிட்டதே காரணம்.
கணிணியிலோ செல்போனிலோ படிக்கக் கிடைக்கவில்லையானால் அந்த எழுத்துக்களை அவர்கள் புறக்கணித்துவிடுகிறார்களே தவிர, புத்தகங்களைத் தேடிப்போய் படிக்கின்ற அனாவசிய வேலைகளையெல்லாம் வைத்துக் கொள்வதில்லை.
இது ஒரு பக்கம்.
அடுத்து இதழ்கள், புத்தகங்கள் என்றே தம் வாழ்நாளைக் கழித்து ஓய்வு பெற்றவர்கள்கூட தங்கள் பிள்ளைகள் இருக்கும் வெளிநாடுகளில் உட்கார்ந்துகொண்டு 'தமிழ் இதழ்களும், தமிழ் புத்தகங்களும் இந்த நாடுகளில் கிடைப்பதில்லையே என்ன செய்யலாம்?' என்று கைகளைப் பிசைந்துகொண்டு வெறுமனே உட்கார்ந்து விடுகிறார்கள்.
இவர்களின் கேள்வி என்னை நோக்கிப் பல இடங்களில் வீசப்பட்டிருக்கிறது.
"நீங்கள் இப்போதெல்லாம் எழுதுவதில்லையா?"
என்னதான் நான் கணிணியில், வலைப்பூவில்,
டுவிட்டரில் எழுதினாலும் அவை குறிப்பிட்டவர்களுக்குதான் சென்று சேருகின்றன.
இதனால் நாம் எழுதுவதையெல்லாம் நூலாகக் கொண்டு வந்துவிடலாமே என்ற எண்ணத்தில்தான் அமேசானிலிருக்கும் கிண்டிலில் எழுத ஆரம்பித்தேன்.
கேள்வி கேட்டவர்கள் உட்பட எல்லாரும் அங்கே சென்று படித்துக் கொள்ளலாம்.
அமேசான் கிண்டிலில் சமீபத்தில் நான் மூன்று நூல்களைப் பதிவேற்றியிருக்கிறேன்.

1) 'கங்கையெல்லாம் கோலமிட்டு...........................' இந்தியாவில் பெண்கள் பரவலாக வேலைக்குப் போக ஆரம்பித்த காலகட்டத்தில் எழுதப் பட்ட நாவல் இது. யதார்த்த குடும்பங்களின் வாழ்நிலையை, வேலைக்குப் போகிற பெண்களின் நிலைமையையும் பேசுகின்ற நாவல். எழுத்தாளர் சுஜாதா முன்னுரை எழுதியிருக்கிறார்.









2) 'லிலிபுட் மனிதர்கள்' ................................................நீங்கள் அதிகம் சந்தித்திருக்காத களங்கள். பிறவியிலேயே சித்திரக்குள்ளர்காகப் பிறந்துவிட்டவர்களைப் பற்றிய நாவல். சர்க்கஸ் வாழ்க்கையும் இந்த நாவலில் விவரிக்கப்படுகிறது. ஒருமுறை படித்துவிட்டால் இந்த நாவலில் வரும் பாருக்குட்டியை ஆயுசுக்கும் மறக்க முடியாது.






3) 'திரை இசையும் சில பிரபலங்களும் ......................' விஸ்வநாதன், ராமமூர்த்தி இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என்று சகலரையும் பேசும் கட்டுரைகள் அடங்கிய நூல் இது. இதன் சில பாகங்களை வலைப்பூவில் எழுதியபோதே அவை மிகுந்த பேசுபொருளாகியிருக்கின்றன. சிலரைப் பற்றி திரைத்துறையில் இருப்பவர்களே பேச மறுக்கும் பல விஷயங்களையும் நான் இதில் பேசியிருக்கிறேன். பல சாதனைகள் செய்து விட்டுப் போயிருக்கும் நம் முன்னோர்களை நாம் அவமானப் படுத்தலாமா என்பதுதான் இந்த நூலில் நான் அடிநாதமாக எழுப்பியிருக்கும் கேள்வி.
கணிணியில் எழுதத் துவங்கிவிட்டேன். நான் ஏற்கெனவே பிரபல பத்திரிகைகளில் எழுதிய புகழ் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் மட்டுமின்றி இப்போது முழு மூச்சாக ஈடுபட்டிருக்கும் 'ஆரோக்கிய வாழ்வு' பற்றிய நூல்களையும் இந்தப் பட்டியலில் கொண்டுவர விருப்பம்.





5 comments :

'பசி'பரமசிவம் said...

மிக்க மகிழ்ச்சி.

'பசி'பரமசிவம் said...

என் பாராட்டுரையை வெளியிட்டுப் பின்னர் நீக்கியிருக்கிறீர்கள். இதுதான் அமுதவன் கற்ற நாகரிகமா?!

Amudhavan said...

'பசி'பரமசிவம் said... என் பாராட்டுரையை வெளியிட்டுப் பின்னர் நீக்கியிருக்கிறீர்கள். இதுதான் அமுதவன் கற்ற நாகரிகமா?!

\\ உங்கள் பாராட்டுரையை நீக்கியிருக்கிறேனா? மன்னிக்கவும். எங்கோ தவறு நடந்திருக்கிறது. கவனிக்கிறேன்.\\

காரிகன் said...

congrats Amudhavan sir. Feeling great to know it.

Amudhavan said...

நன்றி காரிகன்.

Post a Comment